tag:blogger.com,1999:blog-184833102024-03-07T23:44:56.531+05:30விருபாதமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டுவிருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.comBlogger151125tag:blogger.com,1999:blog-18483310.post-60728087149205254322024-01-03T04:40:00.008+05:302024-02-19T04:52:44.603+05:30 தமிழ்ப் பாதுகாப்புக் கேடயங்களை நாமேதான் செய்தாகவேண்டும்<p><b>ஈழத்தின் தமிழ்ப் புலமைத்துவச் செயற்பாடுகள் - வரலாறு, பாத்தியதை</b></p><p><span style="white-space: pre;"> </span>தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் தாயகம், தமிழ் எழுத்து தொடர்பிலான ஈழத்தின் புலமைத்துவச் செயற்பாடுகள் என்பது பல வகைகளில் பலரால் காலாதிகாலமாகச் செய்யப்பட்டுவருகின்றன. இப்புலமைத்துவச் செயற்பாடுகளின் உச்சமென்பது கடந்தகாலத்தில் வரலாறு விட்டுச் சென்ற தடயங்களைத் தேடித் தொகுத்து ஆவணப்படுத்தி எதிர்காலத்தில் ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் ஆய்வு மூலங்களாத் தருதலாகும். புலமைத் தளத்தில் ஈழத்தவர்களின் தொகுத்து ஆவணப்படுத்தல் முயற்சி என்பது சைமன் காசிச் செட்டி அவர்களின் ‘தமிழ் புளூராக்’ (Tamil Plutarch) மூலம் தொடங்கிய உயரிய இத்தமிழ்த் தொண்டு இன்றுவரை அறுபடாது தொடர்ந்துவரும் ஒரு பாரம்பரியமாகும். அறிவுசார் புலமைத்துவத் தளத்தில் ஈழத்தவர்களின் இப்பங்களிப்புகள் மிகவும் காத்திரமான முன்முயற்சிகளாகவும், காலங்கடந்தும் ஆய்வுவெளிகளைத் திறந்துவைக்கும் ஆவணங்களாகவும் உள்ளன.</p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>சைமன் காசிச் செட்டியின் தொடர்ச்சியாக ஆணல்ட் சதாசிவம் பிள்ளை பாவலர் சரித்திர தீபகம்(1886) தந்தார், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப் புலவர் சரித்திரம்(1916) படைத்தார், வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களால் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939) நூலும், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்(1967) - மு. கணபதிப்பிள்ளை அவர்களாலும் தொகுத்துத் தரப்பட்டது. இவையாவுமே தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாறுகளினூடாகத் தமிழிலக்கிய வரலாற்றினைக் கூறும் ஆவணங்களாகும். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>தொல்காப்பியம், கலித்தொகை போன்ற தொல்தமிழ் எழுத்துகளைப் பல்வேறு ஓலைச் சுவடிப் பிரதிகளை அலைந்து திரிந்து தேடியெடுத்து ஒப்பிட்டுப் பார்த்து, பாடவேறுபாடுகளைத் தன் ஆராய்ச்சித்திறனால் கண்டறிந்து களைந்து, அச்சுவாகனமேற்றித் தெளிவான பதிப்புகளாகத் தந்த தமிழ்ப் பதிப்புலக முன்னோடி சி. வை. தாமோதரனார் செய்தபணி அறிவுசார் ஆவணப்படுத்தலே.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதானகோசம்(1902) தந்த ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அதுவரை காலமும் வெளிவந்த தமிழ் அகராதிகளில் காணப்படாது விடுபட்ட சொற்களைத் தொகுத்து அச்சொற்களுக்கான இலக்கிய ஆதாரங்களையும் இணைத்துத் தமிழ்ச் சொல்லகராதி(1904) தந்த வைமன் கதிரைவேற்பிள்ளை, முதன்முதலாக தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு ‘தமிழ்மொழி ஒப்பியல் அகராதி’(1938) எனும் பெயரில் தமிழ்ச்சொற்களின் வேர்களைக் கண்டறிந்து தந்த ‘சொற்கலைப் புலவர்’ சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோரும் தொகுத்தலினூடாக ஆவணப்படுத்தலையே செய்துள்ளனர்.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’(1904) என்ற தமிழர்களின் வரலாற்று ஆங்கில நூலைத் தந்த வி. கனகசபைப் பிள்ளை அவர்களால் தமிழர் தொல்வரலாறும், ஆங்கிலத்தில் ஆனந்தக் குமாரசாமி அவர்களால் எழுதப்பட்ட ‘சிவ நடனம்’(1918) போன்ற நூல்களின் மூலமும் அக்காலத்தில் வெளிவந்த பல முன்னணி ஆய்விதழ்களில் அவரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளால் தமிழர் சமூக வாழ்வியல் வரலாறும், விபுலானந்த அடிகளால் எழுதப்பட்ட ‘யாழ் நூல்’ என்ற தமிழிசை ஆராய்ச்சி நூலால் தமிழர்களின் கலைவரலாறும் ஆவணப்படுத்தப்பட்டன. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>தமிழியல் ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா முதன்மையானவர். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அவரது அகராதிகள் தமிழ் அகராதித் துறையில் அவருக்குத் தனித்துவமான இடத்தை பெற்றுத் தந்தன. இதுவும் அடிப்படையில் தொகுத்து ஆவணப்படுத்தல் வகையினவே. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>ஈழத்தவர்களின் முதலாவது புலப்பெயர்வான மலாயா இடப்பெயர்வை மலாயா மான்மியம்(1930) எனும் பெயரில் ச. முத்துத்தம்பி பிள்ளை அவர்களும், அதன் தொடர்ச்சியாக ‘மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்களின் நூறு ஆண்டுகள்’ என்ற வரலாற்று ஆங்கில நூலை மலேசியாவில் வாழ்ந்த இலங்கையரான எஸ். துரைராஜசிங்கம் அவர்களும் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளனர்.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>கலாயோகி ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்களையெல்லாம் முதன்முதல் தேடித் தொகுத்துப் பட்டியலாக்கம் செய்து ஆவணப்படுத்தியவரும் மலேசிய எஸ். துரைராஜசிங்கம் அவர்களே.<span style="white-space: pre;"> </span> </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகள், கவிதைகள், சொற்பொழிவுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பவற்றின் தொகுப்பாவணங்களாக விபுலானந்தத் தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் நூல்கள் மட்டக்களப்பு அருள் செல்வநாயகம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு அகராதி(1997) - எஸ். ஆறுமுகம், மேன்மக்கள் சரித்திரம்(1930) - சு. இரத்தினசாமி ஐயர், உத்தியோகர் லக்ஷணக் கும்மி(1936) போன்ற தொகுப்பு ஆவண நூல்களும் ஈழத்தில் வெளியிடப்பட்டுள்ளன. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>தமிழ் ஆராய்ச்சிக்குத் துணைபுரியும் நோக்குநூல்களையும், ஆதார நூல்களையும், ஆராய்ச்சிக் களங்களையும் உருவாக்கிய ஈழத்தறிஞர்களின் ஆவணப்படுத்தல் முயற்சிகள் யாவும் அடிப்படையில் தமிழின் இருப்பை வளப்படுத்தும், வலுப்படுத்தும் அறிவுசார் ஆய்வுச் செயல்களாகும். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இவை யாவற்றுக்கும் மேலான சிகரமாகத் தமிழ்மொழியின் ஆராய்ச்சித் தலைமைப்பீடமெனக் கருதக்கூடிய சிந்தனைச் செயலணியை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என உருவாக்கித் தந்தவர் எங்கள் தனிநாயக அடிகளாவார். 1951ஆம் ஆண்டில் அடிகளார் முதன்முதலாக வெளிப்படுத்திய எண்ணக்கரு 1964 ஆண்டில் செயல்வடிவம் பெற்றது. 1952-1964 இடைப்பட்ட காலத்தில் அடிகளாரால் நடாத்தப்பட்ட தமிழ்க் கல்ச்சர் ஆய்விதழ் மூலம் அடிகளார் பெற்றுக்கொண்ட உலகளாவிய ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு இதனைச் சாத்தியப்படுத்தியது. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>கடந்த ஐநூறு ஆண்டுகள் காலப்பரப்பில் முறையான தமிழரசு இல்லாது, அதிகாரம் இல்லாது, சாதாரண மக்களால் காப்பாற்றப்பட்டு, இன்றைய கணிணி யுகத்திலும் தமிழ்மொழி உயிர்ப்புடன் தொடர்கிறது. தமிழ்மொழி தொடர்பில் உருவான மிகச் சிறந்த சிந்தனையாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தையும் அதன் உலகளாவிய ஆராய்ச்சி மாநாடுகளையும் கொள்ளலாம். பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்களையும் ஒரே குடையின்கீழ் குறித்த கால இடைவெளியில் நடாத்தப்படும் மாநாடுகளில் நேரடியாகச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான களமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை உருவாக்கியதென்பது தமிழ் மொழிக்குக் கிடைத்த பெரும் நற்பேறு. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைப் பார்த்து மற்றைய பல இந்திய மொழிகளிலும் உலக மாநாடுகள் நடாத்தப்படும் மரபு தொடங்கியமை, அடிகளார் வெளிப்படுத்தியது மிகச் சிறந்த உன்னத சிந்தனை என்பதை உறுதிப்படுத்தும் பெரும் சான்று.</span></p><p><b>செல்வராஜா அவர்களின் தொகுப்பு - ஆவணக் கேடயம்</b></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இவ்வாறான ஒரு பெரும் சிந்தனைச் செயல்வடிவின் தொடர்நிகழ்வாக நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என்று பாரிஸ் மாநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான சர்ச்சைகள், செய்திகள், இறுதிநாள் அவலங்கள், விசாரணை அறிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, மாநாட்டின் பின்னரான சூழ்நிலை போன்றவற்றின் தொடர்பில் அச்சு ஊடகத்தில் வெளியானவற்றை தன்னுடைய தளாராத தேடலின்மூலம் ஒரே இடமாகத் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார் ஈழத்து ஆவணப்படுத்தல் முன்னோடியான நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்கள். பகீரதப் பிரயத்தனமான இம்மாபெரும் வேலையை அவரைத் தவிர வேறெவராலும் சிந்தித்துக்கூடப் பார்க்கமுடியாதென்பது என் கணிப்பு. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>என். செல்வராஜா அவர்களின் ‘‘நினைவுகளே எங்கள் கேடயம்’’ என்ற இத்தொகுப்பு நூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, எதிர்காலத்தில் தமிழ் ஆய்வு செய்யமுற்படும் ஒரு ஆராய்ச்சி மாணவனுக்கு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான வரலாற்றினை அறிந்துகொள்ளமுடியும். அம்மாணவனின் சிந்திக்கும், அலசும் ஆற்றலிற்கேற்ப புதியதொரு மீள்வாசிப்பினையும் கண்டடையலாம். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>எந்தவொரு நிறுவனத்தின் நிதி ஆதரவுமின்றித் தனியொருவராக ஈழத்துத் தமிழ் நூல்களை நூல்தேட்டம் தொகுப்பு வரிசைகளாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்திவரும் என். செல்வராஜா அவர்களை நாம் வாழும் காலத்து சைமன் காசிச்செட்டியாகவோ அல்லது சி. வை. தாமோதரனாராகவோதான் நான் உணர்கிறேன் என்பது மிகைப்படுத்தல் அல்ல உளப்பூர்வமான வெளிப்பாடு.</span></p><p></p><blockquote>‘‘நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அதன் ஆய்வுகளுக்காக வரலாற்றில் இடம்பெறுவதைவிட ஈழத்தமிழினத்தின் எழுச்சிக்கு வித்திட்ட ஒரு நிகழ்வாகவே வரலாற்றில் இடம்பெற்றுள்ளதை நான் பார்க்கின்றேன்.’’ </blockquote><p></p><p>என்று தொகுப்பாசிரியர் என். செல்வராஜா அவர்கள் நூலின் சரவைப் பிரதியுடன் அனுப்பிவைத்த வழிகாட்டற் குறிப்பு உணர்தும் திசைவழியே நானும் செல்கிறேன்.</p><p><b>தனிநாயக அடிகளாரின் சிந்தனையும், தமிழ் கல்ச்சர் ஆய்விதழும்</b></p><p>நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுப் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் கராணங்களைக் கண்டறிவதற்கு நாம் சில ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்துச் செல்லவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றம் எதன் தொடர்ச்சி என்பதை அறியவேண்டும்? எந்த அடிப்படை எண்ணக்கருலிருந்து ஏற்பட்டதென்பதனை அறியவேண்டும்? இதற்கு நாம் 1951ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற நான்காம் தமிழ்விழாவிலே தனிநாயக அடிகளார் ஆற்றிய உரையைப் பார்க்கவேண்டும்,<span style="white-space: pre;"> </span></p><blockquote><p>“இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின். Discovery of India என்றும், History of Indian Literature என்றும் பலபடப் புனைந்து வெளிவரும் ஏடுகளை விரித்துப் பார்மின். மாக்ஸ் முல்லர் (Max Müller), வின்றானிட்ஸ்(Winternitz, M.) போன்றவர் முதலாகப் பலரும், வடமொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியத்தைப்பற்றியோ, திராவிட நாகரிகத்தைப்பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும், காணக்கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம், திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள், இவற்றையே அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும், பல்லாண்டுகளாக, நடுவுநிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஓழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது. அங்ஙனம் எடுத்துக் கூறுதற்கும், பெரிதும் மனத்துணிவு வேண்டற்பாலதாயிற்று. தமிழராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலேனும், நம் தமிழைப் பற்றிய உண்மைகளை இதுகாறும் கூறினோம் அல்லேம். </p><p>“மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்</p><p>பொய்போ லும்மே பொய்போ லும்மே.” </p><p>“பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்</p><p>மெய்போ லும்மே மெய்போ லும்மே.” </p><p>ஆதலின், உலகம் நம்மை உணராமலும், நாமே நம்மையுணராமலும், பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர் எனக்கொண்டு, இங்கு உயிர்வாழ்ந்து வந்துள்ளோம். இன்று இத்தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழ் விழா, உலகில் தமிழ் நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலை நாட்டும் புதியதோர் இயக்கத்தை உண்டாக்க வல்லதாயின், அது தமிழ் மக்களுக்கே பெருமை தருதலால், நாம் அனைவரும் நமக்கே நன்மை பல பயக்கும் நற்றொண்டைச் செய்தோமாவோம்.’’ </p></blockquote><p></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>- தமிழ்த்தூது திருத்திய மூன்றாம் பதிப்பு (1961) பக்கம் 28, 29</span></p><p> <span style="white-space: pre;"> </span>தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநாட்டுவற்காகப் புதியதோர் இயக்கம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், தமிழ்மொழியைக் காக்கும் ஒரு செயலாக நம் தமிழைப் பற்றிய உண்மைகளை் நாமே பிறமொழிகளில் எடுத்துக்கூறவும் வேண்டுமென்பதையும் அடிகளார் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதனைச் செயற்படுத்தவும் முனைந்தார். ஆங்கிலத்தில் தமிழ் கல்ச்சர் (Tamil Culture) என்ற ஆய்விதழை வெளியிடத் தொடங்கினார், இது தமிழ்மொழியைப் பாதுகாக்கும் ஒரு காவற்செயல். உலகத்தின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் தமிழ் தொடர்பிலான உண்மைகளை வெளியிடுவதன் மூலம் தமிழியல் உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள ஆய்வாளர்களைச் சென்றடைய வைத்தார். 1950 இற்குப் பிற்பட்ட உடனடி இருபதாண்டுகளில் மேலைத்தேய நாடுகளில் அதிகளவு ஆய்வாளர்கள் தமிழ்மொழியின்பால் ஈர்க்கப்பட்டமைக்கு அடிகளார் மேற்கொண்ட உலகப் பயணங்களும், அடிகளார் தமிழ்த் தூதுவராகச் செயற்பட்டமையுமே காரணமாகும்.</p><p><span style="white-space: pre;"> </span>தனிமனிதனாகத் தமிழ்மொழி காக்கும் அவரது செயலிற்கு வேண்டிய அறிவுத் திறனும் மொழித்திறனும் அடிகளாரிடத்தே இருந்தாலும், அதனைச் செயல்வடிவமாக்கும் வேளையில் அதற்கு வேண்டிய நிதி வளமும் ஆளணி வளமும் அவருக்குத் தேவைப்பட்டன. </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்தியாவின் தென்பகுதிக்கான பிராந்திய மேலாளராக வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆ. சுப்பையா அவர்கள் வள்ளலாகவும், அடிகளாரின் வலதுகரமாகவும் செயற்பட்டு உதவினார். இவரது வீட்டு முகவரியே தொடக்கத்தில் தனிநாயக அடிகளாரின் சென்னைத் தொடர்பு முகவரியாகவும், பின்னர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முகவரியாக, அலுவலகமாக 1981 ஆம் ஆண்டுவரை இயங்கியுள்ளது. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்தியாவிலிருந்து தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், வ. ஐ. சுப்பிரமணியம், இரா. பி. சேதுப்பிள்ளை, ஆ.சிதம்பரநாத செட்டியார், கா. கா. பிள்ளை, பம்பாய் பி. ஜோசப், பூனே சுனித் குமார் சட்டர்ஜி, தூத்துக்குடி பவுல் நாடார் போன்ற சான்றோர்கள் அடிகளாரின் தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் வளர்ச்சிக்குப் பக்கபலமாகத் துணைநின்று பங்களித்தனர்.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>Jean Filliozat, Arno Lehmann, Kamil Zvelebil, John Ralston Marr, Herbert Arthur Popley, Leopold S. J. Bazou, Henry J. Heras, M. Andronov, V. A. Makarenko, Murray Barnson Emeneau, Jr. Edgar. C. Knowlton போன்ற ஐயோப்பிய, ஸ்கன்டிநேவிய, ரஸ்ய மற்றும் அமெரிக்க ஆய்வளர்களும் தங்கள் ஆய்வுகளைத் தமிழ் கல்ச்சர் ஆய்விதழினூடாக வெளியிட்டு அடிகளாரின் சிந்தனைக்கு வலுச்சேர்த்தனர்.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்த வகையில் இலங்கையின் சி. அரசரட்ணம், பண்டிதர் கா. பொ. ரத்தினம், எச். டபிள்யூ. தம்பையா, ஆ. சதாசிவம், ஏ. ஜே. வில்சன், சு. வித்தியானந்தன், வை. கா. சிவப்பிரகாசம், சா. ஜெ. குணசேகரம், தாவீது அடிகளார், பீ. பி. ஜெ. ஹேவவாசம் போன்றோர் தொடர்ந்து பங்களித்திருந்தனர்.</span></p><p><b>தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் தொடர்ச்சியே உலகத் தமிழாராய்ச்சி மன்றம்</b> </p><p><span style="white-space: pre;"> </span>உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்துதல் தொடர்பில் சென்னையிலுள்ள தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகத்தினூடாக தமிழ்நாட்டு அரசுடன் அடிகளார் மேற்கொண்ட உரையாடல் முயற்சிகள் 1962ம் ஆண்டில் மாநாட்டினை நடத்துவதற்கான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லவில்லை. தொடர்ந்து 1964ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாநாட்டினை நடாத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. அடிகளாரின் இம்முயற்சிகளுக்குச் சென்னைத் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம் தொடர்ச்சியாகத் துணைநின்றது எனினும் தமிழ்நாட்டில் மாநாடு நடாத்தும் சூழ்நிலை எட்டப்பெறவில்லை. </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை மலேசியாவில் நடாத்துதல் என்பது அடிகளாரினால் மட்டும் முன்முடிவோடு தீர்மானிக்கப்பட்ட ஒன்றல்ல, அவரது பெருவிருப்பென்பது தமிழ்நாடுதான். உலகத் தமிழாராய்சி மாநாடு நடாத்தப்படுவதற்கு மிகவும் பொருத்தமான அச்சாணியாக தமிழ்நாடு இருக்குமென்பது அடிகளார் எண்ணமாக இருந்தாலும், இம்மாநாட்டினை தமிழ்நாட்டில் நடாத்த என்று 1961 முதல் 1964 வரையான நான்காண்டுகள் அடிகளார் அலைந்துதிரிந்து எடுத்த முயற்சிகள் பலன்தரவில்லை. தமிழ்நாட்டில் அதற்கான சூழ்நிலை கூடிவராத நிலையிலேயே முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடாத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இரண்டாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுப் பழமையுடைய தமிழ்மொழியின் உண்மைகளை, தனிநாயக அடிகளாரின் சிந்தனையில் உதித்த தமிழ் கல்ச்சர் ஆய்விதழினூடாக வெளியிடத் தொடங்கிய தனிமனித முயற்சி, அதன் அடுத்த கட்டமாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டிய பக்குவத்தினை அடைகிறது. ஆய்விதழில் பங்களித்த ஆய்வாளர்கள் பலரும், அவர்களைப் பிரதிநிதிப்படுத்திய ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், போன்ற நிறுவனங்களும், தமிழ்நாடு அரசு நிறுவனங்களும் அடிகளாருக்குத் துணைநின்ற காலச்சூழ்நிலையான 1964ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்சி மன்றம் தொடங்கப்பட்டது. முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டில் மலேசியாவில் இடம்பெறுமெனத் தீர்மானிக்கப்பட்டது.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதற்குத் துணைநிற்கும் நிலையில் சில நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தேசியக் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>ஆங்கிலத்தில் தமிழ் கல்ச்சர் ஆய்விதழ் வெளியிடப்பட்டதைப் போன்றே, தமிழாராய்சி மாநாடுகளும் ஆங்கிலத்திலே நடைபெறத் தொடங்கின. இதன் அடிப்படைக் காரணம், உலகிற்குத் தமிழைக் கொண்டுசெல்லதலே, உள்ளூரில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுதல் அல்ல. அதேபோன்று அடிகளாரின் ஆய்விதழின் வெளியீட்டிற்குக் கடந்த பன்னிரு ஆண்டுகளாகப் பங்களித்துத் துணைநின்றவர்களே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாகக் குழுவிலும், தேசியக் கிளைகளிலும் பங்கெடுப்பதென்பதுமான நிலை காணப்பட்டது. முதற்கட்டப் பயணத்தில் துணைவந்தோர் இரண்டாம்கட்டத்திலும் உடன் பயணிப்பதென்பது இயல்பானதே. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பிலான பரப்புரைக்காக தனிநாயகம் அடிகளார் இலங்கை வந்தபோது, கொழும்பிலுள்ள கறுவாக்காடு (cinnamon garden) பகுதியில் வாழ்ந்துவந்த நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா அவர்களின் வீட்டிலேயே ஆலோசனைக் கூட்டத்தினைக் கூட்டி ஆலோசித்துள்ளார். இலங்கை இருதேசங்களின் கூட்டு என்பதைச் சட்டரீதியாகப் பிரித்துக்காட்டும் ஒல்லாந்தர் காலத்துத் தேசவழமைச் சட்டம் தொடர்பில், தமிழ் கல்ச்சர் ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளுதல் அவசியம். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>11. 11. 1965 அன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பில் விளக்கம் தரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை தனிநாயக அடிகளாரினால் தோற்றுவிக்கப்பட்டது. </span></p><p><b>இலங்கைக்கிளையும் நான்காவது தமிழாராய்சி மாநாடும்</b></p><p><span style="white-space: pre;"> </span>இலங்கைக்கிளையின் தலைவராக நீதிபதி எச். டபிள்யூ. தம்பையாவும் உறுப்பினர்களாக பே,ரா. வி. செல்வநாயகம், கலாநிதி ஆ. சதாசிவம், பேரா. ஏ. டபிள்யூ. மயில்வாகனம், கலாநிதி ஏ. ஜே. வில்சன், பேரா. க. குலரத்தினம், திரு. கே. சி. தங்கராஜா, திரு. ச. அம்பிகைபாகன், திரு. கே. செல்வநாதன் போன்றோரும் பொறுப்பேற்றனர். </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>1970 களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஶ்ரீமாவோ அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களாக இருந்த நீதிபதி எச். டபிள்யூ. தம்பையா, கே. சி. தங்கராஜா போன்றவர்களின் ஓரிரு பிரமுகர்த்தனச் செயல்களும், ஶ்ரீமாவோ அரசின் தமிழ் தொடர்பான விடயங்களுக்குப் ஆலோசனைப் பொறுப்பாக இருந்த செல்லையா குமாரசூரியர் அவர்களின் செல்லப்பிள்ளையான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாக உறுப்பினர்களின் சமிக்கைகளும் ஶ்ரீமாவோ அரசாங்கத்தை தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நாடத்திடவைக்கலாமே என்ற நிலைப்பாட்டினை எடுப்பதற்குத் துணைபுரிந்துள்ளன. இவ்விரு தரப்பினரதும் அரச ஆதரவு மனப்பாங்கு, ஶ்ரீமாவோ அரச இயந்திரம் தமிழர்களுக்கும் யாழ்ப்பாண மாநாட்டிற்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுப்பதற்குக் காரணமாகும். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>ஶ்ரீமாவோ அரசும் மூன்று நிபந்தனைகளுடன், மாநாட்டிற்கான செலவுகளை ஏற்றும், கொழும்பில் அக்காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்த பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தினைக் கட்டணமின்றித் தருவதற்கும் முன்வந்தது. இதன் மறைநிரலில் இலங்கையின் வடபகுதி தமிழரின் மரபுரீதியான தாயகம் என்பதை நீர்த்துப்போக வைக்கவும், இலங்கை முழுவதற்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதுமான அரச சூழ்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்ட தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் புதிய தலைவராகப் பெறுப்பேற்றிருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் முற்றிலுமாக மறுத்துவிட்டார். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சிங்கள எழுத்தாளர்களையும் இணைத்து இயங்கிய அமைப்பு அல்ல, அமைப்பின் பெயர் அவ்வாறு இருந்தாலும் அது முழுமையாகத் தமிழர்களால் நிரப்பப்பட்ட அமைப்பாகவே இருந்தது. க. ககைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரின் முழுமையான நிர்வாக வழிகாட்டலில் இயங்கிய அமைப்பு என்றும் கூறலாம். தமிழ் இனவுணர்வு இல்லாத இச்சிறுகுழாத்தினர் தங்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாகவும் சிங்கள பௌத்த அரசிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் காழ்ப்புணர்வுடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு எதிரான கருத்துகளை அரச பத்திரிகைகளினூடாகப் பரப்பினர். மாநாட்டின் இறுதிநாள் அவலத்தில் தமிழர்கள் தந்திரமாகக் கொல்லப்பட்ட பின்னரும் இடதுசாரி ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட ‘‘மல்லிகை’’ போன்ற இதழ்களில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் நிர்வாகக்குறைகளால் இடம்பெற்றதெனவும் இன்ன பிற அற்ப காரணங்களையும் பெரிதுபடுத்திய எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவிலே நடைபெற்றபோது, </span>யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இடதுசாரி இதழ் வசந்தம் 1966 மார்ச் 10 அன்று வெளியான மலர் 1 - இதழ் 7 இல் ‘ஆங்கிலத்தில் தமிழ் ஆராய்ச்சி!’ என்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. </p><p></p><blockquote>‘‘தமிழ் ஆராய்ச்சி! எங்கே, ஈழத் தமிழகத்திலா? இல்லை. சங்கம் வளர்த்த தமிழ் நாட்டிலா? இல்லை. மலேசியாவில், ஆங்கிலேயர் ஆதிக்க நாட்டில்.’’ </blockquote><p></p><p>என்று குற்றம் கூறிய அதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் குழாத்தினரேதான் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஶ்ரீமாவோ அரசு விரும்பிவாறு கொழும்பில் நடாத்தவேண்டும் என்று போர்க்கொடி பிடித்தவர்கள். எட்டு ஆண்டு கால இடைவெளியில் தமிழ் இடதுசாரிகளது இரட்டைவேடம் அம்பலப்பட்டது. </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>சிங்களமொழி தோற்றம் பெறுவற்கு முன்பிருந்தே தமிழ் மண்ணாக அறியப்பட்டிருந்த ஈழத்தினைச் ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று சனாதனி பாரதி வெளிப்படுத்தியதன் உள்நோக்கமும், யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தாமல் சிங்கள மண்ணான கொழும்பிற்றான் நடத்த வேணும் என்று அடம்பிடித்த மார்க்சிய லேபிள்வாதிகளான க. கைலாசபதி கா. சிவத்தம்பி போன்றோரின் கள்ளமும் ஒன்றுதான், இலங்கைத் தீவில் தமிழருக்கு மரபுரீதியான நிலப்பரப்பு - தாயகமண் உரிமைகோரல் எதுவும் இல்லையென்பதைக் கூறும் இருவேறு வடிவங்கள்.</span></p><p></p><blockquote>‘‘தமிழ் ஆராய்ச்சியை எந்த மொழியில் செய்யப் போகிறார்கள்? தமிழிலா? இல்லை; ஆங்கிலத்தில். இதற்கு எத்தனையோ சமாதானங்கள் கூறப்படுகின்றன. அவை எல்லாமே நகைப்புக்குரியன. ஒரு மொழியைப் பற்றிய ஆராய்ச்சி இன்னொரு மொழியில் நடாத்தப்படுவது, உலகில் இதுவே முதலாவதாயிருக்கலாம்.’’</blockquote><p></p><p>என்று அதே ஆசிரியர் தலையங்கத்தில் விசனம் தெரிவித்த வசந்தம் இதழ், ஏன் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோர் இங்கிலாந்து சென்று, ஆங்கிலமொழியில் தமிழாய்வு செய்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றனர், தமிழ் நாட்டில், தமிழ் மொழியில் ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கலாமே? என்று கேட்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>எதேச்சதிகாரத் துணையுடன் பெரும்பான்மை அரசினால் அல்லது மக்களால் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து ஏவப்படும் அடக்குமுறை அட்டூழியங்களில் இருந்து சிறுபான்மையினரைக் காப்பாற்றும் ஒரு கேடயமாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மற்றும் அவர்களின் நலனிற்குத் துணைபுரியும் ஒரு சித்தாந்தமாக மார்க்சியம் உலகெங்கும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>தமிழ் மக்களின் மொழி உரிமையை மறுத்து சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டுவந்தமை, காலிமுகத் திடலில் தமிழ்மொழி உரிமைக்காக அமைதி வழியில் போராடிய தமிழர்களைச் சிங்களக் காடையரையும் காவற்துறையையும் கொண்டு தாக்கி விரட்டியிருந்ததமை போன்ற காரணங்களால் சிங்கள அரசிற்குத் தமிழ்மொழி தொடர்பிலான உலக மாநாட்டினைக் கொழும்பிற்றான் நடாத்தவேண்டும் என்று கேட்பதற்கான அல்லது கட்டளையிடுவதற்கான தார்மீக உரிமை இருக்கவில்லை. இவ்வாறான எதேச்சதிகார சிங்கள அரசிற்குத் துணைநின்று, சிறுபான்மையினரான தமிழர்களின் மொழி உரிமையையும் தாயக உரிமையையும் ஒருசேர மறுத்துத் தங்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காகச் செயலாற்றியவரான க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களை மார்க்சியர்களாகக் கூறிக்கொள்வதே அருவருப்பான செயலாகும். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்நூலில் 92ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘Jaffna International Tamil Research Conference of 1974’ என்ற தலைப்பிலான கட்டுரையில் கட்டுரையாசிரியர் சச்சி ஶ்ரீகாந்தா அவர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரை sycophants என்ற மிகப் பொருத்தமான சொல்லின் மூலம் சுட்டியிருப்பது ஒரு நேர்மையான செயலே.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>‘சு. வி. யின் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு: நினைவலைகள்’ என்ற நுட்பமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள கலாநிதி பொன். பூலோகசிங்கம் அவர்களின் கட்டுரையும் மிகத் தெளிவாக நடந்தவற்றைக் கூறும் மிக முக்கிய ஆவணமாகும். கலாநிதி பொன். பூலோகசிங்கம் அவர்கள் மாநாட்டுக்குழுவில் கல்விக்குழுவின் செயலாளர்களில் ஒருவராகக் கடமையாற்றியவர், இலங்கையில் பல்கலைக்கழகப் புலமையாளர்களில் அறிவியல்ரீதியில் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களில் முதன்மையானவர். இலங்கைக் கிளையின் உள்ளக அமர்வுகளில் கலந்துகொண்டவர் என்ற ரீதியில் அவரது கட்டுரையின் மூலமே என் ஐயங்கள் பல தெளிவு பெற்றன.</span></p><p><b>யாழ். மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பில்</b></p><p><span style="white-space: pre;"> </span>நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் இந்நூலில் நான்கு வெவ்வேறு நபர்கள் தயாரித்த பட்டியலும் வெவ்வேறு எண்ணிக்கைகளும் காணப்படுகிறது. </p><p></p><ol style="text-align: left;"><li>திரு. சச்சி ஶ்ரீகாந்தா அவர்களது கட்டுரையில் காணப்படும் தகவல் ஆங்கிலத்தில் 71 கட்டுரைகள் + தமிழில் 40 கட்டுரைகள் = 111 (பக். 94)</li><li>மாநாட்டு மலர்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் என்ற கட்டுரையில் முதலாம் ஆய்வுத் தொகுதியில் 30 தமிழ்க் கட்டுரைகள்(பக். 96-100). நினைவு மலரில் 44 கட்டுரைகள்</li><li>118 Articles presented by 97 Participants - Source : Index of Articles from the Conference Seminars of Tamil Studies of legitimate IATR - Compiled by Viruba Kumaresan(பக். 101)</li><li>நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு : அறிக்கை - பேராசிரியர் சு. வித்தியானந்தன் - 115 ஆய்வுக் கட்டுரைகள் (பக். 107)</li></ol><p></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இவ்வாறு நான்கு வெவ்வேறான எண்ணிக்கை என்பது குழப்பத்திற்குரியதே, அதனைத் தீர்த்து வைக்கும் கடமையும் எனதாகிறது. