
New Century Book House வாசகர் சங்கத்தின் இதழாக வெளிவரும் 'உங்கள் நூலகம்' சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது.
சிறப்பு இதழின் ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புத்தொழில் தொடர்பில் பல ஆக்கபூர்வமான விடயங்களை பேசுகிறது. வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நன்மைகருதி தமிழக அரசிற்கும் பப்பாசி அமைப்பிற்கும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகவும், கட்டுரையாளராகவும் கலந்துகொள்ளும் முனைவர் இராம.சுந்தரம் அவர்களின் 'மொழியில் எதையும் சொல்ல முடியும்' என்ற தலைப்பில் அமைந்த நேர்காணலுடன் தமிழின் சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் கட்டுரைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.
எஸ்.வி.ராஜதுரை, சுகுமாரன், இன்குலாப், மு.ராமசாமி, தொ.பரமசிவன், பாவண்ணன், பெ.மணியரசன், ச.சுபாஷ், சந்திரபோஸ், தேவ.பேரின்பன், இராசேந்திரசோழன், ஜெயமோகன், பெருமாள் முருகன், தேவதேவன், அ.கா.பெருமாள்,
அ.ராமசாமி, பொ.வேல்சாமி, அ.மங்கை, வீ.அரசு, க.மோகனரங்கன், ச.பாலமுருகன், பா.வீரமணி, இரா.காமராசு, பா.ஆனந்தகுமார், கமலாலயன், உதயை மு.வீரையன், சுதந்திர முத்து, மணிகோ பன்னீர்செல்வம், கோபால்தாசன்,
தமிழ்மகன் ஆகியோரின் கட்டுரைகள், ஆக்கங்கள் இச்சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளன.
120 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பிதழின் விலை In Rs 20.00
2008 புத்தகத்திருவிழா - உங்கள் நூலகம்
Posted by விருபா - Viruba | Filed under 2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி
Comments (0) | 1/14/2008 08:50:00 AM

0 Responses to "2008 புத்தகத்திருவிழா - உங்கள் நூலகம்"
Post a Comment