2008 புத்தகத்திருவிழா - சாளரம் இலக்கிய மலர்

சாளரம் இலக்கிய மலர் -2008

பொன்னி பதிப்பகத்தின் பதிப்பாளர் வைகறை அவர்களை ஆசிரியராகக்கொண்டு சாளரம் இலக்கிய மலர் இரண்டாவது ஆண்டாக 2008 புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழியல் சார்ந்த பல கட்டுரைகளும், அறிவியல் தொடர்பான அறிவுசார் கட்டுரைகளுடனும் சாளரம் இலக்கிய மலர் மலர்ந்துள்ளது.

"புத்தகப் பதிப்புத் துறையின் திசைவழி என்ன?" என்ற ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புச் சூழலில் இன்றைய நிலமையை கூறுகிறது. அரசு நல்லெண்ணத்தில் நாட்டுடமையாக்கிய நூல்கள் பல பதிப்பாளர்களால் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்படுதலால் ஏற்படும் தனித்துவ இழப்பையும் சுட்டிக்காட்டுகிறது.

  • அன்பினுக்கு நிவேதனமாய் (நூல் காணிக்கைகள் பற்றிய குறிப்பு) - பழ.அதியமான்,
  • என்றும் கிழியாது என் பாட்டு - குட்டி ரேவதி
  • நமது பண்பாட்டில் மருத்துவம் - முனைவர் தொ.பரமசிவம்
  • செ குவெரா : மற்றொரு வெற்றி - எஸ்.வி.ராஜதுரை
  • நிழல்களில் கரையும் நிஜங்கள் (திரைப்படத்தில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய பார்வை) - ஓவியா
  • வாட்சன் : தோட்டத்தொழிலாளர்களின் நண்பன் - டி.கே.ரகுநாதன்
  • ஆவிகளும் ஆண்டைகளும் - பாமா
  • காணாமற் பொகும் கடற்குதிரைகள் - பொ.ஐங்கரநேசன்
  • ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் - ந.முருகேசபாண்டியன்
  • மாதவியின் பதினோராடலில் கொடுகொட்டி : கூத்தின் அடித்தளங்களை முன்வைத்து... - முனைவர் த.கனகசபை
  • ஜீவாவின் முதல் நூல் வெளியிட்ட கோவை ஆர்.கிசன் - செந்தலை ந.கவுதமன்
  • சோசலிசம் வேர்பிடித்துவிடாமல் தடுக்கும் முதலாளித்துவம் (வெனிசுலேவாதேர்தலும் : ஊடகப் பொய்களும்) - அமரந்தா
  • குறடு - அழகிய பெரியவன்
  • சிலப்பதிகாரத்தில் அறிவுத்திற மேம்பாடு - பேரா க.பஞ்சாங்கம்
  • மலைத்தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை குறித்த நாட்டார் பாடல்கள் - ஆ.சிவசுப்பிரமணியன்
  • பாரதிதாசன்-ஞானபீடப் பரிசு தொடர்பாக ஒரு பதிவு - கவிஞர் ஈரோடு தமிழன்பன்
  • வள்ளலாரின் மொழிக் கோட்பாடு - ப.சரவணன்
  • தாஸ்தாயேவ்ஸ்கியின் "கரமஸோவ் சகோதரர்கள்" - தமிழில் வண்ணநிலவன்
  • "ஸீ ஷோனகனின் தலையணைப்புத்தகம்" - தமிழாக்கம் தஞ்சாவூர்க் கவிராயர்
  • இருந்துபார் தெரியும் வலி - புதுவை இரத்தினதுரை
  • வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் - கி.பாரத்திபராஜா
  • 'மொழியில் வாழ்தலும்' 'மொழிச் சலவை'யும் - பொதிகைச் சித்தர்
  • மோருக்குச் சோறில்லை - கார்முகில்
  • காடு எரிந்துகொண்டிருக்கிறது - இளம்பிறை
  • மறுமலர்ச்சி இதழ்களின் முன்னோடி : சீர்திருத்தச் செம்மல் சொ.முருகப்பா - ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி
  • ஆழ்கடலில் ஒர் வரலாற்றுத் தேடல் - பேராசிரியர் வி.அ.இளவழகன்
  • வரலாற்றின் குரல்களும் குரல்களின் வரலாறும் - முனைவர் செ.சோ.பிலிப்சுதாகர்
  • நாட்டுப்புற வழக்காற்றியலில் கன்னியாகுமரி மாவட்டம் - அ.கா.பெருமாள்
  • கேரேன் ப்ரெஸ் & அன்டயெ க்ரோக் : இரு தென்னாபிரிக்கப் பெண் கவிஞர்கள் - தமிழில் வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
  • தொல்காப்பியத்தில் மணமும் சாதியும் - சி.அறிவுறுவோன்
  • எது அறிவியல்? - பா.ஸ்ரீகுமார்
  • மனுதர்மமும் தமிழ் அறமும் - ஞானி
  • கண்ட்ரோல் - வே.இராமசாமி
  • "கற்றல் நன்றே" பண்டைத் தமிழகத்தில் கற்றல் என்பது யாது? - மே.து.ராசு குமார்
  • 2007 சில நினைவுகள் - அ.மார்க்ஸ்
  • வடமொழி இலக்கியக் கோட்பாடுகள் - பேராசிரியர் வ.ஜெயதேவன் & கி.காவேரி
  • ஈழம்-மலேசியா : ஈழத்து இலக்கிய சாட்சியம் - கி.பி.அரவிந்தன்
  • கடமை தவறும் ஊடகங்கள் - பைந்தமிழ்
  • மாசேதுங் படைப்புகள் - மயிலை பாலு
  • மற்றும் சில கவிதைகள்....

248 பக்கங்களுடன் A4 அளவுதாளில் உறுதியான கட்டமைப்புடன் வெளிவந்துள்ள சாளரம் இலக்கிய மலரின் விலை ரூ 125.00 ஆகும்

0 Responses to "2008 புத்தகத்திருவிழா - சாளரம் இலக்கிய மலர்"

Post a Comment