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>யாழ்ப்பாண மாநாடு மற்றைய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டது, மாநாடு அமைதியாக மனநிறைவுடன் முடிவடையவில்லை. மற்றைய எல்லா மாநாடுகளுக்கும் அரசு ஒன்றின் ஆதரவும் நிதி நல்கையும் கிடைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு, உள்ளூர் அரச அதிகாரிகள், அரச அடிவருடிகள் போன்றோரின் எதேச்சதிகார எதிர்ப்பிற்கு மத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கான செலவு மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது, ஆதலினால் போதிய கையிருப்பு இருந்தது என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாது. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>1977 ஆண்டில் ஆய்வுத் தொகுதியின் முதலாம் பகுதி 30 தமிழ்க் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. 1980 செப்டம்பரில் ஆய்வுத் தொகுதியின் இரண்டாம் பகுதி 23 ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. மாநாடு அவலத்தில் முடிந்த காரணத்தினாலும் தொடர்ந்த அரச நெருக்கடிகளினாலும், பேராசிரியர் சு. வித்தியானந்தன் சந்தித்த அவலங்களாலும் மாநாட்டு மீதமுள்ள கட்டுரைகளை ஆய்வுத் தொகுதிகளாகத் தொகுப்பதிலும் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மாநாடு நடைபெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பின் ஆய்வுத் தொகுதியின் வெளியீட்டிற்கான நிதியை யாரிடம் கேட்பது, பேராசிரியர் சு. வித்தியானந்தன் கையறு நிலையடைகிறார். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>முதலிரு தொகுதிகளையும் அச்சிட்டுத் தந்த சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்தில் மீதமுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பாதி அச்சிடப்பட்ட நிலையில் தேக்கமடைகின்றன. திருமகள் அழுத்தகம் வேறொரு உரிமையாளரின் கைக்கு மாறுகிறது. அச்சிடப்பட்ட தாள்கள் சாக்கு மூட்டைகளில் தேடுவாரற்றுக் கிடந்து சிதிலமடைகின்றன. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் முதலாமிரண்டாம் ஆய்வுத் தொகுதிகளில் குறிப்பிட்டுள்ளபடி 115 ஆய்வுக் கட்டுரைகள் என்பதே சரியான எண்ணிக்கையாகும், இதில் வெளியிடப்பட்டவை போக 115 - (30 + 23) = 62 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை. இரண்டு றோணியோத் தொகுப்புகளைத் தங்கள் ஆசிரியர் நீண்ட நாட்களாக வைத்திருந்தார் என்று பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மாணவர்கள் தகவல் தெரிவித்தாலும், அவை இன்றுவரை கிடைத்தில. அவரது நூற்சேகரம் எங்கு கைவிடப்பட்டது அல்லது சென்றடைந்தது என்ற தகவலைச் சொல்லுவதற்கு ஒருவரும் எனக்குக் கிடைக்கவில்லை. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span> சச்சி ஶ்ரீகாந்தா அவர்களது கணக்கின்படி 111 ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகளையும், கட்டுரையாசிரியர்களின் பெயர்களையும் அவர் 1981ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான நூலகத்திலிருந்த கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டுத் தொகுத்துள்ளதை <a href="https://sangam.org/2011/08/Professor_Sivathamby.php?uid=4425">https://sangam.org/2011/08/Professor_Sivathamby.php?uid=4425</a> என்ற இணைய முகவரியில் காணப்படும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சச்சி ஶ்ரீகாந்தா தமிழ்த்துறை மாணவரல்லர், விஞ்ஞானத்துறைப் பட்டதாரி தமிழ் இனத்தின் வரலாற்றுப் பக்கங்களில் விடுபட்டவற்றை அவர் தேடித் தொகுத்துள்ளமை பாராட்டுக்குரியதே.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>பேராதனைப் பல்கலைக்கழகமும் அதன் பிரதான நூலகமும் இன்னமும் உள்ளன. 1981 - 2023 இடைப்பட்ட இக்காலத்தில் பேராதனைப் பல்கலையின் தமிழ்த்துறையில் எத்தனையோ விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும், நூலகர்களும் பணியாற்றியுள்ளனர், ஓய்வுபெற்றும் உள்ளனர். இவர்களில் ஒருவரேனும் வரலாற்றில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாநாட்டின் மீதமுள்ள வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரைகளைப் பார்வையிட்டு எழுதியுள்ளதாகவோ, தேடித் தொகுத்து வெளியிட முற்பட்டதாகவோ தகவல்களில்லை. இன உணர்வும் நூலக உணர்வும் இல்லாதவர்களாக, விமானச்சீட்டுக் கொடுத்தால் பறந்து பறந்துசென்று போலி மாநாடுகளில் கட்டுரை வழங்கிக் கலந்துகொள்வதால் என்னதான் பெருமையோ. என்ன ஒரு அவலம்! </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>நான் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுத் தொகுதிகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் சேகரம் செய்யத் தொடங்கிய 2010 ஆண்டில் சென்னையில் என் கைக்கு முதன்முதலாகக் கிடைத்த ஆய்வுத் தொகுதியென்பது, 1980 செப்டம்பரில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆய்வுத் தொகுதியின் இரண்டாம் தொகுதியே. நண்பர் கி. அ. சச்சிதானந்தம் அவர்கள் தன் சேகரத்திலிருந்த அத்தொகுதியை எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். சில மாதங்களின் பின்னர் முதற் தொகுதியின் உள்ளடக்க விவரப் பக்கத்தினை நண்பரொருவர் மின்-அஞ்சலில் அனுப்பிவைத்திருந்தார். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இவற்றைக்கொண்டு எனது தரவுதளத்தில் 53 ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு, ஆய்வாளர், கட்டுரை வகைப்பாடு, பக்கம் போன்ற விபரங்களை உள்ளீடு செய்தபின் மீதமுள்ள 62 கட்டுரைகளை உள்ளடக்கிய மூன்றாம் தொகுதியைத் தேட முற்பட்டேன். இரண்டு ஆண்டுகளின் பின்னர் மூன்றாவது தொகுதியென்று ஒன்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்படவில்லை என்ற ஆணித்தரமான செய்தி கிடைக்கப்பெற்றேன். இதற்கிடையில் வேறுவழிகளில் ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகளையாவது தேடலாமெனத் தொடங்கியபோது, லண்டன் முரசு இதழில் வெளியான கட்டுரைத் தலைப்புகளையும், தமிழ்நேசன் இணையதளத்தில் காணப்பட்ட கட்டுரைத் தலைப்புகளையும், சச்சி ஶ்ரீகாந்தா அவர்களின் பட்டியலில் காணப்பட்ட கட்டுரைத் தலைப்புகளையும் சேர்த்து வைத்துத் தொகுப்பினைச் செய்திருந்தேன். இதன் காரணமாகவே எண்ணிக்கை 118 என எட்டப்பட்டது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் முடிவே இறுதியானது. அவர் எந்த 115 கட்டுரைகளைத் தெரிவுசெய்து வைத்திருந்தார் என்ற பட்டியல் கிடைக்கும்வேளையில் அதனையே நானும் கடைப்பிடிப்பேன். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காவேதவி ஆலயத்தின் சொத்தாக மாறிய நாட்களில், அச்சக நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்த என்று சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் அவரது தனிப்பட்ட உதவியாளரான திரு. கா. சிவபாலன் அவர்கள் திருமகள் அழுத்தகத்திற்கு அனுப்பட்டார். தமிழின் நல்லூழாக அங்குள்ள சாக்கு மூட்டைகளில் தேடுவாரற்றிருந்த மீதமுள்ள கட்டுரைகள் அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த தாள்களைக் கண்டெடுத்த சிவபாலன் அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்திருந்து, தனது சொந்த செலவில் 15 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதியை ‘Papers Presented at the Fourth international Conference Seminar of Tamil Studies’ என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்நூலிற்கு அன்றைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், வருகைதரு தகைசால் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் முன்னீடுகளைக் கொடுத்துள்ளார்கள். பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தனதுரையில் 115 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். அவர் ஆராய்ச்சியாளராகத் தன் கடமைகளைச் சரிவரச் செய்யாதிருந்துள்ளார் என்பதைச் சுட்டும் ஆதாரங்கள் அவருரையில் காணப்படுகின்றன. </span></p><p>சென்னையைச் சேர்ந்த என். முருகேசமுதலியார் அவர்கள் எழுதிய ‘A Critique of Nhat-cintanai : Thought and Style of a Modern Tamil Saint’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை ஏற்கனவே பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட இரண்டாவது தொகுதியில் இடம்பெற்றுவிட்டது. இக்கட்டுரை மீண்டும் திரு. கா. சிவபாலன் அவர்களின் தொகுப்பில் அரைகுறையாக இடம்பெறுகிறது. இதனைத் தவிர்திருக்கவேண்டிய தமிழ்க் கடமை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுடையதே, சரவைப் பிரதியைப் பார்வையிட்டவர், தவறுகளைத் திருத்துவதற்கு முற்படவில்லை. திரு. கா. சிவபாலன் அவர்கள் தவவாழ்க்கை வாழ்ந்த ஆன்மிகவாதி, ஆராய்ச்சியாளரல்லர். அவருக்குத் தொடர்பில்லாத ஆனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தமிழ்ப் புலமைஎழுச்சியால் ஈர்க்கப்பட்டவர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தமிழ் எழுச்சிக்குத் தலைவணங்கியே இப்பதிப்பினைச் செய்துள்ளார். நூல் அவருக்குப் படையல் செய்யப்பட்டுள்ளது.</p><p>திரு கா. சிவபாலனுடன் முறையாக உரையாடியிருப்பின், அதுவரையில் பதிப்பிக்கப்படாத மீதமுள்ள மற்றைய 47 கட்டுரைகள் தொடர்பிலான தகவல்களையாவது பெற்றிருக்கலாம், இலங்கைக் கிளையுடன் தொடர்பு ஏற்படுத்தி மீதமுள்ள கட்டுரைகளைப் பதிப்பிக்கும் சூழலை உருவாக்கியிருக்கலாம். இதனைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஏனோ தவிர்த்துள்ளார். </p><p>இவ்விரு காரணங்களாலுமே மேற்கூறியவாறு நான் சொல்வதற்குத் தள்ளப்பட்டேன். பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் மாணவர்கள் என்ற கோதாவில் பலர் தமிழ்த்துறைப் பணிகளைப் பெற்றுள்ளனர், மேடைகளில் அவரது மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைவதாகவும் பூரிப்படைகின்றனர். ஆனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் காட்டும் ஈழத்தமிழர் சால்புக்கோலத்திற்குப் பெருமை சேர்ப்பவர்களாக உயர்வடையாமல், நடிகர்களாகவே தேங்கிவிடுகின்றனர். </p><p><b>இரா. ஜனார்த்தனன் எனும் மாயமான்</b></p><p><span style="white-space: pre;"> </span>தமிழர்கள், சிங்கள புத்த அரசின் எதேச்சதிகார ஒடுக்குமுறைக்குள் இலங்கை பிரித்தானியிரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான சிறிதும் பெரிதுமாக இனவழிப்பு நிகழ்வுகள், சிங்கள பௌத்த அரசின் துணையோடு இடம்பெற்றுக்கொண்டுதான் இருந்துள்ளன. 1956 ஜூன் 11 ஆம் நாள் தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்ற கல்லோயா தமிழினவழிப்பு என்று 1974 ஆண்டிற்கு முன்னரே சில நிகழ்வுகள் இடம்பெற்று தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாயினர், உயிர்ப்பலியெடுக்கப்பட்டனர். தமிழர்கள் தங்கள் உரிமைவேண்டி மேற்கொண்ட அறப்போரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை, எனினும் நாளுக்குநாள் தமிழர்கள் மத்தியில் எழுச்சியென்பது ஆழ்மனத்தில் ஏற்பட்டுவிட்டிருந்தது. </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்நிலையில் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவோ பொறுப்பு வகிக்காதவரும், ஆளும் கட்சி எதிர்க்கட்சி எதிலும் முக்கிய பொறுப்பு வகிக்காத ஒருவரான திரு. இரா. ஜனார்த்தனன் யாழ்ப்பணத்திற்கு வந்துதான் இங்குள்ள தமிழர்கள் எழுச்சியடையவேண்டும் என்ற நிலை இருக்கவில்லை. அவரை உலகத் தமிழாராய்ச்சி மன்றமோ அல்லது இலங்கைக்கிளையோ யாழ்ப்பாண மாநாட்டிற்கென அழைக்கவில்லை. அவர் அதற்கு முன்னர் இருதடவை இலங்கை வந்திருந்தபோதும் அரசியற் கூட்டங்களில் கலந்துகொண்டு சிங்கள புத்த தேசியத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ்ர்களுக்கு ஆதரவாகவும் அரசியல் பேசினார் என்ற வரலாறுப் பதிவுகளையும் காணக்கிடைக்கவில்லை.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இப்படியான ஒருவரை உருப்பெருக்கி மிகவும் உச்சக்கட்டமான வேண்டாதவராகச் சித்தரித்து வதந்திகள் பரப்பட்டுள்ளன என்றே நான் எண்ணுகிறேன். </span></p><p></p><ul style="text-align: left;"><li>குறிப்பாக எனக்கு விசா தந்துவுடக்கூடாது என்ற தாக்கீது வேறு. (பக்.180)</li><li>மறுநாள் விமானத்தில் கொழும்பு பயணம்.(பக். 182)</li><li>ஒரு கிறிஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்தனன் கொழும்பு சென்றடைய இந்தியத் தூதரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். - சரவணன் (பக்.146)</li></ul><p></p><p>இரா. ஜனார்த்தனம் தொடர்பான செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை இருந்துள்ளது என்பது எனக்குச் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் கலவரம் நடைபெற்ற மறுநாள் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்றுள்ளதையும், என். சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர் பாதுகாப்பாகச் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவரை அழைத்துவந்தவர்கள் யாரென்பதும் அவர்களது நோக்கம் என்னவென்பதும் வெளிச்சமாகின்றன. </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இரா. ஜனார்த்தனம் அவர்களை கைது செய்வதாக இலங்கை அரசின் காவல் துறை மாநாட்டின் இறுதிநாளான 10.01.1974 அன்று மாலை காட்டிய தீவிரப் போக்கினை மறுநாள் காட்டவில்லை-தேடவில்லை, கைதுசெய்யவில்லை என்பதிலிருந்து திட்டமிடப்பட்ட ஒரு நாடகத்தில் இலங்கை அரசும் ஒரு பாத்திரமேற்றிருந்துள்ளது என்றும் கூறலாம். நிச்சயமாக ஈழத் தமிழர்களின் நன்மைக்காக இரா. ஜனார்த்தனம் அழைத்துவரப்படவில்லை என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>1974 பெப்ரவரி மல்லிகையில் டொமினிக் ஜீவா கூறிய ‘சில வந்தான் வரத்தான்கள் செய்துவிட்டுப் போன நாச விளைவுகளும்’ மற்றும் 1974 ஏப்ரல்-ஜூன் களனி இதழில் வாமனன் என்ற புனைபெயரில் க. கைலாசபதி எழுதிய ‘இந்தியாவிலிருந்து ஜனார்த்தனம் போன்ற கழிவுகளை’ என்பதிலுள்ளவாறான தனிமனிதச் செயல்களாக இல்லாமல் ஏதோ ஒரு திட்டமிடப்பட்ட மறைநிரலில் மூன்றாம் சக்தி ஒன்றின் அரசியல் நன்மைக்காக அழைத்துவரப்பட்ட மாயாமான் அவரென்பதாகவே நான் கணிக்கிறேன். ஈழத்தமிழர்கள் இவ்வாறு பல மாயமான்களைச் சந்தித்துள்ளனர் என்பதும் என் தெளிவு. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வை. கோபால்சாமி அவர்கள் வெளியேற்றப்பட்டதனால் பல இளைஞர்கள் தீக்குளித்து இறந்துபோனார்கள், வை.கோ ஆதரவாளர்களான இராயபுரம் ஏழுமலை போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். வை. கோபால்சாமி பிரிந்து சென்றமைக்கு அந்நாட்களில் கலைஞர் கருணாநிதியால் கூறப்பட்ட காரணம் என்னவென்பதையும், இன்று அதே வை.கோ என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் நேர்மையாக மீள்வாசிப்புச் செய்தால், இந்த மாயாமான்களின் உற்பத்தி ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற உருவாக்கப்பட்டவர்களல்லர் என்பதை அறிந்துகொள்ளமுடியும். </span></p><p><b>முடிவுரை</b></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற சீரிய சிந்தனையின் தந்தை - தனிநாயக அடிகளார் ஈழத்தைச் சேர்ந்தவர். தமிழ்மொழி தொடர்பில் உலகளாவிய முதலாவது அமைப்பு உலகத் தமிழாராய்ச்சி மன்றம், தமிழ்மொழியைக் காக்கும் வலுவான கேடயமும் அதுதான். உலகளவில் தமிழியலை நிலைநிறுத்தி அறிவுத் தளத்தில் செயற்பட்ட மன்றத்தினைத் தங்களது அரசியற் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு அமைப்பாகவே தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிடர்கள் கடந்தகாலத்தில் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் விருப்பத்தின் காரணமாக 2010ஆம் ஆண்டில் உண்மையான உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(legitimate IATR) இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. அவர்களது திராவிட மாடல் என்ற செயல்வடிவினால் மிகவும் உச்ச அளவில் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்றால் அது உலகத் தமிழாராய்ச்சி மன்றமே. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>இந்நிலையில் தனிநாயக அடிகளாரின் தொலைநோக்குப் பற்றுள்ளம் என்னவென்பதை எதிர்காலத் தமிழ் ஆய்வுலகம் அறியும் முகமாக 11.11.1965 அன்று தனிநாய அடிகளார் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை ஞாபகமூட்டலாத் தருகிறேன். </span></p><p></p><blockquote><p>‘‘மகாநாட்டை ஒட்டி சில தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்படும். திருக்குறள் மொழிபெயர்ப்புக்களை சீனத்திலும் மலாய் மொழியிலும் வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இங்கு சிங்களத்திலும் நல்ல முறையில் வெளி யிடப்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி. தமிழ் மொழி பல நாடுகளில் பேசப்படுகிறது. அதனால் பிரிட்டிஷ் நல்லுறவு நாடுகள் இலக்கிய மாநாட்டிலும் தமிழ் இலக்கியம் இடம்பெற்றுள்ளது. </p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>வாழ்விலே பண்பாட்டுக்கு முதலிடம் கொடுத்தவர் தமிழர். அதனாலேதான், </span></p><p>பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் </p><p>மண்புக்கு மாய்வது மன் </p><p>என்ற கொள்கையைத் தழுவி நின்றனர். மனிதனைப் பண்புடையவனாக மட்டும் காண விரும்பவில்லை தமிழர். முழுமைபெற்ற மனிதனாக, சான்றோனாக காணவிரும்பினார்கள் தமிழர்கள். இத்தகைய மனிதர்களும் வாழ்ந்தார்களா என்று இன்றைய சூழ்நிலையில் எண்ணத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டை நாம் மட்டும் வைத்திருந்தால் போதாது. உணர்ந்து பெருமைப்பட்டால் மட்டும் போதாது. அது உலகுக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உலகப்பண்பாடு செழிப்படையும் இப்படியான ஒரு பண்பாட்டை உலகம் இழப்பதைப் போன்றதொரு பேரிழப்பு வேறு இருக்க முடியாது. இவற்றைச் செய்ய இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் கவுன்சிலும், பிரெஞ்சு நாட்டுக்கு அலையன்ஸ் பிரான்சேஸ்,செர்மானிய நாட்டுக்கு ஜேர்மனிய இன்ஸ்ரிரியூட் ஒப் கல்ச்சர் போன்ற நிறுவனங்களும் உலகின் பல பாகங்களிலும் அரசாங்க உதவியோடு உண்டு, அப்படியே வேறு நாடுகளுக்கும். ஆனால் <b><span style="color: #2b00fe;">நமக்கு ஓர் அரசில்லாத குறையால் இந்தப் பணியை நாமே மேற்கொள்ள வேண்டும்</span></b>. இதைச் செய்யத்தவறினால் பெரிய தவறைச் செய்தவர்களாவோம். <b>நாமே நமக்குத் துணையாக வேண்டும்</b>. இந்த அடிப்படையில் தான் மலாயா உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெறும் ’’</p></blockquote><p></p><p>- ஆ.தேவராசன் : புதிய கண்ணோட்டத்தில் தமிழாராச்சி, ஈழநாடு (21.11.1965) பக்கம் 3.</p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>உன்னத சிந்தனையொன்றை நூறு ஆண்டுகளாவது அதன் கண்ணியம் கெடாது தமிழர்களால் காப்பாற்றமுடியாது என்பதைப் பாறைசாற்றும் ஒன்றாக உண்மையான உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(Legitimate IATR) இல்லாதொழிக்கப்பட்ட நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுகிறது. </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>UNESCO அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இல்லாதுபோதல் தமிழ்மொழிக்கு நல்லதல்லவே.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>தங்கள் சைவ அடையாளத்தினைத் தக்கவைக்க ‘‘ஓம்’’ என்ற சொற்பயன்பாட்டினைப் போத்துக்கேயர் காலத்தில் ஈழத்தமிழர்கள் கைக்கொண்டதுபோல், நூலியலாளர் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களின் இந்நூலினூடாகப் புரிதலடைந்து உலகத் தமிழாராய்சி மன்றத்தினை அதன் வீரியம் கெடாமல் எவ்வாறாயினும் மீட்டெடுப்பார்களெனில் பெருமகிழ்ச்சியடைவேன். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>எந்த ஒரு நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காமலும், எந்தவொரு நாட்டின் நிதி நல்கையில் தங்கியிராமலும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினைத் தன்னிறைவுடன் செயற்படச் செய்யும் விதைக் காசினைச் சேகரித்துக்கொடுக்கும் வல்லமை இன்று உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர்களிடம் உள்ளது. தமிழைப் பாதுகாக்கும் கேடயங்களை நாமேதான் செய்தாகவேண்டும். தனிநாயக அடிகளாரால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் முதற்கேடயம்.</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>திரு. சச்சி ஶ்ரீகாந்தா, திரு கா. சிவபாலன் ஆகிய இரு ஈழத்தவர்களின் வரிசையில் தனிநாயகம் அடிகளாரின் உலகத் தமிழாரய்ச்சி மன்றத்தின் மாண்பினைக் காப்பாற்றியவர்களில் ஒருவராக நூலியலாளர் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களையும் இனிமேல் இணைத்துக் கூறலாம். பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகளில் இருப்பவர்கள் செய்வேண்டிய கடமையைச் செய்துகொண்டிருக்கும் நூல்தேட்டம் என். செல்வராஜா அவர்களின் தமிழ்த்தொண்டு தொடர என் வாழ்த்துகள். </span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>- விருபா குமரேசன்</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>t.kumaresan@viruba.com / admin@iatr.net</span></p><p><span style="white-space: normal;"><span style="white-space: pre;"> </span>+919840254333 whatsApp</span></p>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-5617700305198129702023-03-07T10:46:00.001+05:302023-03-07T13:10:35.107+05:30இலக்கியச் சந்திப்புகள் - பேட்டி : தமிழ்த்திரு. தனிநாயக அடிகள் (தீபம் இதழ் 1968 )<p style="text-align: justify;"> <span> </span><i><b>நாள் : 1968.01.10</b> </i><i> <b>பேட்டி கண்டவர் : கோவிந்தன்</b></i> </p><p style="text-align: justify;"><span> </span>இலங்கையிலே ஒரு சின்னஞ்சிறு தீவிலே பிறந்த தனிநாயகம் அவர்கள் கல்வி, கேள்விகளில் திறம்பட விளங்கிப் பட்டங்கள் பல பெற்று உலக பந்தங்களையும் சொந்தங்களையும் துறந்து அடிகளாக ஆனார்கள். பந்தத்தையும் பாசத்தையும் துறந்த தனிநாயகம் ஒரு தமிழ் நாயகம் ஆவார். தமிழைத் துறக்காத இந்தத் தனிநாயகம் இலங்கை, அண்ணாமலை நகர், இலண்டன் போன்ற இடங்களில் படித்து எம். ஏ., டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். இலங்கையிலே பிறந்த இவர் இன்று மலேயாவிலே தமிழ் மணம் பரப்பி வருகிறார். அகில உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டில் முக்கியப் பொறுப் பேற்றுத் தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரவச் செய்யும் இவரைத் தமிழத்திரு தனிநாயக அடிகள் என்று நமக்கு அழைக்கத் தோன்றுகிறது. முழுக்கையுள்ள நீண்ட வெள்ளை அங்கியும், ஒளி வீசும் கண்களும், சாந்தமான முகத் தோற்றமும், இனிய தமிழும், சரளமான ஆங்கிலமும் பேசுகின்ற தனிநாயகம் தமிழ் பேசும் மக்களின் இதயங்களிலே நிற்கிறார் என்று கூறினால் மிகையாகாது.</p><p style="text-align: justify;"><span> </span>உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிச் சென்னைக்கு வந்திருந்த தனிநாயகம் அவர்களிடம் 'தீபத்'திற்கு பேட்டி வேண்டி இரண்டு மூன்று முறை கேட்டபோது. "நேரமில்லை; பார்க்கலாம்" என்று கூறிவந்தார்கள். 10-1-68 ந்தேதி காலையிலே பேட்டி பற்றிக் கேட்டபோது, ''நாளையே விமானம் மூலம் புறப்படுகிறேன்'' என்றார். 11-1-68 இரவு சென்னை முதலமைச்சர் அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது விருந்தினர்கள் தங்கியிருந்த புதிய சட்டமன்ற விடுதிக்குச் சென்றபோது, தனிநாயகம் அவர்களைக் கண்டோம். மீண்டும் பேட்டி பற்றிக் கேட்டபோது "முதலமைச்சர் விருந்துக்குக் கட்டாயமாக இருக்க நேரிட்டுவிட்டது. நாளை விமான மூலம் புறப்படுகிறேன். பேட்டிக்கு இப்போது நீங்கள் உடனே தயாரா?" என்று அடிகள் இணங்கினார். விருந்தினர்கள் அன்று இரவே விருந்து முடிந்ததும் சுற்றுலாப் புறப்படுவதற்கும், தங்களுடைய நாடுகளுக்குத் திரும்பச் செல்லுவதற்கும் பெட்டி படுக்கைகளைக் கட்டிக் கொண்டு புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கார்களிலும் பஸ்களிலும் விருந்தினர்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருந்த பரபரப்பான சூழ்நிலை. விருந்தினர் மாளிகையின் முன் வராந்தா ஒரு ரயில் நிலையம், அல்லது விமான நிலையத்தைப் போலப் பரபரப்பாக இருந்தது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் தீபத்தின் பேட்டிக்குச் சரி என்று கூறித் தன்னுடைய 271-ம் நம்பர் அறைக்கு அழைத்துச்சென்றார் அடிகள். மாடிப்படி யில் ஏறும்போதே சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொன்னார். அறைக்குச் சென்றோம். உபசாரத்திற்குப் பிறகு பேட்டி தொடங்கியது.</p><p style="text-align: justify;"><b>தமிழ் மொழி பற்றித் தங்களுடைய கருத்தென்ன?</b> </p><p style="text-align: justify;"></p><blockquote>எளிதில் எல்லோரும் கற்றுக்கொள்ள ஏற்றதாகவும், ஓசை நயமும், இனிமையும் நிறைந்த ஒரு மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. ஏனெனில் வேற்றுமை உருபுகள் ஒருமைக்கும் பன்மைக்கும் பயன்படுத்துவதற்கு உரியனவாக அதாவது மிகவும் எளிமையாகவும் இனிதாகவும் உள்ளன. லத்தீன், வடமொழி ஆகிய மொழிகளில் கூட இதுபோல் இல்லை என்று கூறலாம். அடிச் சொற்கள் வேறு வேறு பொருள்களைக் குறிப்பது இம்மொழிக்குள்ள தனிச் சிறப்பாகும் கிழமை - உரிமை; கிழவன் - உரிமை பெற்றவன்; ஞாயிற் றுக்கிழமை - ஞாயிற்றுக்கு உரிய நாள் போன்றவைகளைக் காணவேண்டும். கடந்த 25 நூற் றாண்டுகளாக, இலக்கண, இலக்கியத்திலிருந்து சொற்களைப் பெருக்கிக் கொண்டு இம் மொழி வளர்கிறது. அவைகளை நன்கு அறிந்து வருவதற்கு இன்பத்தைத் தரும் டாக்டராக நல்லூர் ஞானப் பிரகாசம் தத்துவ ரீதியிலே நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. கருத்து இருக்கிறது. சிறப்பாக வாய்மை, உண்மை, பொய்மை போன்ற சொற்களின் கருத்துக்களை ஆராயும்போது தனி இன்பத்தைத் தரும். இம்மாதிரியான புதுச் சொற்கள் வருவதற்கும் இம்மொழியில் இடம் இருக்கிறது என்பது ஒரு தனிப் பெருமையாகும். புகையிலை நம் நாட்டிற்கு முதல் முதல் வந்தபோது இலையை அறிந்த மக்கள், புகைப்பதற்கு உபயோகமாக இருக்கின்ற காரணத்தால் புகை + இலை என்று சேர்த்துப் புகையிலை என்று மிகவும் எளிதாகவும், இயற்கையாகவும் ஒரு புதிய சொல்லை உண்டாக்கிவிட்டார்கள். வள்ளிக் கிழங்கை அறிந்தவர்கள் மரத்தைப் போன்றும், வள்ளியைப் போன்றும் விளங்கும் பெரிய செடியிலிருந்து வருகின்ற கிழங்கை அதாவது வள்ளிக்கிழங்கைப் போன்ற ஒரு கிழங்கை ‘மர' என்ற இரண்டு எழுத்துள்ள ஒரு சிறிய சொல்லைப் போட்டு மரவள்ளிக் கிழங்கு என்ற ஒரு புதிய சொல்லை மிகவும் எளிதாக, இயல்பாக, இனிமையாக ஏற்படுத்தித் தந்தார்கள். புதிய சொற்கள் தமிழ் மொழியில் இதுபோன்ற முறையில் வருவதே மொழிக்கு வலிவைக் காட்டுவதாகும். அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர். பரிமேலழகர் போன்றவர்களுடைய விளக்கங்களிலேயிருந்து இந்த இருபதாம் நூற்றாண்டின் கருத்துக்களை விளக்க ஏற்ற சொற்களைக் கண்டு வருகிறேன். "நீர்கால யாத்திரை" என்ற சொல் இன்றைய (Irrigation) நீர்ப்பாசனம் என்பதற்கும் பொருந்தும். திண்ணகம் என்ற சொல்லை உலோகம் (Metal) என்ற பொருளில் அடியார்க்கு நல்லார் பயன்படுத்தியுள்ளார். எனவே திண்ணகம், விண்ணகம், மண்ணகம் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள்கள் தருவது கண்டு இன்புறுகின்றோம்.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>தமிழ் மொழியில் விஞ்ஞானம் விரைவில் போதிக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>தமிழ் மொழியில் விஞ்ஞானத்தைப் போதிக்க முடியும். ஆனால் அதற்குக் கொஞ்ச நாள் ஆகும். முன்னேற்பாடாக விஞ்ஞான நூல்கள் வளர வேண்டும். விஞ்ஞானத்தில் அகில உலக ரீதியில் பபன்படுத்தும் சொற்களை (International Technology) அப்படியே பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானம் பயில ஆங்கில மொழி அவசியம் அறிந்திருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு விஞ்ஞான நூல்களைத் தந்த பிற மொழிகளை அறிவதே விஞ்ஞானத்தை அறிய வசதியாகும். மேல் ஆராய்ச்சி செய்வதற்கு ரஷ்ய, ஜெர்மன், ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் அறிந்திருக்க வேண்டும். இந்த மொழிகளை அறிந்தால் முதல் தரமான விஞ்ஞான அறிவு வளரும். ஆங்கில நாட்டாரும் ரஷ்ய மொழிகளைக் கற்று வருகிறார்கள். ரஷ்ய நாட்டாரும் ஜப்பான், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று வருகிறார்கள் ஆகவே படு அவசரம் காட்டாமல் நிதானமாகச் சென்றால் தமிழில் விஞ்ஞானத்தைப் போதிக்கலாம்.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>மலேசியாவில் நடந்த தமிழ் மாநாட்டிற்கும் சென்னை மாநகரத்தில் நடந்த தமிழ் மாநாட்டிற் கும் உள்ள தனிச் சிறப்புக்கள், ஒற்றுமைகள், வேற்றுமைகள் எவை என்று கூற முடியுமா?</b> </p><blockquote><p style="text-align: justify;"><span> </span>கோலாலம்பூரில் நடந்த மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டார்கள். மலேயாவில் இருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு அதிகமாகவே அம்மாநாட்டிற்காக நாங்கள் பாடுபட்டோம். முதல் மாநாடு என்ற முறையில் அம்மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இனி நடக்கப் போகும் மாநாடு களுக்கெல்லாம் இம்மாநாடே வழிகாட்டியாகும். முதல் மாநாட்டில் ஏற்பட்ட அநுபவங்கள் இரண்டாவது மாநாட்டை நடத்த மிகவும் உதவி செய்தன.</p></blockquote><blockquote><p style="text-align: justify;">இங்கு நடந்த இரண்டாவது உலக மாநாட்டினுடைய சிறப்பிற்கு ஆரம்ப வேலைகளை மிகவும் வெற்றிகரமாகத் திருவாளர்கள் ஆ. சுப்பையாவும், கமில் ஸ்வலபிலும் செய்தார்கள். தமிழ் நாட்டினுடைய தலைநகரத்தில் வந்து மாநாட்டை நடத்தும்படி முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் முதல் மாநாட்டின்போது கோலாலும்பூரில் கேட்டுக் கொண்டது இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பாகும். நாற்பத்திரண்டு நாடுகளைச் சேர்ந்த சுமார் 450 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பெருமை செய்தார்கள். இவர்களில் பலர் உலகக் கண்ணோட்டத்தோடு புதிய கருத்துக்களையும், ஆராய்ச்சிகளையும் மன்றத்திலே வழங்கினார்கள். சென்னை யிலே நடந்த மாநாட்டிற்குப் பலரும் பல விருப்பங்களில் வந்தார்கள். மலேயா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள், தமிழகத்தைக் காண வேண்டும்; தமிழகத்து மக்களோடு உறவாட வேண்டும். என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு வந்தனர். வேற்றுநாட்டார் தமிழ் மண்ணில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனி விருப்புடன் வந்தார்கள். திருவாளர்கள் ஆ. சுப்பையாவும், கமிலும், மற்றவர்களும் பல நாடுகளுக்கும், நேரில் சென்று அறிஞர்களைச் சென்னையில் நடந்த மாநாட்டிற்கு அழைத்தார்கள். நேரில் அழைத்த காரணத்தால் பேராளர்கள் பெருவாரியாக வந்தனர். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகச் சென்னை மக்கள் இந்த மகா நாட்டை மிகவும் சிறப்பாக நடத்தினர். விருந்தோம்பலில், தலைசிறந்த தமிழர்கள் தங்கள் பண்பாட்டிற்கு இணங்க மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்குச் சிறந்த சிறந்த உணவு விருந்தையும், கலைவிருந்தையும் சிறப்பான முறையில் அளித்ததாக மகாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு அறிஞர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். அதற்காக நானும் நன்றி பாராட்டக் கடமையுள்ளவனாகிறேன்.</p></blockquote><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><b>பாரீஸ் மாநகரத்தில் நடைபெற இருக்கும் அடுத்த உலகத் தமிழ் மாநாடு பற்றிய விவரங்களையும், கருத்துக்களையும் கூற இயலுமா?</b> </p><p style="text-align: justify;"></p><blockquote>1970-ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாவது வாரம், மூன்றாவது உலகத்தமிழ்மாநாடு பாரீஸில் நடைபெற இருக்கிறது. நண்பர் பிலி யோசா விடுத்த அழைப்பை நிர்வாகசபை ஏற்றுக் கொண்டு, இன்றுமுதல் அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுகிறது. 150 முதல் 200 அறிஞர்கள் வரை மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேயா, சிலோன் போன்ற நாடுகளிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் வந்து இந்த மகா நாட்டிலும் கலந்து கொள்ளுவார்கள். இங்கும் கருத்துக்களும், ஆராய்ச்சி முடிவுகளும் அறிஞர் களுக்குள் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும்.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>தமிழ் இலக்கியங்கள் பற்றிய தங்கள் கருத் தென்ன? தங்களுக்குப் பிடித்தமான தமிழ் இலக் கியம் எது?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>சங்ககால இலக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சங்க இலக்கியங்களில் நான் அதிகம் ஈடுபாடு கொள்ளுகிறேன். இருந்தாலும் அதற்காக மற்ற இலக்கியங்களை நான் ஒதுக்கித் தள்ளிவிடுவதில்லை. சிலப்பதிகாரம் சிறந்த வியப்பிற்குரிய ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது. கிறித்துவ மதத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள எனக்கு ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழில் செய்த பக்தி 'இலக்கியங்களும் இன்பத்தைத் தருகின்றன. கம்பனுடைய அரிய காவியத்தையும், இடைக்காலத்தில் தோன்றிய மற்ற இலக்கியங்களையும் நான் படிப்பதுண்டு. நவீன இலக்கியங்களில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை. ஆராய்ச்சிக்காகவும், பாடம் நடத்துவதற்காகவும் நவீன இலக்கியங்களையும் படிப்பதுண்டு.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>தமிழ் நாவல், சிறுகதை ஆகியவை பற்றித் தங்களுடைய கருத்து என்ன?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>சிறுகதைகளை நான் படிப்பதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நாவல்கள் படித்ததாக ஞாபகம். இப்போது நாவல்களும் படிப்பதில்லை. ஆனால் இத்துறை மிகவும் வளர்ந்துள்ளதாகவும், மக்கள் சிறுகதை, நாவல்களை அதிகம் படிப்பதாகவும் கூறப்படுகிறது. இவை உரை நடையின் வளர்ச்சியாகும். வேதநாயகம் பிள்ளை, திரு. வி. க. போன்றவர்கள்தான் தமிழ் உரைநடை வளத்தை வளர்த்தவர்கள். வரலாற்று நாவல், சமூக நாவல், சிறுகதை முதலியன உரைநடையின் உச்சகட்டத்தில் விளைந்த விளைவாகும்.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>நீங்கள் ஆங்கிலத்தில் அதிகம் எழுதுகிறீர்களா அல்லது தமிழ்மொழியில் அதிகம் எழுதுகிறீர்களா?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>நான் அதிகமாக ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன். இதனுடைய நோக்கம் என்னவென்றால் தமிழ் அறியாத பலரும், தமிழ்க் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளட்டும் என்பதேயாகும்.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>பாட்டு இலக்கியம் பற்றித் தங்கள் கருத்தென்ன? பாட்டு இலக்கியம் இந்த நூற்றாண்டில் எடுபடாது என்று கூறுகிறார்களே! இது உண்மையா?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பாரதி பாட்டு இலக்கியத்தின் மூலம்தான் சுதந்திரப் பள்ளைப் பாடி மக்களை விடுதலைக்குப் பாடுபடும்படி செய்தான். பாட்டு இலக்கியம் தமிழ்மொழியோடு பிறந்த ஒரு பேறாகும். இந்தப் பாட்டு இலக்கியத்தின் விரிவே இன்றைய உரைநடையாகும். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வெவ்வேறு துறைகளாகும். இரண்டும் இணைந்துதான் செல்லும். வேறுபடாது. வேறுபடமுடியாது.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கம் என்ன?</b> </p><p style="text-align: justify;"></p><blockquote><p style="text-align: justify;">உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அல்லது கருத்தரங்கு என்று கூறவேண்டும்.</p><p style="text-align: justify;">பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்திடல் வேண்டும், இறவாத புகழுடைய நூல்கள் தமிழ்மொழியில் இயற்றிடல் வேண்டும், திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்' என்று பாடிய பாரதியின் கருத்தே இந்த மன்றத்தின் (Motto) நோக்கமாகும்.</p></blockquote><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><b>தமிழ்ப் பத்திரிகைகள் பற்றித் தங்களுடைய கருத்தென்ன?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>மக்களுடைய வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளில் பத்திரிகைகளும் ஒன்றாகிப்போய்விட்டது. உரைநடை இலக்கியத்திற்குப் புத்துயிர் ஊட்டியது பத்திரிகைகளே. எல்லா நாட்டிலும் பத்திரிகைத் தொழில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மலேயா, இலங்கை, தமிழ் நாடு ஆகிய பகுதிகளில் தின, வார, மாத இதழ்கள் தமிழ்மொழியில் நன்கு நடைபெறுகின்றன. இவை மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>தமிழ்மொழியைப் போல, உலகில் வேறு எந்த மொழியாவது இத்தகைய மாநாடுகளை நடத்தி இருக்கின்றனவா?</b> </p><p style="text-align: justify;"></p><blockquote>சீன மொழிக்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இத்தகைய கருத்தரங்கங்கள் நடந்து இருக்கின்றன. ஆங்கில மொழிக்கு ஒரு சங்கமே அமைந்து, இத்தகைய செயல்களைச் செய்கின்றது. ஆனால் தமிழ்மொழிக்கு, அகில உலக ரீதியில் ஒரு பெருவிழாவாக நடந்ததைப்போல சீன மொழிக்கோ, ஆங்கிலத்திற்கோ, பிரெஞ்சுக்கோ நடந்ததா? என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும். சென்னையில் நடந்த விழா, உலகளாவியதோர் தனிப்பெரும் சிறப் பைப் பெற்றுவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>தீபம் இதழ், அதன் ஆசிரியர் பற்றித் தங்கள் கருத்தென்ன ?</b></p><p style="text-align: justify;"></p><blockquote>தீபம், ஒரு நல்ல தமிழ் மாத இலக்கிய இதழ் என்று கேள்விப்பட்டேன். இலங்கையிலும், மலேயாவிலும், தமிழ்நாட்டிலும் இந்த இதழும், இதன் ஆசிரியர் நா.பார்த்தசாரதியும் நன்கு அறிமுகமாகியுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழை நன்கு கற்ற புலவரான தீபம் ஆசிரியர் நவீன இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு நாவல்கள், சிறுகதைகள் படைப்பதும், ஒரு மாதப் பத்திரிகையை நடத்துவதும் புதுமையான ஒன்றாகும். பொதுவாகத் தமிழ்ப் புலமை பெற்றவர்கள் நவீன இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள். நவீன இலக்கியத்தில் ஈடுபட்டவர்கள், பழைய தமிழ் இலக்கியத்தை விரும்பமாட்டார்கள். இரண்டிலும் ஈடுபாடு உள்ள இவர் பத்திரிகை நடத்துவதை எல்லோரும் விசுவாசமாக ஆதரிக்க வேண்டும்.</blockquote><p></p><p style="text-align: justify;"><b>உலகத் தமிழ் மாநாடு பிரசுரிக்கப்படாத பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடி எடுத்துப் பிரசுரிக்க வழியும் வகையும் செய்யுமா? அதற்கான ஏற்பாடுகள் எனன?</b> </p><blockquote><p style="text-align: justify;">பொது அறிவு, உணர்வு, கருத்துப் பரிமாறுதல் ஆராய்ச்சி ஆகியவைகளும், பாரதி கூறிய தமிழ் வளர்ச்சிக் கருத்துமே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">பிரசுரிக்கப்படாத இலக்கியச் செல்வங்களைத் தேடி எடுத்துப் பிரசுரிக்கவேண்டிய வேலைகளை அரசாங்கமும், இலக்கியச் சங்கங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். அகில உலக ரீதியில் இதற்கான பண உதவிகளைப் பெற முயலலாம்.</p></blockquote><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><b>தமிழ்மொழியில் பிரசுரிக்கப்படும் நூல்களைப் பற்றியும் அவைகளின் தரத்தைப்பற்றியும் தங்கள் கருத்தென்ன?</b></p><p style="text-align: justify;"></p><blockquote><p style="text-align: justify;">பல தரமான நூல்கள் தமிழ்நாட்டில் பிரசுரம் செய்யப்படுகின்றன. பிரசுர வேலையில் பல பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். பலரும் வெளியிட்ட நூல்கள் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்று வெளிநாட்டார் பலரும் வருத்தப்படுகிறார்கள். ஹிக்கின்பாதம்ஸ் போன்ற ஒரு பொதுவிற்பனை நிலையத்தில் எல்லா வெளியீட்டகங்களும், வெளியிட்ட நூல்கள் கிடைக்கும்படி வகை செய்யவேண்டும். பிரசுரகர்த்தாக்களுக்குக் கடிதம் எழுதினால் பதிலும் வருவதில்லை என்று குறை கூறப்படுகிறது. தமிழ் நாட்டினுடைய வரைபடம் வேண்டும் என்று நான்கு நாட்களாக அலைந்தேன். கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும் என்றும் எவராலும் சொல்ல முடிய வில்லை. இத்தகைய குறைகள் நீங்க அரசாங்கமும், வெளியீட்டகங்களும், தமிழ்ச் சங்கங்களும் முயன்று வெளிநாட்டாருக்குத் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் நூல்கள் கிடைக்க வழி செய்தால் மிகவும் விசுவாசமாக இருப்பேன். </p><p style="text-align: justify;">நன்றி! </p><p style="text-align: justify;">வணக்கம்.</p></blockquote><p style="text-align: center;"><i>[பேட்டி முடிந்ததும் ஏதாவது அன்பளிப்பாகத் தருவதற்கு அவர் தேடினார். உடன் எதுவும் அகப்படவில்லை. ஆனால் அவருடைய அன்பு மனத்தைத்தான் தேடிக் கொடுப்பதற்கு முன்பே நான் அன்பளிப்பாகப் பெற்றுவிட்டேனே!]</i></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-76869036424255363252019-10-09T18:50:00.000+05:302019-10-09T19:37:31.728+05:30தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span> </div>
<div style="text-align: left;">
<span style="color: #990000;"><b>1. தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி மரபார்ந்த அகரவரிசை.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தொல்காப்பியத்தில் கூறப்படும் “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப” என்ற சூத்திரத்தில் தமிழ் எழுத்துகள் எவை என்பது கூறப்பட்டுள்ளது. “அ” தொடக்கம் “ஔ” வரையான உயிர் எழுத்துகள் 12ம், “க்” தொடக்கம் “ன்” வரையிலான மெய் எழுத்துகள் 18ம் தான் முதன்மை எழுத்துகள், அதாவது முதலில் தோன்றிய எழுத்துகள். மெய்யெழுத்துகளுடன் உயிரெழுத்துகள் சேர்வதால் தோன்றும் 216 உயிர்மெய்யெழுத்துகள், மற்றும் நுண்ணொலியான “ஃ” ஆய்தம் எனும் சார்பெழுத்து என்று மொத்தம் 217 சார்பெழுத்துகள் வரிவடிவமுடையவை. தமிழ் எழுத்துகளின், சார்பெழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படையில் எழுத்துகளுக்கு முதன்மை இடமும், அவற்றைத் தொடர்ந்து சார்பெழுத்துகளுக்கு இடமும் கொடுத்து இயல்பாகவே வரிசைப்படுத்திவிடமுடியும். ஆய்தவெழுத்தினை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கூறாவிடினும், </div>
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<span style="color: #990000;">ஆவி யகரமுத லாறிரண்டா மாய்தமிடை<br />மேவுங் ககரமுதன் மெய்களா - மூவாறுங்<br />கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று<br />நண்ணுமுதல் வைப்பாகு நன்கு</span></blockquote>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
என நேமிநாதம் சுட்டும் வழிகாட்டலின்படி ஆய்தவெழுத்தை உயிரெழுத்திற்கும், மெய்யெழுத்திற்கும் இடையில் வைக்கவேண்டும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.தமிழ் லெக்சிகன் ஆய்த எழுத்தைப் பதின்மூன்றாவது எழுத்தெனப் பதிவுசெய்துள்ளது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>இவ்வாறு தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அமையும், இதுவே தமிழின் முறையான, <span style="color: blue;">மரபார்ந்த தமிழகரவரிசையாகும்<b>[T]</b></span>. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தமிழில் அகராதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்களில் அகரவரிசை என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தமைக்கான பதிவுகளைக் காணமுடியவில்லை. அதாவது ஒவ்வொரு சொல்லையும் அதன் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்து அகரவரிசைப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் எதையும் காணக்கூடியதாக இல்லை. ஔவையாரின் ஆத்திசூடி என்ற நீதிநூலில் நீதிவாசகங்கள் முதல் எழுத்து அடிப்படையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவணசித்தரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவிலான, ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த அகராதிநிகண்டிலும் முதல் எழுத்து அடிப்படையிலான அகரவரிசையில் சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>2. சதுரகராதியில் தவறான அகரவரிசை அறிமுகமாதல்.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>1732இல் முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி, வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார்(Constanzo Beschi) என்ற மேனாட்டவரால் ஓலைச்சுவடியில் உருவாக்கப்பட்டது. 1819இல் சதுரகராதியின் ஒரு பகுதி அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் பின் 1824இல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. சதுரகராதியில் தலைச்சொற்களை வரிசைப்படுத்தக் கைக்கொள்ளப்பட்டிருக்கும் அகரவரிசை என்பது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்று காணப்படுகிறது, மேலும் ஆய்தவெழுத்தானது உயிர்மெய் எழுத்துகளுள் ககர மெய்க்கும் ஙகர மெய்க்கும் இடையிலும் வருமாறும் உள்ளதானதொரு அகரவரிசையாகும். நாம் இதனை “<span style="color: blue;">மேனாட்டவர் தமிழகரவரிசை</span>”<b><span style="color: blue;">[W]</span></b> என்று அழைக்கலாம். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>இம்மேனாட்டவர் தமிழகரவரிசையானது முற்றிலுமாக தமிழ் எழுத்துகள், சார்பெழுத்துகள் உருவான தன்மைக்கு எதிரானது. “க்” என்ற எழுத்தில் இருந்து தோன்றிய “க” முதல் “கௌ” வரையிலான சார்பெழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்களை முன்னராகவும், “க்” என்ற முதன்மை எழுத்தைக் கொண்டிருக்கும் சொற்களைப் பிற்பகுதியிலும் அடுக்கி வரிசைப்படுத்துவது தவறான முறையல்லவா? </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>அன்றைய திண்ணைப் பள்ளிக்கூட கல்விமுறையில், தமிழில் சொல்வளத்தினை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத அடிப்படை ஆதாரநூல்களாக இருந்தவை, செய்யுள் வடிவிலான நிகண்டுகளே. நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்களுக்குச் சொற்களின் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்துச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அடுக்கித்தந்த அகராதிகள் பெருவிருப்பாகின. <b>வீரமாமுனிவர் அருளிச் செய்த</b> சதுரகராதி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒலியொழுங்கில் சொற்களைப் பாக்களில் அடுக்கி மனனம் செய்யும் முறையில் இருந்து விலகி, தேவையேற்படுமிடங்களில் உசாவுதலுக்குப் பயன்தரும் நோக்குநூல்களாக அகராதிகளைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது எனலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>3. தவறான அகரவரிசையைத் தமிழறிஞர்களும் பயன்படுத்துதல்.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம் வழிப்படுத்திய மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தாமல், வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய மேனாட்டவர் தமிழகரவரிசையிலேயே தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டுவந்தன. ஆரம்பத்தில் முக்கியமான பல தமிழ் அகராதிகளை மேனாட்டவர்களே உருவாக்கிய காரணத்தினாலும், அவர்களைத் தொடர்ந்து தமிழில் அகராதிகளை உருவாக்க முற்பட்ட பல தமிழர்களும் எந்தவித ஆராய்வுமின்றி மேனாட்டவர் தமிழகரவரிசையினைத் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில், சொல்லடைவுகளில் பயன்படுத்தியுள்ளனர். 1679இல் புரேயன்சாவினால் உருவாக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி முதல் 1966இல் வெளியான மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் இளைஞர் தமிழ் அகராதி வரையிலாகப் பல அகராதிகளையும், சொல்லடைவுகளையும் பார்வையிட்டதில் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyc0gzN3oslReWImR5AmySCRrVsb_xUonXV5SFNUYCIa57BunWvM1_EWxljQx9D1yQYg7WtECwloddjLh_-go3IeGgsnGB-KzxgI8OTMeWhCkUk0BnvkTe0NWy-iH8kyI09Y_80g/s1600/Tamil_Dic_Table.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="662" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyc0gzN3oslReWImR5AmySCRrVsb_xUonXV5SFNUYCIa57BunWvM1_EWxljQx9D1yQYg7WtECwloddjLh_-go3IeGgsnGB-KzxgI8OTMeWhCkUk0BnvkTe0NWy-iH8kyI09Y_80g/s1600/Tamil_Dic_Table.jpg" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>மேலே தரப்பட்ட அட்டவணையை உற்றுநோக்கினால், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்று போற்றப்படுகிற பலரும் தவறான அகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடியும். இலக்கணக்கொத்து, இலக்கணச்சுருக்கம், இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண வினாவிடை ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியவரும், இலக்கணவழு இல்லாமல் பிழையற்ற பதிப்பை செய்தவர் என்று அறியப்படுபவருமாகிய ஆறுமுகநாவலரும் மேனாட்டவர் தமிழகரவரிசையினையே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் காணலாம். மேலும், தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் என்று பெயரிடப்பட்ட, பேராசிரியர் சு.சுசீந்திரராஜா அவர்களால் எழுதப்பட்ட மொழியியல் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் தொகுதியில்(2011) நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்(பக்.157)என்ற தலைப்பிலமைந்த ஆய்வுக் கட்டுரையில், </div>
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<span style="color: #660000;">"உண்மையிலே, நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம் யாது? நாம், பொதுவாக, ஆய்தம் தமிழ் எழுத்துக்களில் ஒன்று என்றே கருதுகின்றோம். ஆனால், முதற்கண், ஆய்தம் முதல் எழுத்துக்களில் ஒன்றன்று என்பதனை நினைவுபடுத்திக் கொள்தல் வேண்டும். எனவே, அதனை முதல் எழுத்துகளோடு கலப்பது, சேர்ப்பது பொருத்தமன்று. அது, எழுத்தோரன்ன சார்பெழுத்து. அதனை, உயிர் என்றோ மெய்யென்றோ மயங்குவதற்கு இடமளித்தல் ஆகாது. அது, உயிருமன்று, மெய்யுமன்று, செயற்பாட்டில் உயிரிலும் மெய்யிலுமிருந்து வேறுபடுவது. அது, சொல்லில்வரும் குறுகிய சூழலை வரையறுத்துக் கூறலாம். அது குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வருவதாகும். எழுத்து வரிசையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றிற்குப் பின்னர் வரவேண்டிய எழுத்தாகும். இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம். நாவலர் பெருமான் தம் இலக்கணச் சுருக்கத்தில்"எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம். அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து..." என வரிசைப்படுத்தியதை நினைவு கூர்க. </span></blockquote>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
என்றவாறு கூறும் பேராசிரியர் <b>“இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம்.”</b> <span style="color: blue;">என்பதற்குச் சான்றுகளைத் தரவில்லை.</span> ஆய்தவெழுத்தினை கடைசியாக வைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பேராசிரியர், நடைமுறையில் (பக்.197) இதனைக் கைக்கொள்ளவில்லை. பேராசிரியர் பல்வேறு கட்டுரைகளில் சொற்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார், ஆனால் எந்தவொரு இடத்திலும் மேற்கூறியவாறு ஆய்தவெழுத்தினை, உயிர்மெய்யெழுத்தின் பின்னர் வரும் நிலையில் வைத்துச் சொற்களை வரிசைப்படுத்தவில்லை. ஆறுமுகநாவலர் மீதான பற்றின் காரணமாக, ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக்க வாசகங்களை நியாயப்படுத்துவதற்காக வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக இதனைக் கருதலாம், கட்டுரையில் இடம்பெறும் பெருமான் என்ற சொல்லாடல் இதனை வெளிப்படுத்துகிறது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழறிஞர்கள் பலர் ஆராய்வின்றித் தவறான அகரவரிசை முறைகளைக் கைக்கொண்ட காரணத்தினாலேயே, மேனாட்டவர் தமிழ் மொழியின் அகரவரிசையைத் தீர்மானிக்க முற்பட்டுள்ளனர்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>4. மரபார்ந்த அகரவரிசையைப் பின்பற்றிய இரு முன்னோடிகள்.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தமிழகத்தில் உ.வே.சாமிநாதையரும், யாழ்ப்பாணத்தில் கு.கதிரைவேற்பிள்ளையும் (வைமன் கதிரைவேற்பிள்ளை) மாத்திரமே மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளனர். வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்த அகராதியின் முன்னுரையில் தமிழ் மரபார்ந்த அகரவரிசையை தொடர்பில் தெளிவுகளைத் தந்துள்ளார். வைமன் கதிரைவேற்பிள்ளையின் அகராதித்தொகுப்பில் வேலை செய்த சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் அவர்களும் தமது இலக்கியச் சொல்லகராதியில்(1914) மரபார்ந்த தமிழகரவரிசையப் பயன்படுத்தியுள்ளார். 1970இல் வெளியான குமாரசாமிப்புலவர் வரலாறு என்னும் நூலின் 65ம் பக்கத்தில் காணப்படும் <b>"இடைக்காலச் சிறப்பும் அகராதி வேலையும்"</b> என்ற உபதலைப்பில் அமைந்த பகுதியில் குமாரசாமிப்புலவரின் மகனான கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள, </div>
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<span style="color: #660000;">"...புலவர் நீதிபதியோடு கூடி வேலை செய்ததன் பலனாகப் பழந்தமிழிலக்கிய விலக்கணங்களையும், நிகண்டுகளையுந் துருவித் துருவி ஆராய்ந்து பிழைபட வழங்குஞ் சொற்களின் உண்மை உருவத்தை நிச்சயம் பண்ணும் நுட்பவறிவைப் பெற்றார். மேலும் அவர் நவீன முறையைப் பின்பற்றி அகராதி தொகுக்கும் முறையையும் அறிந்தனர். இவ்வனுபவங்கள் யாவும் அவர் தமது இலக்கியச் சொல்லகராதி இயற்றுவதற்குப் பேருதவியாகவிருந்தன..." </span></blockquote>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
என்ற வாசகங்களினூடாக மரபார்ந்த தமிழகரவரிசை முறையில் அகராதி உருவாக்கும் முறையை வைமன் கதிரைவேற்பிள்ளையவர்களிடமிருந்து அறிந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>5. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகனில் மரபார்ந்த அகரவரிசை.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>1840களில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் நிறுவன ரீதியாகத் தமிழ் அகராதிகளைத் தொகுத்ததைப் போன்று, 1913இல் சென்னைப் பல்கலைக்கழகமும் பேரகராதி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி 1936இல் அதனை நிறைவு செய்தது. “தமிழ் லெக்சிகன்” என்ற பெயருடன் வெளியிடப்பட்ட இவ்வகராதியானது, அதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் அகராதிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சொற்களுக்குப் பொருள் தருவதாகவும், நுணுக்கமான அகராதியியல் உத்திகள் பலவற்றையும் முன்னர் வெளியான அகராதிகளில் இருந்து பெற்று இணைத்துக் கொண்டதாகவும் அமைந்தது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையில் பல தமிழறிஞர்கள் தமிழ் லெக்சிகன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி(1862), ஜி.யு.போப்பின் அனைத்தும் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி(1905) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழ் லெக்சிகன் உருவாக்கப்பட்டதாகப் பலர் கூறினாலும், அதன் அகரவரிசைப்படுத்தல் என்பது மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலைக் கொண்டதாகவே அமைந்தது. அதாவது தமிழ் லெக்சிகனானது, முன்னர் உருவாக்கப்பட்ட பல தமிழ் அகராதிகளில் காணப்பட்ட மேனாட்டவர் தமிழகரவரிசையினைக் கைக்கொள்ளாது, மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளது. ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையிலான அறிஞர் குழுவின் ஆராய்வு காரணமாகவே பதினெட்டிற்கும் அதிகமான தமிழ் அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட தவறான மேனாட்டவர் தமிழகரவரிசை கைவிடப்பட்டு, இரண்டு அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த அகரவரிசையினைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஜே.எஸ்.சாண்டிலர் அவர்கள் சில பக்கங்களுடன் தமிழ் லெக்சிகனின் முன்மாதிரிகளை அச்சிட்டு Oxford University, Cambridge University போன்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிடமும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கத்துத் தமிழ் அறிஞர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட்டுள்ளார்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>6. தமிழ் லெக்சிகன் முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கவனக்குறைவு.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அகரவரிசைப்படுத்தல் முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசைப்படுத்தல் ஏன் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை. இதற்குக் காரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தன்னளவில் ஒரு சிறு தமிழ் அகராதியையேனும் உருவாக்காதவர், அகராதியியல் உத்திகள் எதையும் அறிமுகப்படுத்தியவருமல்லர். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>1926இல் தமிழ் லெக்சிகன் திட்டத்தில் இணைவதற்கு முன்னர், 1922இல் அவர் பதிப்பித்த மனோன்மணியம் பதிப்பின் இறுதியில் தரப்பட்ட பின்னிணைப்பு IIஇல் உள்ள அரும்பதவிளக்கத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியவர், பின்னர் 1938இல் புறத்திருட்டு பதிப்பிலும், 1943இல் திருமுருகாற்றுப்படை பதிப்பிலும் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, தன்னளவில் ஆரம்பத்தில் அகரவரிசைப்படுத்தலில் தவறான ஒரு முறையை அவர் கையாண்டிருப்பதை உணர்ந்த காரணத்தினாலேதான், பின்னர் மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுக்கு மாறியுள்ளார்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறியப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு தேர்விற்கு/கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மிகப்பொருத்தமான விடையாகாதென்பதை உணர்ந்தவராகவே இருந்திருக்கவேண்டும். பலவித விடைகள் கிடைக்கின்றன அல்லது பலவித முறைகள் இருக்கின்றன என்பது தெளிவின்மையின் அடையாளம். இதனைக்கூறும் <b>"ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை"</b> என்ற பழமொழியும் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு ஒரே ஒரு விடையை அறியமுடியாதவிடத்து, அவ்விடயம் தொடர்பில் துறைபோகிய பல்வேறு தரப்பினருடன் தர்க்கரீதியில் உரையாடல் செய்யப்படுமிடத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் ஒரு தனித்துவமான விடையைக் கண்டறிந்திருக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசையை அறிவியல் ரீதியாக விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கவேண்டிய பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தவர், ஏனோ அவர் அதனைச் செய்யவில்லை. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>முறையான தமிழ் அகரவரிசை என்பது தரப்பாடு செய்யப்படாத காரணத்தினால் 1936இற்குப் பின்னரும் பல தமிழ் அகராதிகள் மேனாட்டவர் தமிழகரவரிசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்தவரையில் 30 தமிழ் அகராதிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>7. தமிழ் அகரவரிசை எது சரியென்பதை தமிழக, ஈழ அறிஞர்கள்தானே தீர்மானிக்க வேண்டும்.</b></span> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியான அகரவரிசையென்பதாக 1968இல் வெளியான A Dravidian etymological dictionary என்ற அகராதியின் முன்னுரையில் அந்நூலின் ஆசிரியர்களான T. Burrowவும் M.B. Emeneauவும்,</div>
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<span style="color: #660000;">It is to be noted that we have seen no reason to follow the Tamil Lexicon’s idiosyncratic non-alphabetic ordering of kk before k followed by vowel, and the like: our order is strictly alphabetic.</span></blockquote>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
என்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்மொழியின் அகரவரிசை எது சரியானது என்பதைக் கூறுபவர்களாக மேனாட்டவர்கள் உள்ளார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மேனாட்டவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட இக்கூற்றுக்கு இன்றையவரையில் எந்தவொரு தமிழறிஞரும் பதில் தரவில்லையென்பதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயற்பட்டுவரும் தமிழ் லெக்சிகன் திருத்தப்பதிப்புக் குழுவும் பதில்தராது வாய்மூடிமௌனியாக இருப்பதும் கவலைதரும் விடயமாகும்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #660000;"><b>8. பேசாப்பொருளாக தமிழ் அகரவரிசை.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>உண்மையில் தமிழ் அகரவரிசை எது சரியென்பது பேசாப்பொருளாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற 908 பக்கங்களைக் கொண்ட நூலிலும் தமிழில் மரபார்ந்த அகரவரிசை, மேனாட்டவர் அகரவரிசை, மிகத் தவறான அகரவரிசை என்று ஒன்றிற்கு மேற்பட்ட அகரவரிசை முறைகள் புழக்கத்தில் உள்ளதென்பது பேசப்படவில்லை. தமிழ் அகராதிகளின் வரலாற்றைக்கூறும் நூலில், அகராதியியலின் அடிப்படையான அகரவரிசையைப் பற்றிப் பேசப்படவில்லையென்பது - கவனக்குறைவு என்று எளிமையாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல. <i><span style="color: blue;">1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் 2000இல் தமிழ் அகராதிகளின் வரலாற்றை எழுதிய கிரகரி ஜேம்ஸ் வரையில் பலரும் தமிழ் அகரவரிசை தொடர்பில் எழுதாமல், ஆராயாமல் இருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது.</span></i> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>மேனாட்டவர் தமிழ் அகராதித்துறையில் செய்துள்ள பணிகளைப் புறந்தள்ளி விடமுடியாது, ஆனால் அவற்றைத் தமிழ் என்ற வீட்டின் புறத்தோற்றத்தைப் பல வித நிறங்களால் அழகுபடுத்திக்கொள்வதைப் போன்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மொழியின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளி மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியானது என்ற வாதத்தை வைப்பது, தமிழ் என்ற வீட்டின் அத்திவாரத்தில் சிதைவை ஏற்படுத்துவதாக அமையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இதனை அனுமதிக்கமுடியாது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தற்செயலாகவோ, திட்டமிட்ட ஒரு மறைநிரலிலோ, அறியாமை காரணமாகவோ பல்வேறு இடங்களில்/பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளிய செயல்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ளதையும், தற்போதும் நிகழ்ந்து வருவதையும் நாம் காணலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>மேனாட்டவர் தங்கள் தன்னிச்சையான எண்ணப்படி தொல்காப்பிய, வீராசோழியம், நன்னூல் வழிப்படுத்திய <b>"மொழிமுதல் எழுத்துகள்"</b> என்பதைக் கவனத்தில் கொள்ளாது தமிழ் மொழியில் முதல் எழுத்தாக வராது என்று கூறப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களையும் இணைத்து வரிசைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக ட, ர, ல வரிசையில் தொடங்கும் சொற்களை ரொட்லர், வின்ஸ்லோ போன்றவர்களின் அகராதிகளில் காணலாம். நா.கதிரவேற்பிள்ளை தனது தமிழ்ப் பேரகராதியில்(1899) மொழிமுதல் வராத, “வ்” என்ற மெய்யெழுத்தில் தொடங்கும் பதினான்கு சொற்களை வரிசைப்படுத்தியுள்ளார்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>இணையமாநாடுகளை நடத்திவரும் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசினால் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழ்99” (தமிழக அரசாணை - G.O.Ms.No.17 - dated: 13 June 1999) என்ற கணினித் தமிழ்த் தட்டச்சு முறையும் தமிழ் எழுத்துகளின் சிறப்பைச் சிதைக்கும் ஒன்றாகும். இதில் அகரமேறிய உயிர்மெய்யெழுத்துகளுடன் மீண்டும் உயிரெழுத்துகள் சேர்வதன்மூலம் உயிர்மெய்யெழுத்துகள் தோற்றம் பெறுகின்றனவாகக் காட்டப்படுகின்றன.இங்கு வரிசைப்படுத்தல் இல்லையெனினும் தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் திரிக்கப்படுகிறது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>இன்றைய கணினி யுகத்தில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழ் அகரவரிசையினைச் சிதைப்பதாகவுள்ளன. தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia - https://ta.wikipedia.org), Microsoft போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களிலும், ஈழத்தில் இயங்கிவரும் நூலகம் நிறுவனமும் (http://noolaham.org) புதியதொரு தமிழ் அகரவரிசையினைக் கைக்கொள்பவர்களாக உள்ளார்கள். இவர்கள் மேனாட்டவர் தமிழகரவரிசையில் மேலதிகமாக வடமொழி “ஜ” எழுத்து வரிசையில் தொடங்கும் சொற்களை சகர வரிசைக்கும் ஞகர வரிசைக்கும் இடையில் வைத்து வரிசைப்படுத்தும் ஒரு கலப்பு அகரவரிசைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்கள்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>2017இல் இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளூடாக் & தமிழ் நூல் விபரப்பட்டியல் என்ற மொழிபெயர்பு நூலின் முன்னுரையில் அகரவரிசை தொடர்பில் பதிப்பாசிரியர் க.இரகுபரன் தந்திருப்பதைப் பார்க்கலாம், </div>
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<span style="color: #660000;">சைமன் காசிச்செட்டி தாம் ஆங்கிலத்தில் எழுதிய சரித்திரத்தில் புலவர் வரிசையை ஆங்கில நெடுங்கணக்குக்கு அமைவாக நிரற்படுத்தி விபரங்களைத் தொகுத்தளித்தார். இத்தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே ஒழுங்கிலேயே புலவர் வரிசை அமைகிறது. ஆனால், தமிழ் நெடுங்கணக்கின் வரிசை, ஆங்கில நெடுங்கணக்கின் வரிசையிலிருந்து வேறுபட்டது. யாரேனும் ஒரு புலவர் பற்றி அறிய விழைபவர்கள் தமிழ் நெடுங்கணக்கின்படி தேட முற்படின், அந்த ஒழுங்கு இதில் இல்லாததால் இடர்ப்படக்கூடும். ஆதலால், பொருளடக்கத்தில் புலவர் பெயர்களை முதலில் ஆங்கில எழுத்திலும் அடுத்து தமிழ் எழுத்திலுமாகத் தந்துள்ளோம். புலவர்கள் பற்றி அறிய முற்படுபவர்கள் ஆங்கில நெடுங்கணக்கின்படி புலவர் விபரங்களைத் தேடிப் படிப்பார்களாக.</span></blockquote>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் யாருக்கானது என்றால் உறுதியாகத் தமிழர்களுக்கானது அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கானது என்று கூறலாம். தமிழர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் ஆங்கில அகரவரிசையில் ஏன் வரிசைப்படுத்தவேண்டும்? தமிழ்ப்பதிப்பு என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் க.இரகுபரன் அவர்கள் உரிய முறையில் அணுகவில்லையென்பதை வெளிப்படுத்துவதாக இப்புத்தகம் அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள அட்டவணையில் முதலாவதாகவுள்ள புரேயன்சாவின் தமிழ்-போர்த்துகீசிய அகராதியில் போர்த்துக்கீசிய அகரவரிசையில்[P] தமிழ்ச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகராதியானது போர்த்துக்கீசியர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்டதென்பதால் அங்கு போர்த்துக்கீசிய அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க, </div>
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<span style="color: #660000;">தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து<br />அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே</span> </blockquote>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<b>"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்"</b> என்று சேர்ந்துவரும் சொற்றொடர் எதனை உணர்த்துகிறதென்பதைப் புரிந்துகொள்வது நல்லது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அஃது பல இடங்களில் பொருள் பொருந்தாது விலகிப் போகும் தன்மை ஏற்படலாம், எனவே சற்று மேம்பட்டு, வருமொழியான தமிழிற்குரிய நடையையும், மரபையும் உள்ளடக்கிய தன்மையுடன் அமைத்திருத்தல் வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியின் மரபில் அகரவரிசைப்படுத்தலும் அமைத்திருக்கவேண்டும், 196 தமிழ்ப் புலவர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசையில் தந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர் திருவேணி சங்கமம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்ததை, பதிப்பாசிரியர் க.இரகுபரன் அவர்கள் அதர்ப்படயாக்கத் தவறியுள்ளார். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<b><span style="color: #660000;">9. மரபார்ந்த அகரவரிசைக்கு மாற்றப்பட வலியுறுத்துகிறோம்.</span> </b></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>இவ்வாறு தனிநபர்-பாமரர் தொடக்கம் அறியப்பட்ட ஆய்வாளர், கல்வி நிறுவனம், அரசு நிறுவனம், வெளிநாட்டு அமைப்புகள் என்று பல்வேறு மட்டங்களில் தமிழ் அகரவரிசை மீறல்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவையாவும் எதிர்காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பாதிப்பவைகளாக அமையலாம். தமிழ் மொழியின் சிறப்பென்பது தொல்காப்பிய வழிகாட்டலின்படியான முதன்மை முப்பது எழுத்துகளில் இருந்து தொடங்குவதாக நாம் எண்ணுகிறோம். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரின் <b>“மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி”</b> எனும் தொடர் இதனை வெளிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம். <b><span style="color: blue;">செம்மொழியான தமிழ்மொழியில் தவறான அகரவரிசைப்படுத்தல் முறைகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது, தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்குமொரு செயலாகும்.</span></b> எனவே கடந்தகாலத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையில் உருவாக்கப்பட்ட நோக்குநூல்களை மீளவும் பதிப்பிக்குமிடங்களில் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்துவதாகவும், கணினி சார்ந்த குறியேற்றங்கள், தமிழ் இணையத்தளங்கள் யாவற்றிலும் மரபார்ந்த தமிழகரவரிசை பயன்படுத்தப்படும் மரபு உருவாக்கப்படவேண்டும்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"> </span>தமிழ் அகரவரிசை எது மிகச்சரியானது என்பதை துறைசார் வல்லுநர்களின் துணையுடன் ஆராய்ந்து கண்டறிந்து, அதனைத் தரப்பாடாக அறிவித்து <b><span style="color: blue;">அரசாணை ஒன்றைத் தமிழ் அரசுகள் வெளியிடவேண்டும்</span></b> என்ற கோரிக்கையினையும் இத்தால் முன்வைத்து எமது கட்டுரையை நிறைவுசெய்கிறோம். </div>
<div style="text-align: left;">
<br /></div>
</div>
விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-73879008543769199572019-08-13T04:55:00.001+05:302019-10-03T22:06:29.948+05:30பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyFH-O5pC41lbc7Ng9G9lf_HMgX15OjuaYgOkYmHefuJkjW8apIrGk8SEAEv244JpRhQQM2VeM_pVb6c33QNk2tBGMclkqPLBKx5S3B2uugi9gSUYeHJbwgc4ltekJoAHkxXB5lw/s1600/2018_Percival_Provrbs.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1128" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyFH-O5pC41lbc7Ng9G9lf_HMgX15OjuaYgOkYmHefuJkjW8apIrGk8SEAEv244JpRhQQM2VeM_pVb6c33QNk2tBGMclkqPLBKx5S3B2uugi9gSUYeHJbwgc4ltekJoAHkxXB5lw/s400/2018_Percival_Provrbs.jpg" width="281" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<div style="text-align: left;">
<b>மீள்பதிப்பின் முன்னுரை</b></div>
</div>
<br />
<div style="text-align: justify;">
‘‘<b>திருட்டாந்த சங்கிரகம்</b>” என்ற தமிழ்த் தலைப்புடனும் ‘‘<b>A Collection of Proverbs in Tamil with Their Translation In English</b>” என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பேர்சிவல் பாதிரியாரால், 1843இல், யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது. திருட்டாந்த சங்கிரகம் என்பதைச் சுருக்கமான எடுத்துக்காட்டு என்று பொருள் கொள்ளலாம். அதுவரை காலமும் வாய்மொழி இலக்கியமாக தமிழ் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பழமொழிக்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டு, முதல்முறையாக அச்சுவாகனமேறி நூல்வடிவம் பெற்றுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியார் தனது மறைதிருப்பணியை 1826ம் ஆண்டில் (Findlay, George G, Holdsworth William West, 1924, The history of the Wesleyan Methodist Missionary Society) திருகோணமலையில் தொடங்கியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் 1826இல் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு வந்துள்ளதாகத் தனது முன்னுரையில்(1874) குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண அமெரிக்கன் மிஷனரியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த பேர்சிவல் பாதிரியார், அமெரிக்கன் மிஷனறியைச் சேர்ந்த ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் ஈழத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் துணையுடன் நிறைவு செய்யப்பட்ட A manual dictionary of the Tamil language என்ற கையகராதித்(மானிப்பாய் அகராதி/யாழ்ப்பாண அகராதி) தொகுப்பிலும் பங்குபற்றியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் ஈழத்திற்கு வந்து பத்தாண்டுகளிற்குள் தமிழ் மொழியில் நிறைந்த அறிவைப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே அவரால் கையகராதித் தொகுப்புப் பணியிலும், திருட்டாந்த சங்கிரகம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடமுடிந்துள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1830-1832 இடைப்பட்ட காலத்தில் கல்கத்தாவில் பணியாற்றிய மூவாண்டு காலம் தவிர்த்து, 1826-1851 வரையில் அவர் ஈழத்தியிலேயே நிலைகொண்டிருந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படக் காரணமானவர் பேர்சிவல் பாதிரியார். இக்கல்லூரிகள் தொடர்பான ஆவணங்களில் இவர் பற்றிய குறிப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. 1842இல் யாழ்ப்பாணத்தில் கையகராதி வெளியிடப்பட்டது. அம்முயற்சியில் பேர்சிவலின் பங்களிப்பைப் பற்றிய பதிவுகள் American Board of Commissioners for Foreign Missions மூவாண்டுக் குறிப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலை (இன்றைய யாழ்.போதனா வைத்தியசாலை) தோன்றுவதற்குக் காரணமான ஆபத்துதவிகள் சங்கத்தின் (Frind-in-need Society) தோற்றம் தொடர்பில் உதயதாரகைப் பத்திரிகைச் செய்தியிலும் பேர்சிவல் குறிப்பிடப்படுகிறார். John H Martyn அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட Notes on Jaffna என்ற நூலிலும் பேர்சிவல் பற்றிய செய்திகள் உள்ளன. இவை யாவும் பீற்றர் பேர்சிவல் 1826-1851 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாழ்ப்பாணத்தில் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட கல்விப்பணிகளைப் பற்றி ஜெ.இராதாகிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். </div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
“கல்வி மதப்பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டது, உயர்வானது எனப் பெர்சிவல் கருதினார். இதனால் தமது சபையினருடன் ஏற்பட்ட உராய்வில் 1851இல் அச்சபையுடனான உறவை முறித்துக்கொண்டு இலண்டன் சென்றுவிட்டார். எனினும் இவர் யாழ்ப்பாணத்தில் செய்த கல்விப்பணி தலைமுறை கடந்தும் பயன்தந்தது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை இலக்கிய நிலையாலும், சமூக நிலையாலும் மேம்படுத்தியது. விடுதலைக்குப் பிந்தைய சுதந்திர இலங்கையில்(1948) சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் பெரும்பான்மையான சிங்களவர்களைவிட விரிவான கல்வியறிவும், பல்வேறு அரசு உயர்பதவிகளில் இருக்கவும் செய்தது. இந்நிலைப்பாட்டிற்கு, மேற்படி கிருத்துவ நிறுவனங்களின் பங்களிப்பும் டாக்டர் பெர்சிவலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.” <span style="text-align: right;">(பக்கம் - 152) </span><span style="text-align: left;"> </span></blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
“மதம் பரப்புவதற்காக வந்து, இந்திய-தமிழ் இலக்கியங்களில், பண்பாட்டில் தங்களைத் தொலைத்த பல்வேறு ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கும் டாக்டர் பீட்டர் பெர்சிவல், பல நிலைகளில் தமிழியலில் தனது இருப்பை ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். அவற்றில் அறிந்தோ அறியாமலோ அவர் செய்த நன்மைகளில் குறிப்பிடத்தக்கது, ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தமிழக வருகைக்குக் காரணமாக இருந்தமை. அவர்களிருவரின் ஆரம்பகால ஆளுமை உருவாக்கத்தில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈழ அறிஞர்களின் மீதான மதிப்பு தமிழகத்தில் இவர் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டது.<span style="text-align: left;"> </span></blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
பிற்காலத்தில் மேற்படி இருவரின் பதிப்புப் பணிகளுக்கும், ஆறுமுகநாவலரின் சமயப்பரப்புரைக்கும் பெர்சிவலே ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளார்.”</blockquote>
<div style="text-align: right;">
<span style="text-align: justify;"><b>(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு. பக்கம் - 159, 160) </b></span></div>
<div style="text-align: right;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியாரின் கல்விப்பணிகளால் நிரந்தர நன்மைகளைப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தவர்களாவர். நாம் அவரது வழியில் தமிழியலுக்கு பணியாற்றவேண்டிய பாத்தியதையுள்ளவர்களாக இருக்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1854 தொடக்கம் 1882இல் இறக்கும் வரை பீற்றர் பேர்சிவல் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவே வாழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் இவரே. மாநிலக்கல்லூரியின் கீழைத்தேய மொழியியல் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அன்றைய சென்னை மாகாண பொதுக்கல்வித்துறையின் ஆலோசகராகப் பணியாற்றுகையில் பொதுக்கல்வித்துறைக்கு பாடத்திட்டங்கள், வரைபடங்கள் தயாரித்துள்ளார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளையும் உருவாக்கியவர். சதுரகராதி 1860ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது ஆலோசனைகள் வழங்கியுள்ளார். தினவர்த்தமானியின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் அவர் புரிந்த பணிகளைப் பற்றிய ஆவணப் பதிவுகள் உள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருட்டாந்த சங்கிரகம் தொகுத்தல் பணியை பீற்றர் பேர்சிவல் ஈழத்தில் வாழ்ந்தபோதே நிறைவேற்றினார். இதில் காணப்படும் பழமொழிகளில் பெரும்பான்மையானவை ஈழத்தில் வழக்கில் இருந்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். 1870 பழமொழிகளுடன் வெளியிடப்பட்டஇந்த முதற் பதிப்பானது அதன் பின்னர் மீளவும் அதேவடிவில் அச்சில் கொண்டுவரப்படவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1851இல் ஈழத்தில் இருந்து இலண்டன் திரும்பிய பேர்சிவல் பாதிரியார் 1854இல் தமிழகம் சென்று தனது மறைதிருப்பணியைத் தொடர்ந்துள்ளார். சென்னையில் 1855இல் ஆரம்பிக்கப்பட்ட தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர்ப்பணி, மறைதிருப்பணி என்பனவற்றோடு பழமொழிகளைத் திரட்டும் வேலையை மீண்டும் தொடர்ந்துள்ளார். தினவர்த்தமானி பத்திரிகை அறிவிப்பினூடாக பொதுமக்களிடம் இருந்து பழமொழிகளைப் பெற்றுக்கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘‘Tamil Proverbs with their English Translation” என்ற ஆங்கிலத் தலைப்புடன் தமிழ்ப் பழமொழித் தொகுப்பு பேர்சிவல் பாதிரியாரால் தினவர்த்தமானி வெளியீடாக 1874இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 6156 பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. 1843 பதிப்பிற்கும் 1874 பதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகள் இதுவரையில் எந்தவொரு ஆய்வாளராலும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த குறைபாடுகள், விடுபடல்கள் பற்றிய தகவல்களை அவர் முன்னுரையில் (1874) சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கில விளக்கம் சிலவிடங்களில் மூலத்தின் உண்மைக்கருக்களிற்கு மிகவும் நெருங்கி வரவில்லையென்பதை அவர் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பழமொழிகளைப் போன்றே தோற்றம் தரும் நீதிவாசகங்கள், உவமைகள், திருக்குறளின் பகுதிகள், விடுகதைகள், வழக்காறுகள் இன்னபிறவற்றையும் அவர் பழமொழிகளாகக் கருதித் தொகுப்பில் இணைத்துள்ளார். 1850களில் நிலவிய அறிவார்ந்த நிலையை(intellectual level) எண்ணிப் பார்க்கும்போது, இதனை ஒரு குறையாக இன்று நாம் சொல்லமுடியாது, இவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திப் பாதுகாத்தமைக்கு பேர்சிவல் பாதிரியாருக்கு நாம் நன்றி கூறவேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்தம் ஐரோப்பியர் தமிழ்ப்பணி (2003, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) என்ற நூலில் பீற்றர் பேர்சிவல் கூறியவற்றின் நீட்சியாக அமையும் மேலதிக விளக்கங்களைத் தந்துள்ளார். சி.இளங்கோவின் பழமொழித் தொகுப்புகள் 1842-2000 என்ற நூலும்(2003, பல்கலைப் பதிப்பகம்), ஜெ.இராதாகிருஷ்ணனின் டாக்டர் பீட்டர் பெர்சிவல் என்ற தலைப்பிலான கட்டுரையும்(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு) எமது கவனிப்பிற்குரியவை. இம்மூன்று ஆய்வாளர்களும் கூறியவற்றை மீளவும் கூறுவதைத் தவிர்த்து அவர்கள் மூவராலும் பேசப்படாதனவற்றையும் அவர்களுடைய தவறுகளையுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘‘Almost immediatly after my arrival in this country in 1826...” என்று பேர்சிவல் பாதிரியார் 1874இல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறுவதை, பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரமும்(2003, பக்கம் 88), சி.இளங்கோவும்(2003, பக்கம் 31) மேற்கோள் காட்டியுள்ளனர். அம்மேற்கோள் தொடரை ‘‘பேர்சிவல் பாதிரியார் 1826இல் சென்னை வந்தடைந்தார்.” என இருவரும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் பீற்றர் பேர்சிவல் ‘‘this country” எனக் குறிப்பது இலங்கையையே ஆகும். 1874இல், பிரிட்டிஷ் இந்தியாவின் பாகமாகவே இலங்கையும் கருதப்பட்டது. இதனை உணராதவர்களாய் இவர்கள் தவறாகப் பொருள்கொண்டனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003) அவர்கள் 1843இல் வெளியான முதற்பதிப்பைப் பார்வையிடவில்லை என்றே நாம் கருதுகிறோம், 1874இல் வெளியான இரண்டாவது பதிப்பைத்தான் அவர் பார்வையிட்டுள்ளார். ஏனெனில் 1874 பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் குறிப்பிடும் விடயங்களையே அச்சொட்டாக மீளவும் குறிப்பிடுகிறார். 1843 பதிப்பில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் 1870, ஆனால் இரண்டாம் பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் ‘‘nearly nineteen hundred” என்றே குறிப்பிடுகிறார், இதனைப் பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003, பக். 88) ‘‘... அவர் 1900 பழமொழிகளைத் திரட்டி...” என்று கூறுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்ததாக மேற்கூறிய மூவரும் பேர்சிவல் பாதிரியார் அவர்கள் தமிழ்ப் பழமொழிகளை அகரவரிசையில்(நெடுங்கணக்கு) தந்துள்ளார் என்று மட்டுமே சொல்கிறார்கள், ஆனால் அகரவரிசையின் தன்மையை இவர்கள் நுணுகிக் கவனிக்கவில்லை. 1843இல் வெளியான பதிப்பில் பழமொழிகளின் முதல் எழுத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க பின்னிணைப்பு - 2C, 2D), 1874இல் வெளியான இரண்டாம் பதிப்பில் பழமொழியின் முதற்சொல்லின் அனைத்து எழுத்துகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு அகரவரிசைப்படுத்த முயன்றுள்ளார் (பார்க்க பின்னிணைப்பு - 3C, 3D). ஆனாலும் பல இடங்களில் வரிசைப்படுத்தலில் தவறுகள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக உள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேனாட்டவர்களாற் தொகுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழித்தொகுப்புகள் மூன்றை ஒப்பிட்டு, அவற்றின் பரிணாமவளர்ச்சியைக் காட்டும் அட்டவணை ஒன்றை ஆய்வாளர் சி.இளங்கோ தனது நூலின் 50ஆம் பக்கத்தில் தந்துள்ளார். இதில் பேர்சிவல் பாதிரியாரின் 1843பதிப்பில் இருமுறை வந்த பழமொழிகள் எதுவும் இல்லை என்பதாக அவரது அட்டவணை சொல்கிறது. ஆனால் உண்மையில் பேர்சிவல் பாதிரியார் ‘‘ஏதாகுதல் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.(325, 409)”, ‘‘குருடனுக்கு வேண்டியது கண்.(676, 713)” ஆகிய இரண்டு பழமொழிகளைத் தனது 1843பதிப்பில் இரு இடங்களில் இணைத்துள்ளார். ஆய்வாளர் சி.இளங்கோ அவர்களினால் இதனைக் கண்டுபிடிக்கமுடியாமற் போனமைக்குக் காரணம் அவர் அகரவரிசைப்படுத்தலை நுணுகி ஆராயாது விட்டமையே. இவ்விரு பழமொழிகளும் அருகருகாக வரிசைப்படுத்தப்படாமல் வெவ்வேறு பக்கங்களில் இடம்பெற்றமையினால் சி.இளங்கோவின் பறவைப் பார்வைக்கு அகப்படவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் பேர்சிவல் பாதிரியார் பயன்படுத்திய அகரவரிசை என்பது, முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதியில் காணப்படும், வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார் என்ற மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழகரவரிசை. இது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்றவாறு உள்ள ஒரு வரிசைப்படுத்தல். இது தமிழ் மொழியின் மரபான அகரவரிசையல்ல, எனவே பேர்சிவல் பாதிரியாரால் 1843இல் யாழ்ப்பாணத்திலும், 1874இல் சென்னையிலும் வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டையும் ஒன்றிணைத்து, மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுடன் (பார்க்க - தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும். பக்கம் XXIX) நாம் இப்பதிப்பினை உருவாக்கியுள்ளோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விடத்தில் பேர்சிவல் பாதிரியார் தொகுத்துப் பதிப்பித்தவற்றை, பிறிதானதொரு அகரவரிசைப்படுத்தலுடன் மீளவும் பதிப்பித்தல் மரபுமீறல் ஆகாதோ என்றும், ஏன் இரண்டு பதிப்புகளையும் ஒன்றிணைக்கவேண்டும் எனும் கேள்வியும் சிலருக்குத் தோன்றலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கான விடை - நோக்குநூல்கள் பல வகைப்படும். அகராதிகள், ஆய்வடங்கல்கள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள், தொகுப்புகள் ஆகியன நோக்குநூல்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்நோக்குநூல்களில் தரவுகள் பொருண்மையின் அடிப்படையில், காலவரிசையில், எண்வரிசையில் அல்லது அகரவரிசையில் அடுக்கப்படும். ஏன் இவ்வாறு அடுக்கப்படுகின்றன என்பதற்குக் காரணம், நோக்குநூல்களில் அடுத்தடுத்துக் காணப்படும் தரவுகள் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நோக்குநூலான பழமொழித் தொகுப்பில், பழமொழிகளை அகரவரிசையில் அமைத்துத் தந்துள்ளார் பேர்சிவல் பாதிரியார். இது பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று. நூலில் அடுத்தடுத்துக் காணப்படும் பழமொழிகளும் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. இவற்றை மரபார்ந்த தமிழகரவரிசையில் அடுக்கித் தருவதில் எந்தவித பொருள் இழப்பும் ஏற்படப்போவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவரால் சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட தரவுகள் வேறொருவரால் பிறிதொரு ஒழுங்கில் வரிசைப்படுத்தியமைக்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பிக்கப்பட்டபோது, ஓலைச்சுவடியில் தொகுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து முன்னேற்றங்கண்டு இன்று அச்சில் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. அச்சில் வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் தங்களுடைய தமிழ் அறிவின் துணைகொண்டு சதுரகராதியின் அச்சுப்பதிப்பில் மேம்படுத்தலைச் செய்துள்ளார்கள். இதனைத் தமிழ் லெக்சிகன் முன்னுரையில் (1936) எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள்<br />
<blockquote class="tr_bq">
‘‘In these editions, the several meanings of a word are arranged in alphabetical order; but the manuscripts do not support this arrangement.” (பக்கம் XXXVII) </blockquote>
<br />
என்று பதிவு செய்துள்ளார். தமிழ் அகராதிக்கலை(1965) என்னும் நூலில் பேராசிரியர் சுந்தரசண்முகனார்<br />
<blockquote class="tr_bq">
‘‘ஆசிரியரால் ஒரு சொல்லுக்குரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.” (பக்கம் 379) </blockquote>
<br />
என்று பதிவு செய்துள்ளார்.சதுரகராதியின் ஓலைச்சுவடிப் பதிப்பு, அச்சுப் பதிப்பு ஆகியவற்றில் இருந்து தாரம், வரி என்ற இரண்டு சொற்களையும் அவற்றிற்கான பொருள்விளக்கச் சொற்களையும் எடுத்துக்காட்டாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, சுந்தரசண்முகனார் ஆகிய இருவரும் தந்துள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் தமிழியல் ஆய்விதழின் 45வது இதழில் (June 1994) தமிழ் அகராதிகளின் அகர வரிசையும் அமைப்பும் - முதல் மூன்று ஒரு மொழி அகராதிகள் என்ற தலைப்பில் முத்துசண்முகன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில்<br />
<blockquote class="tr_bq">
‘‘இதனால் அடிகளார் தொகுத்த அகராதியின் உண்மை வடிவினைக் காண இயலாமற்போயிற்று” </blockquote>
<br />
என்று ஆதங்கப்படுகிறார். இவ்வாறு ஆதங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை, ஏனெனில் குறைபாடுகள் உள்ள ஒரு பதிப்பைவிட முன்னேற்றமான தவறில்லாத பதிப்பே பெரும்பயன்தரும் ஒன்றாகுமல்லவா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்கூறப்பட்டவாறு சதுரகராதி அச்சுப் பதிப்பில் பின்பற்றப்பட்டதைப் போன்று இப்பதிப்பில் நாம் மரபார்ந்த தமிழ் அகரவரிசையில் பழமொழிகளை வரிசைப்படுத்தியுள்ளோம். இது எந்தவிதத்திலும் மரபு மீறல் ஆகாது. <b>அகரவரிசைப்படுத்தலில்</b> பேர்சிவல் பாதிரியாரின் முதற் பதிப்பைவிட இரண்டாம் பதிப்பு முன்னேற்றமுடையது, அதுபோன்று இப்பதிப்பு 1874 பதிப்பைவிட முன்னேற்றமுடையது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியாரின் பதிப்புகளில் பழமொழி ஒவ்வொன்றிற்கும் வழங்கப்பட்ட எண்ணும், அப்பழமொழி எந்தப் பக்கத்தில் இடம்பெற்றதென்பதும், பதிப்பாண்டும் இப்பதிப்பில் பகர அடைப்பினுள் தரப்பட்டுள்ளது. பேர்சிவல் பாதிரியாரின் பதிப்பு உண்மை வடிவினைக் காண விரும்புவோர், பகர அடைப்பினுள் குறிப்பிடப்படும் எண்களின் அடிப்படையில் பழமொழிகளை வரிசையாக அடுக்குவதன்மூலம் கண்டடையலாம். 1843பதிப்பில் இருமுறை இடம்பெற்ற பழமொழிகள் இரண்டு. 1333, 1536 ஆகிய இரு எண்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை, 637 என்ற எண் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது, இவ்வகையில் 1843 பதிப்பில் இடம்பெற்ற பழமொழிகள் 1870 ஆகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து, இரண்டு பதிப்புகளையும் ஏன் ஒன்றிணைத்தோம் என்பதற்கான விளக்கம். ஈழமும் தமிழகமும் கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் இரு தமிழ் நிலங்கள். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு வழக்காறுகளும், உச்சரிப்புகளும் காணப்படுகின்றன. பேர்சிவல் பாதிரியாரின் 1843 பதிப்பானது யாழ்ப்பாணத்துப் பதிப்பாகவும், 1874 பதிப்பானது தமிழகத்துப் பதிப்பாகவும், அந்நிலங்களின் முதற்பதிப்புகளாகவும் இருப்பதனால் இரு பதிப்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தமிழ்நிலங்களிலும் நிலவிய வழக்காறுகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிரவும் முதற்பதிப்பில் தரப்பட்டிருந்த 1870 பழமொழிகளில் இருந்து 1765 பழமொழிகளுக்கு இரண்டாம் பதிப்பில் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளார் பேர்சிவல் பாதிரியார், இதனால் இருவேறுவிதமான மொழிபெயர்ப்பையும் ஓரிடமாகப் பார்க்கலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்புதிய பதிப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்ற 90 விழுக்காடு பழமொழிகளுக்குப் பேர்சிவல் பாதிரியார் ஏன் மீண்டும் புதிய மொழிபெயர்ப்புகளைச் செய்தார் என்ற விடயம் எமக்குக் குழப்பம் தருவதாகவே இருந்தது. இந்நிலையில் பேர்சிவல் பாதிரியார் தொடர்பில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதாக அறிந்து அவரைச் சென்னையில் சந்தித்து உரையாடினோம். பேர்சிவல் பாதிரியார் சேகரித்த தமிழ்ப் பழமொழிகளை ஓலைச்சுவடியில் பதிந்து வைத்திருந்ததாகவும், அவ்வோலைச் சுவடியை மதுரை இறையியல் கல்லூரியின் ஆவணக்காப்பகத்தில் இன்றும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்மூலம் அறிந்துகொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்று தமிழகம் திரும்பிய பேர்சிவல் பாதிரியாரிடம் 1843இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திருட்டாந்த சங்கிரகம் புத்தக வடிவில் இருந்திருக்கவில்லைப் போலும், தமிழ் ஓலைச் சுவடியையே பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். இதனாற்றான் அவரால் 1874பதிப்பு முன்னுரையில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்றிருந்த பழமொழிகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லமுடியவில்லை, புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தந்துள்ளார், ஆனால் சென்னைப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புடன் மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தருகிறார். 1874 பதிப்பில் உள்ள 6156 பழமொழிகளில் இருந்து 412 பழமொழிகளுக்கு மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தந்துள்ளார், இதில் 232 பழமொழிகள் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் உள்ளவை. ஈழத்தில் அவர் முதன்முதலாக இறைபணி தொடங்கிய இடம் திருகோணமலை என்பது 1072ஆம் இலக்கப் பழமொழிக்குத் தரும் கூடுதல் விளக்கத்தில் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<span style="white-space: pre;"> </span></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியாரினால் 1874இல் வெளியிடப்பட்ட பதிப்பு இதுவரையில் 6 தடவைகள் இந்தியாவில் மீளவும் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ள விபரத்தைக் கீழே தரப்பட்ட அட்டவணை மூலம் அறிந்துகொள்ளலாம்.<br />
<br />
<table border="0" style="border-spacing: 1px; border-style: solid; border-width: 1px; margin: 1px; padding: 1px 4px;">
<tbody>
<tr>
<td class="auto-style4" style="border: 1px solid #CCCCCC;">1.</td>
<td class="auto-style2" style="border: 1px solid #CCCCCC;">1877</td>
<td class="auto-style3" style="border: 1px solid #CCCCCC;"> Tamil Proverbs with their English Translation.</td>
<td style="border: 1px solid #CCCCCC;">Higginbotham and Co, Madras.</td>
</tr>
<tr>
<td class="auto-style4" style="border: 1px solid #CCCCCC;">2.</td>
<td class="auto-style2" style="border: 1px solid #CCCCCC;">1996</td>
<td class="auto-style3" style="border: 1px solid #CCCCCC;">Tamil Proverbs with their English Translation.(AES First Reprint) </td>
<td style="border: 1px solid #CCCCCC;">Asian Educational Services, New Delhi.</td>
</tr>
<tr>
<td class="auto-style4" style="border: 1px solid #CCCCCC;">3.</td>
<td class="auto-style2" style="border: 1px solid #CCCCCC;">2001</td>
<td class="auto-style3" style="border: 1px solid #CCCCCC;">Tamil Proverbs with their English Translation.(AES Second Reprint)</td>
<td style="border: 1px solid #CCCCCC;">Asian Educational Services, New Delhi.</td>
</tr>
<tr>
<td class="auto-style4" style="border: 1px solid #CCCCCC;">4.</td>
<td class="auto-style2" style="border: 1px solid #CCCCCC;">2002</td>
<td class="auto-style3" style="border: 1px solid #CCCCCC;">Tamil Proverbs with their English Translation.(AES Third Reprint)</td>
<td style="border: 1px solid #CCCCCC;">Asian Educational Services, New Delhi.</td>
</tr>
<tr>
<td class="auto-style4" style="border: 1px solid #CCCCCC;">5.</td>
<td class="auto-style2" style="border: 1px solid #CCCCCC;">2010</td>
<td class="auto-style3" style="border: 1px solid #CCCCCC;">தமிழ்ப் பழமொழிகள் </td>
<td style="border: 1px solid #CCCCCC;">வசந்தா பதிப்பகம், சென்னை.</td>
</tr>
<tr>
<td class="auto-style4" style="border: 1px solid #CCCCCC;">6.</td>
<td class="auto-style2" style="border: 1px solid #CCCCCC;">(2019)</td>
<td class="auto-style3" style="border: 1px solid #CCCCCC;">Tamil Proverbs with their English Translation.</td>
<td style="border: 1px solid #CCCCCC;">The Asian Publications,Royapettah, Chennai.</td>
</tr>
</tbody></table>
<br />
மேற்காட்டப்பட்டுள்ள பதிப்புகளில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் காணப்பட்ட வடிவத்திலான பழமொழிகள் இடம்பெறவில்லை. ஓர் எடுத்துக்காட்டினை மட்டும் பதச்சோறாக இங்கு குறிப்பிடுவோம்,</div>
<div style="text-align: justify;">
<i style="text-align: left;"><br /></i></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><b>சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.</b></span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><b>Though one carries a thousand <span style="color: red;">conchs</span> to Benares, his sin sticks to him. </b></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<span style="text-align: right; white-space: pre;">[1874 Edition - Number:3057 / Page:287]</span></div>
<div style="text-align: center;">
<span style="text-align: left; white-space: pre;"><b>சங்காயிரங்கொண்டு வங்காளம்போனாலுந் தன்பாவந் தன்னோடே.</b></span></div>
<div style="text-align: left;">
<span style="white-space: pre;"><b>Though one freights his vessel with a thousand <span style="color: blue;">Chanks</span> and sails to Bengal his own crimes will accompany him.</b></span></div>
<div style="text-align: left;">
<div style="text-align: center;">
<span style="text-align: right; white-space: pre;">[1843 Edition - Number:827 / Page:116]</span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<br />
இது நேரடிப்பொருள் தரும் ஒரு பழமொழி. யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள ‘<b>வங்காளம்</b>’ என்பது சென்னைப் பதிப்பில் ‘<b>காசி</b>’என்பதாக மாறுகிறது. ‘வங்காளம்’ ஏன் ‘காசி’யாக மாறியதென்பதற்குப் பின்னால் சுவைமிகு சமூக வரலாறு ஒன்று உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதயதாரகைப் பத்திரிகையில் 1841ம் ஆண்டு வெளியான புதினச் செய்திகளைக் கொண்டு இதனை விளக்கலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1841ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி வெளியான உதயதாரகையில்<br />
<blockquote class="tr_bq">
“காரதீவிலிருந்து கற்பிட்டிக்குப் போகவெண்ணின பயணக்காரர் மூன்றுபேரும் தவால்காரனுந் தோணி ஏறிப்போகையிலே காற்று எதிர்த்தடிக்க அந்த நாலுபேர்களுந் தொணியைப் பலனாகப் பிடித்திருந்தும் காற்றில் தோணி உலைவுகொண்டு அங்குமிங்கும் போகத் திரை எழும்பத் தவாற்காரன் கைவிட்டமிழ்ந்திறந்தான்.” </blockquote>
<br />
என்ற புதினச் செய்தி பிரசுரமாகியுள்ளது. அன்றைய நாட்களில் நீண்ட தூரப் பயணம் என்பது கடற்பயணம் ஆகும் என்பதை இச்செய்தியின் மூலம் நாம் ஊகிக்கலாம். இலங்கையின் கிழக்குக்கரைக் காரைதீவில் இருந்து மேற்குக்கரைக் கற்பிட்டிக்குச் செல்வதற்கான பிரயாண வழியென்பதே கடல் மார்க்கமாகவே இருந்துள்ளபோது, இந்தியாவில் உள்ள காசிக்குப் போவதென்பதும் கடற்பயணமாகவே இருந்திருக்கும். காசிக்கு அண்மித்ததான கப்பல் வழியென்பது வங்காள தேசத்தினூடகவே அமையும்.<br />
<blockquote class="tr_bq">
“பருத்தித்துறைக்கு அருகான வல்லுவட்டித்துறையிற் செய்யப்பட்டும், சங்கேற்றிக்கொண்டு வங்காளத்திற்கு முதற் பயணம் போனதும், (௨௱௫௰) தொன் (Ton) பாரங்கொண்டதுமான படவொன்று சிறிதுநாட்களுக்குமுன் அடித்த புசலினாற் சென்னபட்டணத்திற் செதப்பட்டுப்போயிற்று.” </blockquote>
<br />
ஈழத்தில் இருந்து வங்காளத்திற்கு கப்பல் மூலம் சங்கு வாணிபம் செய்யப்படுகிற ஒரு நிலையும் இருந்துள்ளதை 1841ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி உதயதாரகையில் வெளியான இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவ்விரு செய்திகளினூடாக யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள மேற்குறித்த பழமொழியில் ‘வங்காளம்’ என்ற சொல் இடம்பெற்றது இயல்பானதென அறிந்துகொள்ளலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலிரு பதிப்புகளிலும் இடம்பெற்றவாறே பழமொழிகள் இப்பதிப்பிலும் இடம்பெறுகின்றன, அதாவது முதலிரு பதிப்புகளிலும் காணப்படுகிற தவறுகள் எதையும் திருத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. இதனை நாம் ஒரு ஆவணப் பதிப்பாகவே செய்துள்ளோம், ஆய்வுப் பதிப்பல்ல. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேர்சிவல் பாதிரியார் பழமொழிகளைத் தொகுத்தது வெளியிட்டது போன்று, ஈழத்தவர்கள் சிலரும் பிற்காலத்தில் பழமொழி நூல்களை வெளியிட்டுள்ளார்கள் என்ற செய்தியை சி.இளங்கோ தனது நூலில் பதிவு செய்துள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் வெளியீடுகள் பின்வருமாறு, </div>
<div style="text-align: justify;">
<ol>
<li>1914 - பழமொழிப் போதனை - சி.ஆர்.சாஸ்திரி (பாடல் வடிவில்)</li>
<li>1916 - பழமொழித் தீபிகை - நாவலர் அச்சுக்கூடம் - பருத்தித்துறை <span style="white-space: pre;"> </span>வே.ஆ.சிதம்பரப்பிள்ளை (160 பழமொழிகளுக்கு விளக்கம்)</li>
<li>1932 - விவசாயம் பற்றிய பழமொழிகள் - சபாரத்தினசிங்கம்</li>
</ol>
</div>
<div style="text-align: justify;">
<span style="white-space: pre;"> </span>தமிழில் வெளியான மிக முக்கியமான சில அகராதிகளின் தொகுப்பு முயற்சிகளிலும், பதிப்பு முயற்சிகளிலும் தோன்றாத்துணையாக உடன் நின்றவர் பேர்சிவல் பாதிரியார். ஆயினும் அவர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டும் அவரது சுயமுயற்சியின் அறுவடை. எனவே அவரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழித் தொகுப்புகளை இணைத்து மீளவும் வெளியிடும் நல்வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம்முன்னுரையில் தொகுப்பியல், அகராதியியல் நோக்கில் எமது கருத்துக்கள் சிலவற்றைக் கூறியுள்ளோம். இம் மீள்பதிப்பு முயற்சியில் எம்முடன் இணைந்து பணியாற்றிய நண்பர் <b>அ.சிவஞானசீலன்</b> பழமொழிகள் தொடர்பில் நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்புப் பணியில் உதவிய நண்பர் முத்தையா வெள்ளையன் அவர்களுக்கும், ஆங்கிலப் பகுதியைச் செவ்வை பார்த்து உதவிய ஹாட்லிக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான ச. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பக்க வடிவமைப்பில் உதவிய கலைச்செல்வன், சிறீனிராஜ், சடகோபன் ஆகியோருக்கும், பேர்சிவல் பாதிரியார் கோட்டோவியத்தினை வரைந்து தந்த சௌந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருபா குமரேசன் <span style="white-space: pre;"> </span><br />
13.11.2018</div>
<div style="text-align: justify;">
<span style="white-space: pre;"> </span>t.kumaresan@viruba.com</div>
</div>
விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-72932677957144951432017-06-23T11:12:00.001+05:302017-07-04T23:28:09.761+05:30கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiiwKPBZwm_nxswgwy8z_L25MnoP2m2Hsdb5ZV_qSAAzofIRy12mvcJtSyzhY4IpV-TA9s9CZXe-ExHkVlKPpI1T9zL0Xorj39KXkH6VkpFDdWbvOIqvxqM1fmRj5tnza-MJngIg/s1600/IMG_20170622_170543709.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1172" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiiwKPBZwm_nxswgwy8z_L25MnoP2m2Hsdb5ZV_qSAAzofIRy12mvcJtSyzhY4IpV-TA9s9CZXe-ExHkVlKPpI1T9zL0Xorj39KXkH6VkpFDdWbvOIqvxqM1fmRj5tnza-MJngIg/s640/IMG_20170622_170543709.jpg" width="467" /></a></div>
<div style="text-align: center;">
<b style="font-family: latha; font-size: small;">( நெய்தல் ஆய்வு - ஏப்ரல் 2017 )</b></div>
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><br /></span>
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">A Manual Dictionary of the Tamil Language </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற ஆங்கிலத் தலைப்புப் பெயருடன் அமெரிக்க மிஷனரியினால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகராதியின் தமிழ்ப் பெயர் - </span><span lang="ta" style="font-family: "latha"; font-weight: bold;">பெயரகராதி</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> ஆகும். இது 1842 இல் மானிப்பாயில் உள்ள அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வகராதியைக் </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">கையகராதி</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">(மனுவல் அகராதி), யாழ்ப்பாண அகராதி, மானிப்பாய் அகராதி, விரிவகராதி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் வழக்கம் உள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதிகளை உருவாக்கத் தலைப்பட்டனர். இத்தமிழ்-தமிழ் அகராதியானது, உள்ளூர்த் தமிழ்ப் பண்டிதர்களின் துணையுடன், ஜோசப் நைற் (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Joseph Knight) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Levi Spaulding) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களால் நிறைவு செய்யப்பட்டது. வெஸ்லியன் மிஷன் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரும் இவ்வகராதி உருவாக்கத்திற்கு உதவியுள்ளார். இவ்வகராதிப் பணியில் உள்ளூர்த் தமிழ்ப் புலமையாளர்கள் பலரும் பணியாற்றியுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த காபிரியேல் திசேரா, உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகர பண்டிதர், இருபாலையைச் சேர்ந்த சேனாதிராய முதலியார், அளவெட்டியைச் சேர்ந்த எவாட்ஸ் கனகசபாபிள்ளை, உடுவிலைச் சேர்ந்த மயில்வாகனன், நவாலியைச் சேர்ந்த வி.வயிரமுத்துப்பிள்ளை, சுவாமிநாதர் ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். அந்நாட்களில் உடுவில் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவிகளும் அகராதிச் சொற்களைப் படியெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வகராதித் திட்டத்தில் ஈடுபட்ட மிஷனறிகள் எழுதிய ஆரம்பகாலப் பதிவுகள் \ குறிப்புகள் மேற்கூறிய தகவல்களைத் தருவதாக உள்ளன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<b><span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;">கையகராதியின்</span><span lang="en-IN" style="font-family: "latha"; text-decoration: underline;"> </span><span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;">இரு</span><span lang="en-IN" style="font-family: "latha"; text-decoration: underline;"> </span></b><span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;"><b>பிரதிகள்</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">கையகராதியின் இருவேறு பிரதிகளும் தமிழ் அகராதியியல் ஆய்வாளர்கள் மத்தியில் இன்னமும் பிரித்து உணரப்படாத நிலையே காணப்படுகிறது. உண்மையில் வேறு வேறான இரு பிரதிகள் உள்ளனவென்பதையே தமிழ் ஆய்வாளர்கள் பலரும் அறியவில்லை. </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1865 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">முதல் 2016 வரையில் கையகராதித் தொடர்பில் காணப்படும், பதிவுகளினூடாகப் பிரதி வேறுபாடுகளைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.</span><span style="font-family: "latha";"> </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3uvVsCNzhNOyNXdxHo2Dfh0O93BA8Y2jCSp8e9JD0SRZ1mf91dREP0iemCKnJ77llGvMDx2daA_7XbeM8wxipxUCz_ks_UUJOQQfbcqHaDxr-TjByYgVyagfWDk0NW0iAoQg2Bw/s1600/1842_Man_Dicy_Both.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="641" data-original-width="1354" height="302" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3uvVsCNzhNOyNXdxHo2Dfh0O93BA8Y2jCSp8e9JD0SRZ1mf91dREP0iemCKnJ77llGvMDx2daA_7XbeM8wxipxUCz_ks_UUJOQQfbcqHaDxr-TjByYgVyagfWDk0NW0iAoQg2Bw/s640/1842_Man_Dicy_Both.jpg" width="640" /></a></div>
<span style="font-family: "latha";">தரப்பட்டுள்ள அட்டவணை கையகராதியின் இருவேறு பிரதிகளையும் பார்வையிட்டு உருவாக்கப்பட்டதாகும்.</span></div>
<o:p></o:p><br />
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">1865 இல் </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">John Murdoch </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்கள் தனது </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Classified Catalogue of Tamil Printed Books </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற நூற்றொகையில் 1849 இல் வெளியான களத்தூர்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">வேதகிரி</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">முதலியார்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களின்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">தொகைப்பெயர் விளக்கம் என்ற நூலிற்கான பதிவில் கையகராதியினை </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Tamil Dictionary </span><u><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;">with</span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"> </span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;">additions</span></u><span lang="en-IN" style="font-family: "latha"; font-weight: bold;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மேலதிக சேர்க்கைகள் இல்லாத ஒரு தமிழ் அகராதி அதாவது கையகராதியின் பிறிதொரு பிரதி உள்ளதென்று கருதுவதற்கு இடம் தருவதாகக் கொள்ளலாம்.</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> 1985 இல் மு.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது தமிழ்-தமிழ் அகரமுதலியின் முன்னுரையில் ( பக்கம் 11 ) குறிப்பிடும் "</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-size: 9.0pt;">இதில் பொருள், தொகை, தொடை அகராதிகள் இல்லை, ஆயினும் பின்னர் அச்சிட்டோர் சதுரகராதியில் உள்ளபடி அவற்றையும் அச்சிட்டுச் சேர்த்து இணைப்பாராயினர்</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">" என்ற சொற்றொடரின் மூலம், கையகராதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் உள்ளதைப் பூடகமாக அறிந்துகொள்ளமுடியும். மு.சண்முகம்பிள்ளை அவர்களைத் தவிர வேறெவரும் இந்த அளவிற்குக்கூட இதனை உணரவில்லை, வெளிப்படுத்தவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> 2000 ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Gregory James) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களின்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> Col-porul - A History of Tamil Dictionaries </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற நூலானது 908 பக்கங்களைக் கொண்டது. தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கும் கிடைக்கப்பெறாத மூலங்களை இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களிற் பெற்று நூலில் இணைத்ததன் மூலம் அதனைக் கனதியாக்கியவர். இந்நூலில் மூன்று இடங்களில் காணப்படும் குறிப்புகள், கையகராதியின் பிரதி வேறுபாடுகளைப் பக்க எண்ணிக்கையின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 39.5pt; margin-right: 20.0pt; mso-level-indent: 14.0pt; mso-level-language: en-IN; mso-level-number-format: arabic; mso-level-text: "%1\."; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -14.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "latha"; font-size: 10pt; unicode-bidi: embed;">1.</span><span style="width: 8.75pt;"> </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">page 163 - "The first edition of the dictionary has 58500 entries in three parts : </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பெயரகராதி ( </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">meanings ), </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பொருளகராதி ( </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">synonyms ), </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">தொகையாகராதி ( </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">associatives ) in </span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;"><span dir="ltr"></span>898 pages.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">"</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 39.5pt; margin-right: 20.0pt; mso-level-indent: 14.0pt; mso-level-language: en-IN; mso-level-number-format: arabic; mso-level-text: "%1\."; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -14.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "latha"; font-size: 10pt; unicode-bidi: embed;">2.</span><span style="width: 8.75pt;"> </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">page 166 - " Spaulding also included some personal details which a bearing upon his lexicographical work : This is the short history of the two Dictionaries which have occupied my attention more or less during the last 3 years and 10 months of my missionary life. One purely Tamul of </span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;"><span dir="ltr"></span>771 pages</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> & the other English and Tamul of about 860 pages in small type & in a large octavo size. "</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 39.5pt; margin-right: 20.0pt; mso-level-indent: 14.0pt; mso-level-language: en-IN; mso-level-number-format: arabic; mso-level-text: "%1\."; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -14.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "latha"; font-size: 10pt; unicode-bidi: embed;">3.</span><span style="width: 8.75pt;"> </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">page 186 - " Thus where finished these two dictionaries ( one purely Tamul </span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;"><span dir="ltr"></span>771 pages</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> and about 58500 words ; and the other English words with Tamul definitions of about 860 pages, both in small type in a large octavo size ) in five years and three months"</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: 20.0pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">மேலே காட்டப்பட்ட மூன்று குறிப்புகளில் முதலாவது - நூலாசிரியர் </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Gregory James </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களின் சொற்கள், மற்றைய இரண்டும் கையகராதியை உருவாக்கிய அமெரிக்க மிஷனரியைச் சேர்ந்த ஸ்பால்டிங், வின்ஸ்லோ ஆகியோரின் சொற்களாக உள்ளன.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இதன்வழி அமெரிக்க மிஷனரிகள் தமிழ் அகராதியெனக் குறிப்பிடுவது 674 பக்கங்களில் உள்ள அகராதி என்ற பகுதியையும், 97 பக்கங்களில் உள்ள அனுபந்த அகராதி என்ற</span><span style="font-family: "latha";">பகுதியையும் சேர்த்து உள்ள 771 பக்கங்களில் அமைந்து, அண்ணளவாக 58500 சொற்களுக்குப் பொருள் கூறும் பெயரகராதியைத்தான்.</span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> மேலும் அமெரிக்க மிஷனரிகள் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதி மூன்று பிரிவுகளைக் கொண்டது என்றவாறான குறிப்புகள் \ பதிவுகள் எதையும் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். கையகராதியின் பக்கங்களுக்கு எண் வழங்கப்பட்டுள்ள ( அகராதி முதல் அனுபந்த அகராதி முடிவு வரைக்கும் தொடர்ச்சியான எண் தமிழில் உள்ளது. ) முறையும் இதனை உறுதி செய்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> 898 பக்கமுள்ள கையகராதியில் அதாவது மேலதிக பிற்சேர்க்கைகளுடன் கூடிய கையகராதியில், பிழை திருத்தத்திற்குப் பின்னரே இரண்டாவது - பொருளகராதி தொடங்குகிறது. அதன் பின்னர் மூன்றாவது - தொகையகராதி இடம்பெறுகிறது. இவ்விரண்டு பிரிவுகளுக்கும் மீண்டும் 1 முதல் பக்க எண் வழங்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இவ்விரு பிரிவுகளுக்கும் தனித்தனியான பாயிரப் பாடல்களும் உள்ளன. </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> கிரகரி ஜேம்ஸ் (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Gregory James) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்கள், தமக்குக்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">கிடைத்த</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> The American Board of Commissioners for Foreign Missions (ABCFM) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">குறிப்புகளில் காணப்படும் கையகராதி 771 பக்கங்களைக் கொண்டது என்ற தகவலைப் பார்வையிட்டபின்னரே கையகராதி 898 பக்கங்களைக் கொண்டது என்றும், 58500 சொற்களுக்குப் பொருள் கூறும் பதிவுகள் உள்ளனவென்றும் எழுதியுள்ளார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> கிரகரி ஜேம்ஸ் (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Gregory James) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்கள், குறித்த ஒரே கையகராதி எவ்வாறு </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>127 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பக்கங்கள்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">வேறுபாடு</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">கொள்ள</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">முடியும்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்பதை</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவதானிக்கவில்லை</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">ஆராயவில்லை</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">. </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">ஸ்பால்டிங் அவர்களும் பின்னர் ஜோன் மார்டெக் அவர்களும் கையகராதி </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">octavo (8vo) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அளவுடையது என்பதைப் பதிவு செய்துள்ளார்கள், ஆனால் கிரகரி ஜேம்ஸ் அவர்கள் கையகராதியின் அளவு தொடர்பில் எதையும் கூறவில்லை.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">மேலும் அவர் தனது நூலில் 162வது பக்கத்தில் குறிப்பிடும் "</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">... </span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">which had been begun by Knight with the assistance of A.Chandrasekar Panditar of Uduvil, Senathiraya Mudaliyar and Vedagiri Mudaliar,....</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">" </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற வாசகமானது சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் அவர்கள், கையகராதித் திட்டத்தில் ஆரம்பம் முதலே பங்கெடுத்து, உதவியுள்ளார் என்ற பொருள்படும்படி கூறுவது அபத்தமானதொன்றாகும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> உண்மையில் அமெரிக்க மிஷனரிகள் உருவாக்கிய </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;"><span dir="ltr"></span>771</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> பக்கங்கள் கொண்ட, அ முதல் வௌ வரை முற்றிலும் ஒரே தொகுதியாக அமைத்து, உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்ற வரிசையில் தலைச்சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கப்பட்டு, அதாவது அ..., அஃகல்..., அகக்காழ்...., அகோரம்..., அக்கடி... என்றவாறான வரிசைப்படுத்தல் முறையுடன், அண்ணளவாக 58500 சொற்களுக்குப் பொருள்கூறும் கையகராதி உருவாக்கத்தில், சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. அவர் உதவியுடன் கையகராதி உருவாக்கப்படவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> நிகண்டுகளில் காணப்படும் பகுப்பாக்க முறையின் தொடர்ச்சியாகவே, தமிழின் முதல் அகராதியான சதுரகராதி உருவாக்கப்பட்டிருந்தது. அதில் காணப்பட்ட பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்ற நான்கு பிரிவுகள் காரணமாகவே சதுரகராதி என்ற பெயரும் அமைகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> இவ்வாறாகப் பல பிரிவுகளைக்கொண்ட நிகண்டுகள், பின்னர் நான்கு பிரிவுகளுடனான சதுரகராதியின் பயன்பாட்டில் நிறைவு கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களுக்கு, அ முதல் வௌ வரை முற்றிலும் ஒரே தொகுதியாக</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அமைந்த</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">கையகராதி</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">உவப்பானதாக</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இருந்திருக்கவில்லை</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இதன் காரணமாகவே மேலதிக பிற்சேர்க்கைகள் கையகராதியில் இணைக்கப்படவேண்டிய நிலை வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு மற்றிரு பிரிவுகளும் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்டமையும் 1865 இற்குள் நிகழ்ந்துள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> இரண்டாவது பொருளகராதி என்பது 70 பக்கங்களுடன் கையகராதியின் மேலதிக பிற்சேர்க்கையாக உள்ளது. இது யாரால் தொகுக்கப்பட்டது என்பது பற்றிய செய்திகள் எங்கும் காணப்படவில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> மூன்றாவதாகத் தொகையகராதி 31 பக்கங்களில் அமைகிறது. இதனை மதுரைக் கல்விச் சங்கத்தைச் சேர்ந்த களத்தூர் வேதகிரி முதலியார் அவர்கள் தொகுத்துள்ளார்கள். ஏற்கனவே நாம் கூறியபடி, 1865 இல் </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">John Murdoch </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்கள் தனது </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Classified Catalogue of Tamil Printed Books </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற நூற்றொகையில் 1849இல் வெளியான களத்தூர்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">வேதகிரி</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">முதலியார்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களின்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">தொகைப்பெயர் விளக்கம் என்ற நூலிற்கான பதிவின் மூலமும், கையகராதியில் இடம் பெற்றுள்ள உடுவை நகர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை ( </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Williams Nevins ) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அவர்களால் எழுதப்பட்ட இருபத்துநான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மூலமும் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.</span><span style="font-family: "latha"; text-align: center;"> </span><span style="font-family: "latha"; text-align: center;"> </span></div>
<div class="MsoNormal" style="margin-right: 0.5pt; text-align: center;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg87dyp12HTcmwaousKXuMMV5NjP1pZp50Px99jjy_Mzk_CSRoPxCwv16fHDOVibWnUeUnNPAqrR72V7cXLKSKiXLZXtpaejuKZwG4Pa05O9s6cNjqheh0UEz09Jpu4rVPQkffIZQ/s1600/1842_Nevis_Paayiram.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg87dyp12HTcmwaousKXuMMV5NjP1pZp50Px99jjy_Mzk_CSRoPxCwv16fHDOVibWnUeUnNPAqrR72V7cXLKSKiXLZXtpaejuKZwG4Pa05O9s6cNjqheh0UEz09Jpu4rVPQkffIZQ/s640/1842_Nevis_Paayiram.jpg" width="640" /></a></div>
<o:p></o:p><br />
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="font-family: "latha";">நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஆசிரியவிருத்தத்தின் பின்னிரு பாடல்களும், கையகராதி, அச்சடிக்கப்பட்ட பின்னர்தான், அனுபந்தமாக களத்தூர் வேதகிரி முதலியாரின் ஆக்கம் சேர்க்கப்பட்டது என்பதைப் பதிவு செய்கின்றன.</span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> இதில், முரணான விடயமும் ஒன்றுள்ளது. மேலதிக பிற்சேர்க்கைகள் இல்லாத கையகராதியிலும், நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அதே ஆசிரியவிருத்தம் உள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> இது எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்தறியலாம். </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டை அமெரிக்க செமினரியின் மாணவர்களில்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">ஒருவர்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, 1838</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இல் கற்றுத் தேறியவர்.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">வட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் தொகுப்பு வேலைகளில் வின்ஸ்லோ, ஸ்பாடிங்கு, ஹச்சிங்ஸ் ஆகியோர்களுக்கு உதவி செய்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சென்னைவரை சென்று இதில் ஈடுபட்டுள்ளார். வேதகிரி முதலியாரும் 1841இல், அமெரிக்க மிஷன் வெளியிட்ட உதயதாரகை இதழில் ஆக்கங்களை எழுதிய <b>தமிழகர்களில்</b> ஒருவர். இவ்வாறாக அமெரிக்க மிஷனரிகளுடன் நெருக்கத்தைப் பேணியவர்களாக இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். இதன் காரணமாக வேதகிரி முதலியார் அவர்களால் தொகுக்கப்பட்ட தொகையகராதி, கையகராதியுடன் அனுபந்தமாக இணைக்கபடவுள்ளதை முன் அறிந்தவராக நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே இவ்விடயம் ஆசிரியவிருத்தத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்று கொள்ள இடம் உள்ளது. இஃது எனது அனுமானம் மட்டுமே, தவறாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அறுதியாகக் கூறவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> 1954இல் தூரன் அவர்களாற் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய அகராதி என்ற தலைப்பிலான கட்டுரையிலும், பாவலர் சரித்திர தீபகத்தினை ஆராய்சிக் குறிப்புகளுடன் 1975இல் பொன் பூலோகசிங்கம் அவர்கள் பதிப்பித்தபோது, ஆதிமூலமுதலியார் பற்றிய செய்திக்கு எழுதிய குறிப்பிலும், சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தம் எழுதினார் என்ற பதிவுகள் உண்டு. 1985இல் மு.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது தமிழ்-தமிழ் அகரமுதலியின் முன்னுரையில் இவ்வனுபந்த அகராதியில் ஏறத்தாள 6500 சொற்கள் காணப்படுகின்றன என்று மேலதிக தகவலைத் தந்துள்ளார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;"><b>பெயர், பொருள், தொகை என மூன்று பிரிவுகள் கொண்ட அகராதியென்றவர்கள்</b></span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 36.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 14.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -14.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.8pt;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><span dir="ltr"></span>1865, John Murdoch, Classified Catalogue of Tamil Printed Books (Page 209) </span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"> Part I - </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">பெயரகராதி</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"> </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"><span dir="ltr"></span>794</span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;">pp</span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;">, </span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"> Part II -</span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">பொருளகராதி</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"> <b>70</b></span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"><b>pp</b>, </span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"><b> Part III</b> - </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">தொகையகராதி</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt;"> </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"><span dir="ltr"></span>31</span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;">pp</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.8pt;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><span dir="ltr"></span>1978, A.Dhamotharan, Tamil Dictionaries A Bibliography (Page 55) Three Parts, viz, </span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"> a) peyarakarati (meanings) - </span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"><span dir="ltr"></span>771pp,</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"> </span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"> b) porulakarati (synonyms) - </span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"><span dir="ltr"></span>70pp</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;">, </span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"> c) tokaiyakarati (group-names) - </span><span lang="en-US" style="color: blue; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"><span dir="ltr"></span>31pp</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.8pt;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><span dir="ltr"></span>2000, Gregory James, Col-porul - A History of Tamil Dictionaries (page 163)</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.8pt;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><span dir="ltr"></span>2004 December, </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">எச்.சித்திரபுத்திரன் &</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">கு.ர.சரளா, </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;">Journal of Tamil Studies, </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">தமிழ் ஒரு மொழி அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு மாற்றமும். (</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;">Page 57)</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 14.3469pt; text-indent: -14.3469pt;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.8pt;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><span dir="ltr"></span>2014 </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">ராஹிலா ஷியாத்</span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt; font-weight: bold;">, </span><span lang="ta" style="color: #545454; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt; font-weight: bold;">Kalam</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt; font-weight: bold;">: </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt; font-weight: bold;">International Journal of Faculty of Arts</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt; font-weight: bold;"> & </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt; font-weight: bold;">Culture,</span><span lang="en-US" style="color: #6a6a6a; font-family: "latha"; font-size: 12.0pt; font-weight: bold;"> </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் ஒரு பார்வை</span><span lang="ta" style="color: #6a6a6a; font-family: "latha"; font-size: 12pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">(</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;">Page 54)</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 28.3463pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 28.3463pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-indent: -28.3463pt;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.8pt;"> </span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;"><span dir="ltr"></span>2016, </span><span lang="ta" style="font-family: "latha"; font-size: 12pt;">முனைவர் கு.ர.சரளா, தமிழ் அகராதித் தொகுப்பு நெறிமுறைகள் (குறுந்திட்ட ஆய்வு) (</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12pt;">Page 41)</span><span lang="en-US" style="font-family: "latha"; font-size: 12.0pt;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">மேற்கூறப்பட்டவை யாவும், கையகராதி - மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று நேரடியாக எழுதப்பட்டவையாகும். கையகராதியினை உருவாக்கிய அமெரிக்க மிஷனரியினர் வழங்கிய தமிழ்ப் பெயரான பெயரகராதி என்பதைக் கையகராதியின் ஒரு உட்பிரிவு என்பதாக ஆய்வாளர்கள் கட்டமைத்துக் கூறுவது விநோதமானது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;"><b>பெயரகராதி என ஒரு பிரிவு கொண்ட அகராதியென்றவர்கள்</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 36.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 17.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -17.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 12.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1901, நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்ப்பேரகராதி ( </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Page 13, 14 )<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 36.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 17.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -17.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 12.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1909, </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">L.D.Barnett & G.U.Pope, A Catalogue of the Tamil Books in the library of The British Museum ( Page 84 ), </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பெயரகராதி </span><span lang="en-IN" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">pp 771, xxii</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் தனது தமிழ்ப் பேரகராதியின் இரண்டாம் பதிப்பின் பதிப்புரையில்,</span><span style="font-family: "latha";"> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxgfWneJtoVKD6eY476f-P6qg97Nzh2GZQramF24MfiFtCbUA1B27eN5BXWZwc9g-_XUFtDzSJM1biQwBOuKTJ9nN5NzlUMXrClhPaJwg0t3Ud5jP0DI8m9gDxH4eymIARWPZ99g/s1600/1901_Na_Kathir_Munnurai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="336" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxgfWneJtoVKD6eY476f-P6qg97Nzh2GZQramF24MfiFtCbUA1B27eN5BXWZwc9g-_XUFtDzSJM1biQwBOuKTJ9nN5NzlUMXrClhPaJwg0t3Ud5jP0DI8m9gDxH4eymIARWPZ99g/s640/1901_Na_Kathir_Munnurai.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="font-family: "latha";">என்று கூறும் மேற்கண்ட சொற்பதங்கள், கையாகராதியில் சொல், பொருள், தொகை போன்ற பிரிவுகள் இல்லையென்பதைக் கூறுவதாக உள்ளன.</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">ஆக, ஆய்வாளர்கள், கையகராதியின் குறித்த இரண்டு பிரதிகளையும் பார்வையிட்டால் மட்டுமே, இரு வேறுவேறான பிரதிகள் உள்ளனவென்பதை அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை இல்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> காலத்தால் முந்திய</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">தமிழ் நூற்பட்டியலான 1865 - ஜோன் மர்டக் நூற்றொகையையும், 1909 - எல்.டி.பர்னாட், ஜி.யு,போப் அவர்களின் பிருத்தானிய அருங்காட்சியகத் தமிழ் நூற்பட்டியல் என்ற இரு நூற்றொகைகளைப் பார்வையிடும் அனைவருமே கையகராதியின் இருவேறு பிரதிகள் உள்ளன என்பதைத் தெளிவாக உணர முடியும். </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1865 - 2016 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இடைப்பட்ட</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 151 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">ஆண்டுகளில்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இன்றுவரை</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இப்பிரதிகள் இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எந்தவொரு ஆய்வாளரும் ஒப்பிட்டு எழுதவில்லை.</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;"><br /></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="font-family: "latha";"><b></b></span><span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;"><b>நான்கு பிரிவுகளைக் கொண்ட அகராதியென்றவர்கள்</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 36.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 17.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -17.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 12.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1965, சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Page 392)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 36.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 17.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -17.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 12.5pt;"> </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1984</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">, தா.வே.வீராசாமி, வாழ்வியற்களஞ்சியம் தொகுதி 1, கட்டுரைத் தலைப்பு - அகராதி (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Page 73)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 36.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 17.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -17.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 12.5pt;"> </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>2012, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">புலோலியூர் வேல் நந்தகுமார், ஜீவநதி 2012 கார்த்திகை இதழ், தமிழில் அகராதிகளின் தோற்ற வளர்ச்சியும் ஈழத்தவர்களின் பங்களிப்பும் (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">Page 169)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">மேற்கூறிய மூவரும் கையகராதியின் எந்தவொரு பிரதியையும் நேரடியாகப் பார்வையிடாமல் கட்டுரைகளை வரைந்துள்ளார்கள். சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக்கலை என்ற நூலானது, தமிழ் அகராதியியல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான ஒரு நூலாகும், இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இன்றும் கிடைக்கக்கூடியவாறு சென்னையில், இரண்டு பதிப்பகங்கள் இதனை வெளியிட்டு வருகின்றன. பின்னவர்கள் இருவரும் சுந்தர சண்முகனாரின் </span><span style="font-family: "latha";">தமிழ் </span><span style="font-family: "latha";">அகராதிக்கலையை ஆதாரமாக வைத்து கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்று நம்புவதற்கு இடமுள்ளது.</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; text-decoration: underline;"><b>கையகராதியின் புதிய பதிப்பு - யாழ்ப்பாண அகராதி </b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகம் கையகராதியினை யாழ்ப்பாண அகராதி என்ற தலைப்புடன் வெளியிட்டிருந்தது. புதுப்பொலிவுடன் 163 ஆண்டுகளுக்குப் பின் 2005இல் மீண்டும் வெளிவருகிறது என்ற முன்னட்டை வாசகத்துடன் வெளிவந்துள்ளது. இலங்கையில் சேமமடு பதிப்பகம் இதனை வெளிட்டுள்ளது.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 2005</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இல் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட யாழ்ப்பாண அகராதியானது, மேலதிக பிற்சேர்க்கைகள் இல்லாத கையகராதியினை மூல ஆதாரமாகக் கொண்டுள்ளது. இப்புதிய பதிப்பில், 1842 பதிப்பில் காணப்படும் அகராதி என்ற தலைப்பிலான 674 பக்கங்களில்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">உள்ள</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பகுதியும்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அனுபந்த</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அகராதி</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">தலைப்பிலான</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 97 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பக்கங்களும்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">. </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அதாவது அனுபந்த அகராதி என்ற பகுதியில் காணப்படும் சொற்கள் யாவும், அகரவரிசைப்படி உரிய இடங்களில் சேர்க்கப்பட்டு, அ முதல் ஞொள்ளுதல் வரையிலான சொற்கள், 483 பக்கங்களில் அமைந்த பகுதி 1 இலும், த முதல் - வௌவால் வரையிலான சொற்கள், 486 பக்கங்களில் அமைந்த பகுதி 2 இலும் அமைந்து, 1/8 தெம்மி அவளவிலான இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. 1</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>842 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பதிப்பில்,</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 22 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பக்கங்களில்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">காணப்படும்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பிழை திருத்தங்கள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன என்று முனைவர் கி.செயக்குமார் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு தெரிவிக்கிறது. யாழ்ப்பாண அகராதியில் தலைச்சொற்களைத் தடித்த எழுத்துடனும், தலைச்சொல்லையும் பொருள்விளக்கச் சொற்களையும் சிறு கோடு ( - ) ஒன்றின் மூலம் வேறுபடுத்தியும் தந்துள்ளார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> புதிய யாழ்ப்பாண அகராதியில், தமிழ் அகராதியியலில் துறைபோகிய நீண்டகாலச் செயற்பாட்டாளராகிய முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் அறிமுகவுரையில், "</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><b>வேதகிரி முதலியார் யாழ்ப்பாண அகராதிக்கு உதவினார்</b></span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">" என்ற </span><span style="font-family: "latha";">வாசகமானது காணப்படுகிறது. இதனை, கிரகரி ஜேம்ஸ் அவர்களின் நூலில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் கையகராதியின் பிரதி வேறுபாடுகளைத் தெரிந்திருக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம். புதிய பதிப்பில் ஓரிரு இடங்களில் அகரவரிசை முறை மாறியுள்ளது என்பதையும் தனது அறிமுகவுரையில் கூறியுள்ளார்.</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> பொதுவாகத் தமிழ் அகராதித்துறையைச் சேர்ந்த அனைவரும் தமிழ் அகராதிகள் பற்றிக் கூறும் ஒரு சொல்லாடல் "சதுரகராதி மரபு" என்பதாகும். அதாவது நான்கு பிரிவுகளைக்கொண்ட அகராதிகளைச் சதுரகராதி மரபில் வந்த அகராதி எனச் சுட்டுவர். தமிழ் அகராதிகள் யாவற்றையும் இந்த அளவீடு கொண்டு பிரித்துப் பேசும், எழுதும் வழக்கமும் உள்ளது. தற்காலத் தமிழ் அகராதியியலாளர்கள் அனைவருமே, "</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">முற்றிலும் ஒரே தொகுதியாய் அமைந்து அகரவரிசையில் சொற்களுக்குப் பொருள் தரும் அகராதி, 1904இல் வந்த தமிழ்ச் சொல்லகராதி</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">" என்ற கருத்துடன் எழுதி வந்துள்ளதைக் காணலாம். இந்தவகையில், 1937இல் இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன் அவர்கள் வெளியிட்ட மதுரைத் தமிழ்ப் பேரகராதியை, சந்தியா பதிப்பகம் மீண்டும் 2004இல் வெளியிட்டபோது, முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய முன்னுரையில், </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">சதுரகராதி மரபில் வந்த இறுதிக் கண்ணி</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> என்று மதுரைத் தமிழ்ப் பேராகராதியைச் சுட்டியுள்ளார். இந்நிலையில், முற்றிலும் ஒரே தொகுதியாய் அமைந்த புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியின் அச்சுக்குத் தயாரான (</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">draft copy) </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பிரதியைப் பார்வையிட்டவரான முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் இந்த "சதுரகராதி மரபு" என்ற அளவீடு கொண்டு ஏன் அணுகவில்லையென்பது என்னை ஆச்சரியப்படுத்தும் விடயமாகும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> கையகராதியின் புதிய பதிப்பு வெளிவரும்போது, கடந்தகாலத்தில் கையகராதி பற்றி எழுதப்பட்ட அத்தனை பதிவுகளையும் ஆராய்ந்து, கையகராதியில் காணப்படும் அகராதியியற் கூறுகளை ஆராய்ந்து, தமிழ் அகராதி வரலாற்றில் கையகராதி பெற்றிருந்த பெருமைகளைச் சிதைக்காது, ஒரு கனதியான முன்னுரை எழுதப்பட்டிருக்கவேண்டும், அது நிகழவில்லை. சூ.இன்னாசி அவர்கள் சதுகராதி ஆராய்ச்சி செய்தது போன்று, கையகராதி பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்படாமை கவலை தருவதாக அமைகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> பதிப்புரையில் யாழ்ப்பாண அகராதியை வெளியிட்டவர்கள் "புதிய பொலிவோடும் மிகச்சிறந்த கட்டமைப்போடும் வெளிவருகிறது" என்று கூறினாலும், அவையாவும் யாழ்ப்பாண அகராதியை விற்பதற்கான விளம்பர வாசகமே.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> உண்மையில் 2005இல் வெளியான யாழ்ப்பாண அகராதியில், அகராதியியற் கூறுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக் கூறலாம். துறைபோகிய அகராதியியற் செயற்பாட்டாளர் எவரும் புதிய பதிப்பின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. புத்தக வடிவமைப்பாளர்களும், மெய்ப்புத் திருத்துநர்களும் இணைந்து உருவாக்கிய பிரதியாகவே இது அமைந்துள்ளது. 1842இல் வெளியான கையகராதியில் இடம்பெற்ற அகராதியியல் உத்திகள் எவை என்பது இவர்களுக்குத் தெரியாத காரணத்தினால் இது இடம்பெற்றுள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> அறிமுக உரையில் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் குறிப்பிடும் ஓரிரு இடங்களில் அகரவரிசை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நோக்குவோம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 31.0pt; margin-right: 28.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 11.5pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -11.5pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 6.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில், முதல் பக்கத்தில் </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">அகங்களித்தல்</span><span lang="ta" style="font-family: "latha"; font-weight: bold;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்னும் தலைச்சொல் இரண்டு தடவைகள் இடம்பெற்று இரண்டு பொருள்விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இது 1842 பதிப்பில் அகராதி என்ற பகுதியில் ஒரு இடத்திலும் (பக்கம் 1), அனுபந்த அகராதி என்ற பகுதியில் ஒரு இடத்திலும் (பக்கம் 675) இடம் பெற்றிருந்தது. இதனை </span><span lang="ta" style="font-family: "latha"; font-weight: bold;">அகங்களித்தல்</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> - மனமகிழ்தல், மனமதர்த்தல் என்று தருவதற்குப் பதிலாக இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகத் தந்து, பொருள்விளக்கங்களையும் தனித்தனியாகத் தந்துள்ளார்கள். இவ்வாறு சில இடங்களில் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 31.0pt; margin-right: 28.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 11.5pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -11.5pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 6.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1842 பதிப்பில் அனுபந்த அகராதி பகுதியில் இடம்பெற்ற சொற்களை உரிய இடங்களில் இணைக்க</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">முற்பட்டபோது, சில இடங்களில் தவறான இடத்தில் இணைத்ததினால் அகரவரிசை மாறி வரும் நிலை காணப்படுகிறது.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">எடுத்துக்காட்டு</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">- </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">அதிலோகம், அதிவசனம்</span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> ஆகிய இரண்டு தலைச்சொற்கள், இவ்விரு சொற்களும் அனுபந்த அகராதியில் பக்கம் 685 இல் இருந்து எடுத்துவரப்பட்டவை. இவ்விரு சொற்களும் புதிய பதிப்பில் பக்கம் 23 இல், அதிரோகம் - அதிர் ஆகிய இரண்டு சொற்களுக்கு இடையில் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல இடங்களில் நிகழ்ந்துள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 19.5pt; margin-right: 28.5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; tab-stops: 6.0972in 6.125in 6.0441in 6.1344in; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அடுத்து, கையகராதியின் 1842 பதிப்பில் காணப்பட்ட அகராதியியல் உத்தி அல்லது சிறப்புத் தன்மை, புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவோம். </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 28.5pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">கையகராதியின் </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>1842 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பதிப்பில், குறித்த ஒரு தலைச்சொல்லிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்விளக்கச் சொற்கள் வருமிடங்கள் எல்லாம், பொருள் விளக்கச்சொற்களும் அகரவரிசையில் அடுக்கப்பட்டுத் தரப்பட்டிருந்தன. அகராதிப் பகுதி, அனுபந்த அகராதிப் பகுதி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டு இருப்பதைக் காணலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 39.5pt; margin-right: 28.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 20.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -20.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 15.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அகம்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> - </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு ( பக்கம் 1 )<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 39.5pt; margin-right: 28.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 20.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -20.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 15.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அகம் - ஆன்மா, உபத்திரவம், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம் ( பக்கம் 675 )<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 19.5pt; margin-right: 28.5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 28.5pt; text-align: justify;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இதனைப் புதிய பதிப்பில்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 28.5pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 39.5pt; margin-right: 28.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 20.0pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -20.0pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 15.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அகம்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> - </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு, ஆன்மா, உபத்திரவம், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம் ( பக்கம் 2 )<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 28.5pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 3pt; text-align: justify;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்று தந்துள்ளதன்மூலம், 1842இலிருந்து பேணப்பட்டுவந்த கையகராதியின் உத்தி, சிறப்புத்தன்மை சிதைக்கப்பட்டு அதன் பெருமை மழுங்கடிக்கப்படுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 3pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 3pt; text-align: justify;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">இது உண்மையில், <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 3pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: 47.8464pt; margin-right: 28.5pt; mso-level-font-family: Symbol; mso-level-indent: 28.3463pt; mso-level-number-format: bullet; mso-level-size: 10.0pt; mso-level-text: ·; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -28.3463pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span style="direction: ltr; font-family: "symbol"; font-size: 10pt; unicode-bidi: embed;">·</span><span style="width: 23.5pt;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அகம் - ஆன்மா, இடம், உபத்திரவம், உள், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், தானியம், பள்ளம், பாம்பு, பாவம், பூமி, மரப்பொது, மலை, மனம், வருத்தம், வீடு<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: 19.5pt; margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-indent: -19.5pt; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">என்ற அகரவரிசையில் அடுக்கப்பட்டிருக்கவேண்டும். துறைபோகிய அகராதியியல் தொடர் செயற்பாட்டாளர் ஒருவர் மேற்பார்வை செய்து, யாழ்ப்பாண அகராதியின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டிருப்பின் இத்தவறுகள் நிகழ்ந்திருக்கா.</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 1842 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பதிப்பில் அகராதி, அனுபந்த அகராதி ஆகிய இரண்டு இடங்களிலும் இடம்பெற்ற தலைச்சொற்கள் அனைத்திலுமே</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;">, </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">புதிய</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பதிப்பு</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">யாழ்ப்பாண</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">அகராதியில் பொருள்விளக்கச் சொற்கள் அகரவரிசையின்றித் தரப்பட்டுள்ளன. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> அடுத்து, 1</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><span dir="ltr"></span>842 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பதிப்பில்,</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 22 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பக்கங்களில்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">காணப்படும்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பிழை திருத்தங்கள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன என்று வெளியீட்டாளர்கள் கூறியிருந்தாலும், அது முற்றிலுமாக உணர்ந்து செய்யப்படவில்லை என்பதைப் பின்வரும் எடுக்காட்டுக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். </span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> 1842 </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பதிப்பின்</span><span lang="en-IN" style="font-family: "latha"; language: en-IN; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-latin-font-family: Latha;"> </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">பிழைதிருத்தம் பக்கத்தின் முகப்பில் தரப்பட்டிருக்கும் குறிப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை.</span><span style="font-family: "latha";"> </span></div>
<div class="MsoNormal" style="margin-right: .5pt; mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"></span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirQrbKRWS_i7tGWSCxDSolNf8aOsCOF9AhgsD7UYUBbCmKPfYaajpY1JJP00Issq-cueAhuefdNFnooxCmbvUckeZwkK1RBPKbh9TvzSPBYCECqXAbWONiNHmWUHXI7jsnxf1PPA/s1600/1842_Error_Correction.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="390" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirQrbKRWS_i7tGWSCxDSolNf8aOsCOF9AhgsD7UYUBbCmKPfYaajpY1JJP00Issq-cueAhuefdNFnooxCmbvUckeZwkK1RBPKbh9TvzSPBYCECqXAbWONiNHmWUHXI7jsnxf1PPA/s640/1842_Error_Correction.jpg" width="640" /></a></div>
<o:p></o:p><br />
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha";">அக்கரவிலக்கணம், அக்கினித்தம்பம், அசுவபரிட்சை, அத்திரபரிட்சை, அதிரிசயம், அலங்காரம், அவத்தைப்பிரயோகம் ஆகிய தலைச்சொற்களுக்குரிய பொருள்விளக்கச் சொற்றொடர் "கலைஞானமறுபத்தி</span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold; text-decoration: underline;">னான்</span><span lang="ta" style="font-family: "latha";">கினொன்று" என்று காணப்படும் இடங்களில் பிழை திருத்தப்படவில்லை.</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> 1842 பதிப்பின் பிழைதிருத்தம் பகுதியில் தள்ளல் என்ற ஒரு பிரிவு உள்ளது. இது மேற்படி சொற்களை நீக்கவேண்டும் என்பதைக் கூறுவதாகும். இவ்வாறு தள்ளல் என்பதன் கீழ்த் தரப்பட்டிருக்கும் சொற்கள் யாவும் புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் நீக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அது முற்றிலும் நிகழவில்லை, சில பொருள்விளக்கச்சொற்கள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் அது தலைச்சொற்களைத் தள்ளல் என்று சுட்டப்பட்டபோதும், அவை நீக்கப்படவில்லை. </span><span lang="ta" style="color: blue; font-family: "latha"; font-weight: bold;">அத், அவனூதி, அவையவம், அவையவவுருவகம், அவையவியுருவகம், அழுக்கல், அனியமவுவமை, அனியாயம், அனீதர் </span><span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;">போன்ற தலைச்சொற்கள் நீக்கப்படவில்லை. இவ்வாறு பல சொற்கள் நீக்கப்படாமல் உள்ளன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> எடுத்துக்காட்டாக அ வரிசையில் உள்ளவற்றை நாம் பார்வையிட்டபோது இவை தென்பட்டன, இது ஒரு பதச்சோறு மட்டுமே. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"> தற்காலத்தில் கிடைக்காத பழைய அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவது என்பது நல்லதுதான், ஆனால் அம்முயற்சியானது, கடந்த காலத்தில் குறித்த நூல் கொண்டிருந்த உட்கூறுகளையும், சிறப்புத் தன்மைகளையும் சிதைக்காது, அந்நூலின் கடந்தகாலப் பெருமை காப்பாற்றப்படும் நிலை பேணத்தக்கதாகவே அமையவேண்டும். அதிலும் உரைநடை நூல்களை விட, நோக்குநூல்களைப் புதிய பதிப்பாக வெளியிடும்போது மிக மிகக் கவனத்துடன் செய்தல் வேண்டும். பல முறை மெய்ப்புத் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். இவ்வாறு உணர்ந்து செய்யப்படும் வேலைகளைத் தமிழ்த் தொண்டாகக் கொண்டாடலாம், புகழ்ந்து போற்றலாம். அவ்வாறில்லாமல், அதிக தவறுகளுடன், பிரதியின் கடந்தகாலப் பெருமைகளைச் சிதைத்துச் செய்யப்படுபவை வியாபார நோக்கம் கொண்டவையாகவே கொள்ளப்படும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify; text-align: justify; text-justify: newspaper; text-justify: newspaper; text-kashida-space: 50%; text-kashida-space: 50%;">
<span lang="ta" style="font-family: "latha"; language: ta; mso-ansi-language: en-IN; mso-ascii-font-family: Latha; mso-bidi-language: ta; mso-default-font-family: Latha; mso-font-cs-format: -1; mso-latin-font-family: Latha;"><span style="color: #274e13;"><b> பிற்குறிப்பாகச் சில, மேலே கூறப்பட்டவை யாவும் 1842இல் வெளியான கையகராதி எது என்பது பற்றியே, கையாகராதியில் இருந்து பிற்காலத்தில் கிளைத்தவை பற்றியல்ல அவற்றைத் தனியாக பிறிதொரு இடத்தில் அலசலாம்.</b></span></span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-23364225196510088092016-12-08T07:17:00.000+05:302017-04-25T10:17:06.793+05:30விஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><span style="margin-left: auto; margin-right: auto;"><a href="https://www.magzter.com/CH/Puthiya-sol/Puthiya-sol/Art/" target="_blank"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj2xqHKoOme0qzHOVBysf11Dy-SbERpTNrYJg1Qf9vWrp3x566Qq6Tg0H_HUBdm5TN1WzhzYKDmABu0YLYScPNTBTyHFde5WKK4bSXLiOl2dBpP_j6OCRGhn6qdScY66J6ENkxXg/s400/Puthiya_Sol_04_2016_Oct_Dec.jpg" width="280" /></a></span></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><a href="https://www.magzter.com/CH/Puthiya-sol/Puthiya-sol/Art/" target="_blank">புதிய சொல் : 04 - 2016 Oct-Dec</a></td></tr>
</tbody></table>
<b style="font-family: latha, sans-serif; font-size: x-large;">1. <span style="color: #073763;">விஞ்ஞானமும் அகராதியும் – பதிப்புகள்</span></b></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span class="Apple-tab-span" style="white-space: pre;"><span style="font-family: "latha" , sans-serif;"> </span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினால் நடத்தப்படும் இளங்கதிர் ஆய்விதழின் பத்தாவது ஆண்டுமலரில் (<b> 14.04.1958 </b>) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரை முதன்முதலாக இடம்பெற்றது. இம்மலரின் ஆசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். அம்மலரின் 145 – 154 பக்கங்களில் இவ்வாராய்ச்சிக் கட்டுரை இடம்பெற்றபோது, அது 27 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் காணப்பட்டது. இதனையே நாம் முதலாவது பதிப்பாக எடுத்துக்கொள்கிறோம். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">ஏப்ரல் 1962 இல், செ.கணேசலிங்கன் அவர்களின் பாரதி புத்தகசாலை வெளியீடு – 1 என்ற அடையாளத்துடனும், சென்னையில் பாரி நிலையத்தின் விற்பனை உரிமையுடனும் சென்னையில் பதிப்பிக்கப்பட்ட ஈழத்து வாழ்வும் வளமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் பதினோராவது கட்டுரையாக 106 - 116 பக்கங்களில் விஞ்ஞானமும் அகராதியும் இடம்பெற்றது. இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்தவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் என்பதை நூலின் முன்னுரை பெருமையாகச் சுட்டுகிறது. இந்நூலில் இக்கட்டுரையானது 26 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் உள்ளது. இதனை இக்கட்டுரையின் இரண்டாம் பதிப்பாகச் சொல்லலாம். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="color: #cc0000; font-family: "latha" , sans-serif;"><b>புதிய சொல்லின் மூன்றாவது இதழ் வரை ( 2016 ஜூலை – செப்டம்பர் ) பத்துத் தடவைகளுக்கு மேல் இவ்விரண்டாம் பதிப்புக் கட்டுரையே பல்வேறு இடங்களில் இடம் பெறுகிறது.</b></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: large;"><b>2. <span style="color: #0c343d;">இரண்டு பதிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன ?</span> </b></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இளங்கதிரில் வெளியான பதிப்பின்படி, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 19வது பந்தியில் உள்ள நான்கு வரிகளூடாக நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ் அகராதிப்பணியினையும், அதனைத்தொடர்ந்து வரும் 20, 21 ஆகிய இரு பந்திகளிலுள்ள முப்பத்தொரு வரிகளுடாக கு.கதிரவேல்பிள்ளை அவர்களின் அகராதிப்பணியினையும் எழுதியிருந்தார். </span></div>
<div class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-family: "latha" , sans-serif;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbp0RdceF1hnC0gVrPZ5BFPZIfi6hm1ir2ZGRQNICoNXH51FPr7dm7U2q8kon4sazVtK8jzdlm-vh3q0Om9hK6r6J3t3n3o9rhzFURKjnetx8xRslqhmZYHI5isKhDjZjfIfCWgw/s1600/Picture1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbp0RdceF1hnC0gVrPZ5BFPZIfi6hm1ir2ZGRQNICoNXH51FPr7dm7U2q8kon4sazVtK8jzdlm-vh3q0Om9hK6r6J3t3n3o9rhzFURKjnetx8xRslqhmZYHI5isKhDjZjfIfCWgw/s640/Picture1.png" width="640" /></a></span></div>
<br />
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">ஈழத்து வாழ்வும் வளமும் நூலில் மேலே படத்தில் நிறமிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டு குறித்த 19 வது, 20வது பந்திகள் இணைக்கப்படுவதன் மூலம் கு.கதிரவேல்பிள்ளை அவர்களும், அவரது அகராதிப்பணியும் மறைக்கப்படுகிறது, நா.கதிரைவேற்பிள்ளை வட்டுக்கோட்டைச் செமினரியின் மாணாக்கராக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்து அகராதி உருவாக்கியவராகக் காட்டப்படுகிறார். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: large;">3. <span style="color: #0c343d;">54 ஆண்டுகளாகத் தொடரும் பதிப்பு வேறுபாடு</span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் ஈழத்து வாழ்வும் வளமும் நூல் வடிவம் பெற்றுள்ளது. தொடர்ந்து குமரன் புத்தக இல்லதினால் 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் மீள்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. மீள் பதிப்புகளுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மீள் பதிப்புக்கான முன்னுரைகளையும் எழுதியுள்ளார். 2016 பதிப்பில் ஈழநாட்டில் விஞ்ஞானமும் அகராதியும் என்ற புதிய தலைப்புடன், உப தலைப்புகளுடன், படங்களுடன் வெளியாகியுள்ளது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் பலரை உருவாக்கியவராகவும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் தோற்றுவித்த புலமைப் பாரம்பரியமே அவரின் மிகப் பெரிய சாதனையாகவும் பேசப்படும் நிலையில், பேராசிரியர் அவர்களின் மாணவர்களான வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தில்லைநாதன், சண்முகதாஸ், தனஞ்சயராசசிங்கம் போன்ற எவருடைய பார்வைக்கும் பதிப்பு வேறுபாடு தென்படவில்லையென்பதும், திருத்தப்படவில்லையென்பதும் வியப்பானதாகவே உள்ளது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">புதிய சொல்லில் எழுதப்பட்ட அறிமுகத்தில் சொல்லப்பட்டது போல் “ இவரிடமிருந்த புறவயமாக விடயங்களை அலசி ஆராய்கின்ற பண்பு இவர் மாணவர்களிடமும் தொடர்ந்தது ” என்பதும், பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் குறிப்பிடும் “ பல்கலைக்கழக ஆசிரியர் என்ற முறையிலே பரந்த நோக்கினையும் உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும் விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைதேடத் தூண்டுபவராகவும், புதிய கருத்து வெளியீடுகளின் பால் மாணவரை ஆற்றுப் படுத்துபவராகவும் திகழ்ந்தார்” என்பதும் மீள் உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;"><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0003210">ஈழத்து வாழ்வும் வளமும் ( 2001 பதிப்பு ) நூலில்</a> இக்கட்டுரையினை 2006 இல் நான் முதன் முதலாகப் படித்து முடித்தவுடன், <span style="color: blue;">என் மனதில் தோன்றிய கேள்வி அகராதி தந்த ஈழத்தவர்களான வைமன் கதிரைவேற்பிள்ளையும், நா.சி.கந்தையா அவர்களும் ஏன் இடம் பெறவில்லை என்பதே, </span>தொடர் தேடலில் கிடைத்தவைகள்தாம் இக்கட்டுரையினை எழுத உதவியவை.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: large;">4. <span style="color: #0c343d;">பாடத்திட்டத்தில் விஞ்ஞானமும் அகராதியும்</span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தரம் 12 இற்கான இரண்டாம் தவணைக்குரிய கட்டுரைப் பகுதியில் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவ குழுவில் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், திரு து.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.யோகராஜா, கலாநிதி வ.மகேஸ்வரன், திரு கே.இரகுபரன், திரு மொஹமட் ரமீஸ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பேராசிரியர் சி.தில்லைநாதனும், பேராசிரியர் அ.சண்முகதாஸும் பேராசிரியரின் புலமைப் பாரம்பரிய மாணவர்கள். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இதன் தொடர் நிகழ்வாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வழிகாட்டி நூல்களிலும், கைநூல்களிலும் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் இரண்டாம் பதிப்பே இடம்பெற்றுள்ளது. இவ்வழிகாட்டி நூல்களின் ஆசிரியர்களின் அவசரமும், தமிழ்ப் புலமையின் தெளிவு வெளிப்படும் இடமாகவும் இது அமைகிறது.</span><br />
<table align="center" border="1" class="style1" frame="void" style="border: 1px solid #999999;">
<tbody>
<tr>
<td align="center" bgcolor="#CCCCCC" width="2%"><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif;">எண்</span></td>
<td align="left" bgcolor="#CCCCCC" width="60%"><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif;">தலைப்பு</span></td>
<td bgcolor="#CCCCCC" width="30%"><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif;">ஆசிரியர்</span></td>
<td align="center" bgcolor="#CCCCCC" width="7%"><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif;">ஆண்டு</span></td>
</tr>
<tr>
<td align="center">1.</td>
<td>க.பொ.த உயர் தரம் தமிழ் தரம் – 12</td>
<td>புலவர் இளங்கோ</td>
<td>2009</td>
</tr>
<tr>
<td align="center" class="style2">2.</td>
<td class="style2">கட்டுரை மலர் தரம் 12 – 13</td>
<td class="style2">கவிஞர் த.துரைசிங்கம்</td>
<td class="style2">2010</td>
</tr>
<tr>
<td align="center" class="style2">3.</td>
<td class="style2">கட்டுரைத் தொகுப்பு தரம் 12 – 13</td>
<td class="style2">கவிஞர் த.துரைசிங்கம்</td>
<td class="style2">2010</td>
</tr>
<tr>
<td align="center">4.</td>
<td>க.பொ.த உயர்தரம் உரைநடைக்கோவை கட்டுரைகளும் வினாவிடைகளும்</td>
<td>த.அஜந்தகுமார்</td>
<td>2011</td>
</tr>
</tbody></table>
<br />
<span style="font-family: "latha" , sans-serif;">பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவக் குழுவில் உள்ளவர்கள் கட்டுரையைப் பரிந்துரைக்கும்போது அதன் போதாமைகளை அறியவில்லை, ஆராயவில்லை ஏன் என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக ஈழத்தவர்களின் அகராதி முயற்சிகள் பற்றி இதனைவிட வேறு இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் இல்லையா என்பதும் உரையாடப்படவேண்டும். </span><br />
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">58 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதை இற்றைப்படுத்தாமல் இன்றைய தலைமுறை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் ஊடாக கொடுப்பதன் மூலம் கடந்த 58 ஆண்டுகளில் ஈழத்தின் தமிழ் அகராதித் துறை எந்த இடத்தில் / எந்த நிலையில் உள்ளது தொடர்பிலான ஆய்வுகள் / கட்டுரைகள் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஒன்று எனவும் எடுத்துக்கொள்ள இடமுள்ளது. இற்றைப்படுத்தப்படாத இக்கட்டுரையின் மூலம் ஞானப்பிரகாசரின் வேர்ச்சொல் அகராதிச் சேகரங்களின் துணையுடன் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 களில் வெளியிட்ட <a href="http://www.frhsdavidfoundation.org/about_father.html">தாவீது அடிகளாரும்</a>, தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து அகராதிகளை வெளியிட்டவருமான <a href="http://viruba.com/atotalbooks.aspx?id=405">ந. சி. கந்தையா பிள்ளை</a> அவர்களும் இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே விடப்பட்டுள்ளார்கள். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: large;">5. <span style="color: #0c343d;">விஞ்ஞானமும் அகராதியும் - முதற் பதிப்பை அலசுதல்...</span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்பதை 25வது பந்தியில் கட்டுரையாளரே சொல்கிறார். இளங்கதிர் என்ற ஆய்விதழில் இது வெளியாகி உள்ளது, குறித்த இதழின் ஆசிரியர் கட்டுரையாளரின் மாணவர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். இது உண்மையில் 1950 களில் நிலவிய அறிவுத்தள மட்டத்தில், அவசர கோலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. பல தவறுகளும், போதாமைகளும், விடுபடல்களும் இதன்கண் உள்ளன. தவிரவும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் பெருவிருப்பிற்குரிய நாடகவியல், சாசனவியல், நாட்டாரியல் என்ற எல்லைக்கு வெளியே அமைந்த கட்டுரை. தனது விருப்பிற்குரிய பகுதியில் பேசப்படும் நிலையில் சிறப்பாகப் பணியாற்றிய பேராசிரியர், தமிழ் அகராதியியல் என்ற துறையில் போதிய கவனமும், ஆழமான அறிவும் கொண்டிருக்கவில்லை என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">தமிழ் அகராதியியலின் அறிவியல் கூறுகள் எதையும் பேராசிரியர் இக்கட்டுரையில் கூறவில்லை. தலைச் சொற்களை ( <span style="font-size: large;">Head Words</span> ) அடுக்கும் முறை, பொருள் விளக்கச் சொற்களை அடுக்கும் முறை, தமிழில் எத்தனை வகைகளில் சொற்களை அடுக்கும் முறைகள் உள்ளன, ஈழத்தில் எழுந்த அகராதிகள் அல்லது ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகளில் எந்த முறையில் சொற்களை அடுக்கியிருந்தார்கள், இது எந்த வகையில் தமிழகத்தில் எழுந்த அகராதிகளில் காணப்பட்ட சொற்களை அடுக்கும் முறையில் இருந்து வேறுபட்டிருந்தது, சொற்களை அடுக்குவதற்கு எது சிறந்த முறை, ஐரோப்பியர்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில் எந்த அடுக்குமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள், அவை தமிழ் எழுத்துக் கட்டமைப்பின் தன்மைக்கு ஏற்றனவா போன்ற அலசல்கள் எதுவும் இதில் இல்லை. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;"><b><span style="color: blue;">உண்மையில் கடந்த காலத்தில் ஈழத்தில் எழுந்த அகராதிகள் \ ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அகராதிகலைக்கூறுகள் பலவுண்டு.</span></b> அவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் எடுத்துக்கூறாமலும் அலசாமலும், அகராதித்துறையில் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றது என்று எழுதுவது பலவீனமான ஒன்றாகவே நான் கருகிறேன். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">தவிரவும் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல மூல அகராதிகளை, புத்தகங்களை நேரடியாகப் பேராசிரியர் பார்வையிடவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br />
<ul>
<li>5வது பந்தியில் சாமுவேல் பிஷ் கிறீன் ( Dr Samuel Fish Green ) என்பதாகக் குறிப்பிடுகிறார். Dr Samuel Fisk Green என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயரை, அதுவும் மீன் என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். ஒரே ஒருமுறையாவது ஏதாவது ஒரு புத்தகத்தில் டாக்டர் கிறீன் அவர்களின் ஆங்கிலப் பெயரைப் பார்வையிட்டிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. ( <span style="color: #990000;">இன்றும், பேராசிரியரின் இக்கட்டுரையை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஈழத்து அகராதி தொடர்பில் கட்டுரைகள் எழுதும் சிலர் <b><span style="font-size: large;">Dr Samuel Fish Green</span></b> என்றே எழுதிவருகிறார்கள்.</span> ) <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihXVrtiyzSx6eo6pvWKEFW0PgcYR1UhonVPe6etbWGup3hkHm0tfinr_TNM1CDLby-LkapS-kPyqBPwAqHxFWevOXZtkDQWaA_6UAOlYVL4Muc4IZzUWxxjw9mFfmqJwApErvWwA/s1600/1891_Life_and_letters_of_Samuel_Fisk_Green.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihXVrtiyzSx6eo6pvWKEFW0PgcYR1UhonVPe6etbWGup3hkHm0tfinr_TNM1CDLby-LkapS-kPyqBPwAqHxFWevOXZtkDQWaA_6UAOlYVL4Muc4IZzUWxxjw9mFfmqJwApErvWwA/s640/1891_Life_and_letters_of_Samuel_Fisk_Green.jpg" width="484" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Book about Samuel Fisk Green </td></tr>
</tbody></table>
</li>
<li>10வது பந்தியில் ஞானச் சகோதரர் பிலிப்பு 1905 ம் ஆண்டு அளவை நூலொன்றை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.</li>
<li>10வது பந்தியின் இறுதியில் சின்னத்தம்பி என்பார் நில அளவை சாத்திரத்தைப் பழைய இலக்கண முறைப்படி சூத்திரங்களால் யாத்து ஒரு நூலை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.</li>
<li>13வது பந்தியில் பண்டிதர் சந்திரசேகரம் என்பார் ஒரு கையகராதியை ஆக்கினார். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை. அட்டையில் உள்ள <a href="https://books.google.co.in/books/about/A_Manual_Dictionary_of_the_Tamil_Languag.html?id=6HVFAAAAcAAJ&redir_esc=y" target="_blank"><span style="font-size: large;">A Manual Dictionary of the Tamil language</span></a> என்பதையோ உட்புறத்தில் தமிழில் குறிப்பிடப்படும் பெயரகராதி என்பதையோ குறிப்பிடவில்லை. </li>
<li>14வது பந்தியில் உள்ள அவர் அதனை வரிசைப்படுத்தி நூல் ஆக்கினார் அது 1842ம் ஆண்டு வண எம்.வின்சிலோவால் வெளியிடப்பட்டது. - இதிலும் குறித்த நூலின் தலைப்பான <span style="font-size: large;">English and Tamil Dictionary : contains all the more important words in Dr Webster's dictionary of the English Language</span> என்பதைத் தரவில்லை.</li>
<li>15வது பந்தியில் குறிப்பிடும் தமிழ்-ஆங்கில அகராதியின் தலைப்பான <span style="font-size: large;">A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil</span> என்பது தரப்படவில்லை.</li>
<li>19வது பந்தியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் ஓர் அகராதியை 1905ம் ஆண்டு வெளியிட்டனர். - இதிலும் குறித்த அகராதியின் தலைப்பைத் தரவில்லை, இவ்வகராதியையும் பேராசிரியர் பார்வையிடவில்லை என்றே நினைக்க இடமுண்டு. தவிரவும் சதாவதானியின் தமிழ்ப்பேரகராதியானது 1899 இல் வெளியாகியுள்ளது, ஆனால் பேராசிரியர் 1905 என்பதாகக் குறிப்பிடுகிறார். அகராதியின் தலைப்பையும் தராது, வெளியான ஆண்டும் சரியாகக் குறிப்பிடாமல், ஆனால் அது பிழையில்லாது தூயதாய் வெளிவந்தது என்ற சான்றிதழை எங்ஙனம் வழங்கிடமுடியும் ?<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjHVd796O0DQYJIBUXYLiAnprCznNFbj1xCgxtuIZ2X0RxlGI9N2M9EfXn-dNSSqYwkrjzrda5bobQd3XhvF3WxKH1YxtmtY5vz-soq2XTfpgDnvDLseCtc68YqBKb_nfbe2qS-w/s1600/1899_Na_Kathir_001.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjHVd796O0DQYJIBUXYLiAnprCznNFbj1xCgxtuIZ2X0RxlGI9N2M9EfXn-dNSSqYwkrjzrda5bobQd3XhvF3WxKH1YxtmtY5vz-soq2XTfpgDnvDLseCtc68YqBKb_nfbe2qS-w/s640/1899_Na_Kathir_001.jpg" width="442" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தமிழ்ப்பேரகராதி</td></tr>
</tbody></table>
</li>
<li>24வது பந்தியின் பிற்பகுதியில் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இதுகாறும் தமிழ் அகராதி ஆக்குவோர் கைக்கொள்ளாத முறையில் ஓர் தமிழ்-ஆங்கில அகராதியை ஆக்க முயன்றார். - இங்கும் குறித்த அகராதியின் தலைப்புத் தரப்படவில்லை, மேலும் <span style="font-size: large;">An Etymological and Comparative Lexicon of the Tamil Language</span> என்ற தலைப்புடைய இவ்வகராதியின் 6 பகுதிகள் முறையே 1938, 1940, 1941, 1943, 1944, 1946 ஆகிய ஆண்டுகளில், சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பேராசிரியர் சில பாகங்களை 1935 ம் ஆண்டு அச்சிட்டும் வெளியாக்கினார் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCpM2qoNmWMcHoHUApibMjnjpsL8n2_t13AZSHpJQIjnLu8uSmaewWIVYGnLigUOM3eXVoYq8w4hv1gclEB6RGuVnUH2cfxeNjYaratze2Xgyxsl25X5LHO_-21d-_EmGYgWS8gg/s1600/1938_An_Etymological_and_Comparative_Lexicon_of_the_Tamil_Language_Part1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCpM2qoNmWMcHoHUApibMjnjpsL8n2_t13AZSHpJQIjnLu8uSmaewWIVYGnLigUOM3eXVoYq8w4hv1gclEB6RGuVnUH2cfxeNjYaratze2Xgyxsl25X5LHO_-21d-_EmGYgWS8gg/s640/1938_An_Etymological_and_Comparative_Lexicon_of_the_Tamil_Language_Part1.jpg" width="510" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">An Etymological and Comparative Lexicon of the Tamil Language</td></tr>
</tbody></table>
</li>
<li>23வது பந்தியில் நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் ஆங்கில ஆங்கில தமிழ் அகராதியின் பதிப்பு ஆண்டு 1911 என்று தவறாகக் கொடுத்துள்ளார், உண்மையில் அவ்வகராதி 1907 இல் வெளியாகியுள்ளது. </li>
</ul>
</div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இதுகாறும் பேராசிரியர் குறிப்பிடாதுவிட்ட அகராதித் தலைப்புகளையும், வெளியான ஆண்டு விபரங்களில் உள்ள மாறுதல்களையும் நோக்கினோம். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">15, 16வது பந்திகள் வண எம்.வின்சிலோ அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி பற்றியது. அதில் “இதுகாறும் வெளிவந்த அகராதிகளில் வெளிவராத பல முறைகள் அங்குள்ளன” என்பதாக மட்டுமே கூறியுள்ளார். அவை என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif; white-space: pre;"> </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">16வது பந்தியினூடாக </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br />
<ol>
<li>”நூலாசிரியர், புலவர், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள், தேவர் ஆகியோரின் பெயர் முதலியவையும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன” , </li>
<li>”தமிழரின் சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் ஆகியன பற்றியுள்ள செய்திகளையும் அறிந்துகொள்ளலாம்” </li>
</ol>
</div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">என்று கூறிவிட்டு, 17வது பந்தியில் “ஆகவே கிறிஸ்து சமயத்தைப் பரப்புவதற்கு ஒரு கருவி நூலாக எழுந்தபோதும் ஈற்றில் யாவருக்கும் பயன்படும் ஒரு பெருநூலாக அது முடிந்தது என்றவாறு கூறுகிறார். இதில் எவ்வளவு இரு துருவ வேறுபாடு ? கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான கருவி நூலென்று குறிப்பிட்டுக் குற்றம் சாட்டும்போது, அதற்கான ஆதார உள்ளடக்கப் பதிவுகளைக் எடுத்துக் கூறவேண்டாமா ? </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgemyaE_WTOV47EQi8jRC4s6tXZrnrLt_Ugf4z9SMmtsaTbEYRgzsWcl6QdP-VXXXKFZg5JZk7VIrpVe4_mn0_08PFRtau3yUDOvNODJHkh4KD23nfhv-dFPAD1QXoaWaj-h2hEXA/s1600/1904_CW_Kathiravelpillais_Tamil_Dictionary_Jaffna_Edition.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgemyaE_WTOV47EQi8jRC4s6tXZrnrLt_Ugf4z9SMmtsaTbEYRgzsWcl6QdP-VXXXKFZg5JZk7VIrpVe4_mn0_08PFRtau3yUDOvNODJHkh4KD23nfhv-dFPAD1QXoaWaj-h2hEXA/s640/1904_CW_Kathiravelpillais_Tamil_Dictionary_Jaffna_Edition.jpg" width="417" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி</td></tr>
</tbody></table>
</div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் <span style="font-size: large;">C.W.Kathiravelpillai’s Tamil Dictionary</span> - தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இதில் அ தொடக்கம் அனோர் வரையிலான 7967 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியானதாகும். 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியான வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதியில் வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய முன்னுரையின்படி அவர் இதனை 6 தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளதாக அறியமுடிகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் அகராதித் தொகுப்புச் சேகரங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திடம், வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களின் மகன் க.பாலசிங்கம் அவர்களாற் கொடுக்கப்பட்டு, அன்றைய காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பிலிருந்த தமிழ் வித்துவான்களின் துணையுடன் 1910, 1912, 1923 ஆகிய ஆண்டுகளில் <span style="font-size: large;">C.W.Kathiravelpillai’s Tamil Dictionary</span> - தமிழ்ச் சொல்லகராதி என்ற பெயரிலேயே மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கம் இதனை வெளியிட்டிருந்த காரணத்தினால், இது பலராலும் தமிழ்ச்சங்க அகராதி என்று அழைக்கப்பட்டுள்ளது. ( <span style="color: #990000;">தகவலுக்காக - 1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் மூன்று பாகங்களும் மீள் அச்சுச் செய்யப்பட்டபோதும், தொடர்ந்தும் <span style="font-size: large;">C.W.Kathiravelpillai’s Tamil Dictionary</span> - தமிழ்ச் சொல்லகராதி என்ற பெயரிலேதான் வெளியிடப்பட்டுள்ளது.</span> )<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2bmeLT33yZytUgYMPvHYKAjQjIc-etftp_IouDKDPjzfcuw8v2g7QwwA-VcnZweRFbeEm-x-rz95mp89m8ObsP39vcEMttBurOhJqrr9B-3db74PUVcm8o3arNVn5LrYk7BXQ-g/s1600/1998_CW_Kathiravelpillai_Dictionary_IITS.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2bmeLT33yZytUgYMPvHYKAjQjIc-etftp_IouDKDPjzfcuw8v2g7QwwA-VcnZweRFbeEm-x-rz95mp89m8ObsP39vcEMttBurOhJqrr9B-3db74PUVcm8o3arNVn5LrYk7BXQ-g/s640/1998_CW_Kathiravelpillai_Dictionary_IITS.jpg" width="452" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தமிழ்ச் சொல்லகராதி மீள் அச்சு 1998</td></tr>
</tbody></table>
</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் 20, 21 வது பந்திகளூடாக வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதி பற்றிய விபரிப்புகள் உள்ளன. ஆனால் பல தவறுகளும் விடுபடல்களும் உள்ளதாகவே அதுவும் உள்ளது. 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட அகராதி பற்றிய செய்தி இல்லை. அது சங்க அகராதி என்ற பெயரோடு வெளிவந்தது என்று தவறான தகவலையே பதிவு செய்கிறார். தவிரவும் 1910 இல் முதற் பாகமும், 1923 இல் மற்றைய இரண்டு பாகங்களும் வெளிவந்தனவென்று, பதிப்பு ஆண்டையும் தவறாகவே குறிப்பிடுகிறார். இதனால் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையவர்கள் குறித்த அகராதியைப் பார்வையிடவில்லை என்ற ஒரு தோற்றப்படாடு ஏற்பட்டாலும், 1904 இல் வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் தனது முன்னுரையிற் குறிப்பிட்ட அதே வாசகங்களை உள்ளடக்கி “மிகச் சிறந்த தமிழ் அகராதி எதுவும் தற்பவமாகவோ, தற்சமமாகவோ சங்கத மொழியிலுள்ள சொற்களை உள்ளடக்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இக்குறைபாட்டைத் தவிர அவர் அகராதி ஏனைய வகையிற் சிறந்து விளங்கிற்று“ என்றும் குறிப்பிடுவதனூடாக அவர் குறித்த அகராதியைப் பார்வையிட்டுள்ளார் என்ற முடிவிற்கும் வர இடமுள்ளது. தவிரவும் ஈழத்துக் குழூஉ இறையனாராக அறிவியலும் அகரமுதலியும் என்ற தலைப்பிலான கட்டுரையெனில் இக்குறைபாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும், ஆனால் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் இவ்வாறான குறைபாடு கூறுவது முரண்நகையாகும். ( விஞ்ஞானம் என்பது தமிழ்ச்சொல்லல்ல. | ஈழத்துக் குழுஉ இறையனார் என்பது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் புனைபெயர், தனித்தமிழ் எண்ணக்கருவில் அமைந்த பெயர். )</span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதி ( முதலாம் பாகம் ) என்ற பெயரில், 1904 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அகராதி வெளிவந்ததென்பதை மறைத்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருமை சேர்க்குமாறு செயற்படவேண்டிய காரணம் என்னவென்றும் ஆராயவேண்டிய ஒன்றாகும். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">26வது பந்தியில் காணப்படும் “தமிழ் நாட்டில் நிகண்டுகள் எழுந்தன” என்ற வாசகமானது, ஈழநாட்டில் எழுந்த நிகண்டுகளான, </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<ol>
<li><span style="font-family: "latha" , sans-serif;">1876 </span><a href="http://www.viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx" style="font-family: latha, sans-serif;" target="_blank">சிந்தாமணி நிகண்டு</a><span style="font-family: "latha" , sans-serif;"> - வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை,</span></li>
<li><span style="font-family: "latha" , sans-serif;">1889 நேர்ச்சொல் நிகண்டு - புலோலி சதாசிவம்பிள்ளை</span></li>
</ol>
</div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">ஆகியவற்றை பேராசிரியர் அறிந்திருக்கவில்லை, அதாவது ஈழத்தில் நிகண்டுகள் தோன்றியுள்ளவென அறிந்திருக்கவில்லை என்பதனாலேயே அவர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: large;">6. <span style="color: #0c343d;">ஈழத்தில் அகராதித்துறையின் இன்றைய நிலை</span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இலங்கைத் தீவில் பேசப்படும் மற்றொரு மொழியான சிங்கள மொழியின் அகராதித்துறை எவ்வாறு தோற்றம் பெற்றது, இன்று எவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை <a href="http://www.dictionary.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta"><span style="font-size: large;">http://www.dictionary.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta</span></a> இணைப்பினூடாகத் தமிழில் பார்வையிட முடிகிறது. 1845 இல் ஆரம்பிக்கப்பட்ட றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக்கிளையில் இருந்து இன்றைய சிங்கள அகராதி அலுவலகம், அதன் படிமுறை வளர்ச்சி, அண்மைக்கால அவர்களது அகராதி வெளியீடுகள் வரை அறிந்துகொள்ள முடிகிறது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இதே நிலையில் தமிழில் அகராதித்துறைக்காக எந்தவொரு நிறுவனமும் தோற்றம் பெற்றதாகவோ செயற்பட்டதாகவோ தகவல்களில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அகராதியியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு களம் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் மொழியியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் என்று ஒரு சிலரைக்குறிப்பிட முடியும். ஆனால் <span style="font-size: large;"><b>lexicography</b></span> என்ற அகராதியியல் துறையில் துறைபோகிய தொடர் செயற்பாட்டாளர், அறிஞர் என்று பெயர் குறிப்பிடும்படி எவரும் இல்லை என்ற உண்மையை கசப்புடன் ஒத்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. ஈழத்தில் கடந்த காலங்களில் கோலோச்சிச் சாதனை படைத்த கல்வித்துறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் அகராதித்துறையை கவனத்தில் கொள்ளாதுவிட்டது கவலைக்குரிய விடயமே. 2005 இல் வெளியான ஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள் என்ற அகராதியைத் தந்த பேராசிரியர் சுபதினி ரமேஷ் அவர்கள் நீங்கலாக இன்றளவும் ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் யாவும் கல்வித்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">நானறிந்தவரையில் 200 இற்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு நூல் ஈழத்து வாழ்வும் வளமும். இன்றும் அதன் தேவை இருக்கிற காரணத்தினாற்றான் நான்காவது பதிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தின் அகராதி முயற்சிகள் தொடர்பில் கட்டுரை வரையும் எவருமே இக்கட்டுரையை மேற்கோள் காட்டத்தவறுவதில்லை. ஆனால் யாருமே இக்கட்டுரையின் போதாமைகளை, தவறுகளைப் பொதுவெளியில் சுட்டி எழுதவில்லை. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span class="Apple-tab-span" style="white-space: pre;"><span style="font-family: "latha" , sans-serif;"> </span></span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">பாடத்திட்டத்தில் கட்டுரை இணைக்கப்பட்ட காரணத்தினால் இலங்கை முழுவதும் உள்ள தமிழாசிரியர்கள், குறிப்பாக தரம் 12-13 இற்குப் பாடம் சொல்லித்தரும் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையைக் கற்பிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை ஆசிரியர்கள் கட்டுரையின் குறைபாடுகளைத் தெரிந்துகொண்டார்கள் ? பொதுவெளியில் அல்லது தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்கள் ? என்பதும் அறியமுடியவில்லை. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">மேலும் இக்கட்டுரையினைப் பாடத்திட்டத்திற் பரிந்துரைத்த பெருந்தகை யாரென்பதைத் தெரிந்து கொள்வதற்காக <a href="http://nie.lk/pages/dept12.asp">தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவை</a> மின்-அஞ்சலில் 2016 ஜனவரியில் தொடர்புகொண்டபோதும், இன்றுவரை பதில் இல்லை. </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இந்நிலையில் புதிய சொல் மீள் உரையாடல்களுக்குக் களம் அமைத்துள்ளதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறாக கடந்த காலங்களில் வரையப்பட்ட பல விடயங்கள் மீள் உரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. <span style="color: blue;"><b>விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையின் மீள் உரையாடல் என்ற நிலையில் இருந்து ஈழத்தின் அகராதித்துறைச் செயற்பாடுகள், பதிவுகள் நோக்கிய மீள் உரையாடலாக மாற்றப்படுமாயின் சிறப்பானதாக அமையும்</b></span> என்ற என் பெருவிருப்பையும் இத்தால் பதிவு செய்கிறேன். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">எங்கடை புறெபசர் என்ற அன்பிழையினைவிட எங்கள் மொழி, அறிவியல்பூர்வமான அணுகுமுறை என்பது ஆழமனது, அகலமானது. எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார் என்ற வீண் தற்பெருமைகளைத் தவிர்த்து களநிலையறிந்து, யதார்த்த உண்மைகளுடன் உரையாடுவதே, தொடர்வதே சிறப்பானதாகும். </span></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="mso-pagination: none; text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;"><span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>- விருபா குமரேசன் ( t.kumaresan@viruba.com )</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
</div>
விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-76319789535094822092016-03-18T19:13:00.000+05:302016-03-18T19:14:30.676+05:30வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன என்பதில் தனக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் உட்பெட்டியூடாகத் தெரிவித்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரது குழப்பத்திற்கான காரணம் தமிழ் விக்கிப்பீடியாவில் <a href="https://ta.wikipedia.org/s/18sq">https://ta.wikipedia.org/s/18sq</a> இணையமுகவரியில் காணப்படும் <span style="color: blue;">// அகங்காரம் முதல் வைராக்கியம் வரையான ஏறத்தாழ 1465 வட சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.... //</span> என்ற வசனத் தொடரின் மூலம் 1465 சொற்கள், அதே நேரம் விருபா தளத்தில் உள்ள <span style="color: blue;">// ...வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 சொற்களும்... //</span> பதிவின்படி 1461 சொற்களும், இதை மேலும் குழப்பமாக்கும் நிலையில் விருபா தளத்தில் <a href="http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx">http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx</a> முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையில் 82 வது பக்கத்தைப் பார்த்தால் 1464 சொற்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆக <b>இதில் எந்த எண்ணிக்கை சரியானது என்பதே</b> !</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVE2LYHE_gWvmmAQM5fa3LkMcrdDvZfJm2oVM4xJxoAHKCWoMPgMPSiV78iaeChtvz2I5za204EpE1ETdOsNDQz-2vO07WHEh3MrgUgLITHXjo4Jn_MpKbVQvJZvWYzykmH6xI8A/s1600/STD1938_001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="155" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVE2LYHE_gWvmmAQM5fa3LkMcrdDvZfJm2oVM4xJxoAHKCWoMPgMPSiV78iaeChtvz2I5za204EpE1ETdOsNDQz-2vO07WHEh3MrgUgLITHXjo4Jn_MpKbVQvJZvWYzykmH6xI8A/s320/STD1938_001.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருபா தளத்தில் 1461, 1464 என்ற இரண்டு எண்ணிக்கைகளைத் தந்துள்ளவன் என்ற வகையில் நான் இதற்குப் பதில் தரவேண்டியவனானேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8qHkwNwkZO49V5CQ4PembtYbvOJiC4hM-MHghk7Bb-53n1dBXj8UlhhoDE_VjWuvxBZmm2saCU08DjVFugZUPEgmGW3ZsJp1WBhLQ40Z41ty_vRHyFXJpEg7KENCHNqxZ3JgOhQ/s1600/STD1938_002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="234" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8qHkwNwkZO49V5CQ4PembtYbvOJiC4hM-MHghk7Bb-53n1dBXj8UlhhoDE_VjWuvxBZmm2saCU08DjVFugZUPEgmGW3ZsJp1WBhLQ40Z41ty_vRHyFXJpEg7KENCHNqxZ3JgOhQ/s320/STD1938_002.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் விக்கியில் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் மின்-அகராதி வடிவில் இல்லை. கட்டுரையைத் தொடங்கிய, தொகுத்த, புதுப்பித்த, மேம்படுத்திய தவிக்கியர்கள் குறித்த அகராதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதைப் பக்கம் பக்கமாக எண்ணியே அறிந்திருப்பார்கள் அல்லது அச்சில் வெளியான ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரையில் இருந்து குறித்த எண்ணிக்கையைப் பெற்றிருப்பார்கள். அங்கு எண்ணிம நிலையில் தலைச்சொற்களின் <b><span style="color: #cc0000;">எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான பொறிமுறை இல்லை.</span></b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருபாவில், நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் <b><span style="color: #990000;">அகராதியில் காணப்படும் ஒவ்வொரு சொற்களையும் எண்ணிமத் தரவுதள முறையில் பதிவு செய்துள்ளோம்.</span></b> அவ்வாறு பதிவு செய்யும் போது எவ்வாறு 1641, 1644 என்ற இரண்டு எண்ணிக்கைகள் கிடைக்கும் என்பதை அலசினோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடை கிடைத்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் இவ்வாறான இரண்டு எண்ணிக்கைகள் வருவதற்கான அடிப்படைக் காரணம் 1938 இல் குறித்த அகராதியைத் தொகுத்த நீலாவதி அம்மையார் அவர்களின் வரிசைப்படுத்தல் முறையில் உள்ள சிறு வழு ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1. சிருட்டி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அக்குறித்த அகராதியின் 14வது பக்கத்தில் ( <a href="http://www.viruba.com/Dictionaries/SourceImage/STD_0014.jpg">http://www.viruba.com/Dictionaries/SourceImage/STD_0014.jpg</a> ) சிருட்டி என்ற சொல்லானது இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகக் காணப்படுகிறது. 14 பக்கத்தில் 4வது சொல்லாகவும், 18வது சொல்லாகவும் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2. தயை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அக்குறித்த அகராதியில் 15வது பக்கத்தில் ( <a href="http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=15">http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=15</a> ) தயை<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>என்ற சொல் 47வது சொல்லாகவும், 16வது பக்கத்தில் ( <a href="http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=16">http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=16</a> ) 6வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3. விகிதம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அக்குறித்த அகராதியில் 23வது பக்கத்தில் ( <a href="http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23">http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23</a> ) விகிதம் என்ற சொல் 68வது சொல்லாகவும், 24வது பக்கத்தில் ( <a href="http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=24">http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=24</a> ) 52வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே விருபா தளத்தில் நாம் குறிப்பட்ட இரண்டு எண்ணிக்கையிலும் தவறு இல்லை. </div>
<div style="text-align: justify;">
<b><span style="color: blue;">1641 சொற்கள், 1644 தடவைகள் தலைச்சொற்களாக இடம் பெற்றுள்ளன என்பதே சரியானதாகும்.</span></b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருபா தளத்தின் பின்னணியில் இயங்கும் தரவுதளத்தில் பின்வரும் படிமுறைகளினூடாக, எண்ணிம நிரலாக்க ஆணைகளைக்கொண்டு இதனைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு பக்கமாக இருந்து எண்ணிக் கூட்டிக் காண்பது அல்ல. தரவுதளம் என்பதன் பலமே இதுதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1. சொற்குவியல் தரவுதளத்தை அணுகுதல்</div>
<div style="text-align: justify;">
2. அகராதிகளைப் பட்டியலிடுதல்</div>
<div style="text-align: justify;">
3. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்னும் அகராதியைத் தெரிவு செய்தல்</div>
<div style="text-align: justify;">
4. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் தலைச்சொற்கள் பட்டியலிற்குச் செல்தல்</div>
<div style="text-align: justify;">
5. தலைச் சொற்களாக எத்தனை சொற்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுதல் >> 1464</div>
<div style="text-align: justify;">
6. ஒரு தடவைக்கு மேல் வரும் தலைச்சொற்கள் எத்தனை என்பதைக் கணக்கிடுதல் >> 3</div>
<div style="text-align: justify;">
7. 5 இல் கிடைத்த தொகையில் இருந்து 6 இல் கிடைத்த தொகையைக் கழித்தல் >> 1461</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படிமுறைகளினூடாகவே "நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்" அகராதியில் 1461 தலைச்சொற்கள் உள்ளன என்பதைப் கண்டறிந்து பதிவு செய்துள்ளோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருபா தளத்தில் <a href="http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx">http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx</a> முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையின்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பக்கம் 38 இல் 678வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 04 : 01</div>
<div style="text-align: justify;">
பக்கம் 39 இல் 692வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 18 : 01</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பக்கம் 45 இல் 796வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 15 : 47 : 01</div>
<div style="text-align: justify;">
பக்கம் 46 இல் 822வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 16 : 06 : 01</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பக்கம் 77 இல் 1380வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 23 : 68 : 01</div>
<div style="text-align: justify;">
பக்கம் 81 இல் 1444வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 24 : 52 : 01</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலதிகமாக,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் என்னும் அகராதியானது தலைச்சொற்களாக வடசொற்களையும், பொருள் விளக்கச் சொற்களாகத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சொல் வட சொல்லா ? இல்லை தம்ழச் சொல்லா ? என்பதில் பலருக்கும் மயக்கம் உள்ளது. அது இவ்வகராதியை உருவாக்கிய திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களுக்கும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே உச்சி, ஏனம், குணம், சமயம், நயம், பதி, பரம்பரை, பூசை ஆகிய 8 சொற்கள் தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதியாக, </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விடயத்தில் எனது விளக்கத்தினைக் கேட்ட நண்பருக்கு, வட சொல் அகரவரிசைச் சுருக்கம் என்னும் இச்சிறு அகராதியை, மின்-அகராதியாக மாற்றியதன் மகிழ்வை அந்த நண்பர் எனக்குத் தந்துள்ளார் என்பதை இத்தால் பதிவு செய்கிறேன். அந் நல்லாருக்கு என் நன்றிகள். </div>
</div>
விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-82467134290619780502012-01-10T11:27:00.001+05:302012-01-10T11:37:58.619+05:30எஸ்.ராமகிருஷ்ணன் பார்வைக்கு.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;">\\..... <span style="color: #cc0000;">அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்று தொகுத்து வலையேற்றம் செய்யலாம்</span>..... \\</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்றவாறு <a href="http://www.sramakrishnan.com/?p=2767">எழுதியுள்ளீர்கள்.</a> அதுவும் நீங்கள் முக்கியமான புத்தகங்களைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். இந்த முக்கியமான புத்தகங்களை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றிய ஒரு பொதுவான, அனைவராலும் ஏற்றுக்கொண்ட, நடுநிலையான ஒரு அளவுகோல் இல்லை என்றே நான் கருதுகிறேன். பிற சக எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை அதன் உள்ளடக்கம் சார்ந்து நேர்மையாக அளவிடும் மனப்பாங்கு இங்கு இல்லை என்பதற்கு நீங்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களால் ஆயிரம் பக்க அபத்தம் என்று சுட்டப்பட்டப்பட்ட புத்தகம் இன்று உயர் விருதைப் பெற்றுள்ளது, புத்தகக் கண்காட்சியில் தினமும் குறைந்தது 200 வாசகர்களாவது வாங்கிச் செல்கிறார்கள். ஆக ஒருவருக்கு அபத்தமாகத் தெரிந்த ஒரு புத்தகம் இன்னொரு இடத்தில் முக்கியமானதாகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உங்களைப் போன்று ஊடகங்களின் பக்கங்களை அடைத்துக்கொண்டிருக்கும் பலரும் ஏதோ ஒரு குழாம் மனப்பாங்கை, அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றவர்களை முடக்கும் செயலை மறைமுகமாகச் செய்யும் நிலையே இங்கு உள்ளது. உங்களுடைய அகராதியில் முக்கியமான என்பது கூட உள்ளடக்கம், கருத்தியல் சார்ந்ததாக அல்லாமல் அதற்குரியவர் உங்களுக்கு எந்த அளவுக்கு முதுகு சொறிந்து விடுவார், உங்களைப் பிரபலப்படுத்துவார் என்றதில்தான் தங்கியுள்ளது என்பதை நானறிவேன். உங்கள் இணையத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய தமிழ் இணையங்கள், வலைப்பதிவுகள் எவை என்ற பட்டியலை வைத்து இதனை உறுதிப்படுத்தலாம். \\ <span style="color: #b45f06;">இணையத்தின் தன்மையை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டகால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்கோட்டில் பயணிக்கிறது</span> \\ என்று உங்களை விதந்து ஆராதிக்கும் ஒருவர் புகழ்ச்சியாக எழுதலாம். ஆனால் அதில் உணைமையில்லை என்பது <a href="http://www.sramakrishnan.com/?p=2767">வாசகர் கலந்துரையாடல்</a> என்றதில் நீங்கள் எழுதிய மேற்குறித்த வரிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நீங்கள் இணையத்தை முற்றாகத் தேடி அலசிப் பார்த்து எழுதுவதில்லை, உங்களை நெருக்கமாகச் சுற்றியுள்ள ஒரு சிலரின் தரவுகளை வைத்துக்கொண்டே எழுதுகிறீர்கள். இதனைத் தான் நீங்கள் நீண்ட காலமாகச் செய்து வருகிறீர்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">விருபா - தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையத்தில் ஒரு புத்தகம் சென்னைப் புத்தகக் காட்சியில் எந்தெந்த அரங்குகளில் கிடைக்கும் என்பதைக் காட்டும் நுட்பத்தைக் கொண்டுள்ளோம். எடுத்துக்காட்டாக <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0000641">http://www.viruba.com/final.aspx?id=VB0000641</a> என்ற இணைய முகவரியில் அக்குறித்த புத்தகம் கிடைக்கும் அரங்குகளைக் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு விருபா இணையத்திற்கு தரப்பட்ட புத்தகங்களை மட்டுமே நாம் காட்டுகிறோம். நாம் இவ்வாறு செய்வதைப் பல பதிப்பாளர்கள் அறிவர், ஆனால் அவர்கள் புத்தகங்களைத் தராத நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாதென்பதுதான் உண்மை நிலை. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அடுத்து, நாம் முக்கியமான என்ற ஒரு அளவுகோலை வைத்திருக்கவில்லை. பதிப்பகத்தினால் பதிப்பிக்கப்பட்டாலும் அல்லது புத்தகத் தயாரிப்பு நிறுவனத்தினால் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும் இரண்டுமே இன்று புத்தகங்கள் என்ற பொதுச் சொல்லினாலேயே அழைக்கப்படுகின்றன. இரண்டையும் வேறுபடுத்தும் பொறுப்பு எங்களுடையதல்ல. எனவே நாம் முக்கியமானது என்ற அளவுகோலை விடுத்து அனைத்தையும் நீங்கள் குறிப்பிட்டபடி கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்பதை தொகுத்துக் காட்டும் செயலைச் செய்கிறோம். இதற்காகவே கண்காட்சியில் அரங்கு எண் - 139 இல் பங்குகொண்டுள்ளோம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சோணம் கட்டப்பட்ட மாடுகளைப் போல் உங்கள் பார்வையைக் கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பாருங்கள், குறிப்பாக தமிழ் இணையங்கள் பற்றிய பார்வையைக் குறுகலாக்காமல் அனைத்தையும் பாருங்கள், கருத்தியல் ரீதியில் நல்லதை எழுதுங்கள். உங்களுக்கு முதுகு சொறியக் காத்திருப்பவர்களை முன் நிறுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளாதீர்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div></div>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-76458804387086652502010-12-27T22:26:00.000+05:302010-12-27T22:26:11.959+05:30பதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI96AR1RT-rfLZKn9aCAQZNRx1Rm84VZ3f3RX9iQdYdC-rjR2X5xqHkQFDnggnsMChpD5ZPQgLK4DPDx7PM3fkbauA6rQlp__pugU5GSbvmgHBIjlf4bvdZSMECY9dlCf1Q5Rvdw/s1600/Untitled-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="143" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI96AR1RT-rfLZKn9aCAQZNRx1Rm84VZ3f3RX9iQdYdC-rjR2X5xqHkQFDnggnsMChpD5ZPQgLK4DPDx7PM3fkbauA6rQlp__pugU5GSbvmgHBIjlf4bvdZSMECY9dlCf1Q5Rvdw/s400/Untitled-2.jpg" width="400" /></a></div><br />
புத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிநேரம்தான் செலவிடமுடியும் என்ற நிலையில் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு எளிதில் புத்தகங்களை வாங்கிச் செல்லலாம். புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்துகொள்ளலாம். - ஆர்.எஸ்.சண்முகம் ( செயலாளர் 2008 - <a href="http://www.bapasi.com/">http://www.bapasi.com/</a> )<br />
<br />
எல்லாருக்கும் வானத்தில் ஏறி வைகுண்டம் போவதற்கு ஆசைதான் ஆனால்.....விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18483310.post-13707834922886553792010-01-03T13:01:00.013+05:302010-05-08T07:32:39.657+05:30தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2008தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2008 ஆம் ஆண்டிற்கான,( 2008.01.01 முதல் 2008.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.<br />
<br />
அறிவிக்கப்பட்டுள்ள <a href="http://www.viruba.com/TN-Gov-Award-Rules.aspx">31 வகைப்பாடுகளில்</a>, 29 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தின நிகழ்வில் (15.01.2010 ) வழங்கப்படவுள்ளது.<br />
<br />
வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் புத்தகப் பிரிவில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. பொறியியல், தொழில்நுட்பவியல், வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை. <br />
<br />
1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை<br />
<strong>புத்தகம் : கப்பலுக்கொரு காவியம்</strong><br />
எழுத்தாளர் : வாய்மைநாதன் ( மு.இராமநாதன் )<br />
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்<br />
<br />
2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002810">உனக்கும் எனக்குமான சொல்</a></strong><br />
எழுத்தாளர் : அழகிய பெரியவன் (சி.அரவிந்தன் )<br />
பதிப்பகம் : ஆழி <br />
<br />
3.புத்தகப் பிரிவு : புதினம்<br />
<strong>புத்தகம் : நெருப்புக்கு ஏது உறக்கம்</strong><br />
எழுத்தாளர் : எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன் )<br />
பதிப்பகம் : அலமேலு பதிப்பகம்<br />
<br />
4.புத்தகப் பிரிவு : சிறுகதை<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002825">எட்டாயிரம் தலைமுறை</a></strong><br />
எழுத்தாளர் : தமிழ்மகன் ( பா.வெங்கடேசன் )<br />
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்<br />
<br />
5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002780">வைக்கம்</a></strong><br />
எழுத்தாளர் : அ.அய்யாசாமி<br />
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம் <br />
<br />
6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்<br />
<strong>புத்தகம் : மரப்பாச்சி </strong><br />
எழுத்தாளர் : <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=279">புதுவைத் தமிழ்நெஞ்சன்</a> ( அசோகன் )<br />
பதிப்பகம் : தமிழ்மொழிப் பதிப்பகம்<br />
<br />
7.புத்தகப் பிரிவு : திறனாய்வு<br />
<strong>புத்தகம் : வள்ளலாரும் பெரியாரும் </strong><br />
எழுத்தாளர் : மருத்துவர் ஜெய ராமமூர்த்தி<br />
பதிப்பகம் : தனஜோதி பதிப்பகம்<br />
<br />
8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்<br />
<strong>புத்தகம் : நச்சினார்க்கினியர் உரைநெறி</strong><br />
எழுத்தாளர் : ச.குருசாமி <br />
பதிப்பகம் : ராணி பதிப்பகம்<br />
<br />
9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002746">தென்னகத்தின் எழுச்சி</a></strong><br />
எழுத்தாளர் : அ.அய்யாசாமி<br />
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம் <br />
<br />
10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)<br />
<strong>புத்தகம் : சங்கத் தமிழிசை</strong><br />
எழுத்தாளர் : த.கனகசபை<br />
பதிப்பகம் : பொன்னி வெளியீடு<br />
<br />
11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்<br />
<strong>புத்தகம் : தமிழ் நிகண்டுகள்</strong><br />
எழுத்தாளர் : சா.வே.சுப்பிரமணியன்<br />
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்<br />
<br />
12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்<br />
<strong>புத்தகம் : அடேங்கப்பா ஐரோப்பா</strong><br />
எழுத்தாளர் : வேங்கடம் ( திருவேங்கடம் )<br />
பதிப்பகம் : விகடன் பிரசுரம்<br />
<br />
13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு<br />
<strong>புத்தகம் : சமூகவிஞ்ஞானி கலைவாணர்</strong><br />
எழுத்தாளர் : அன்புக்கொடி நல்லதம்பி<br />
பதிப்பகம் : மலர் பதிப்பகம்<br />
<br />
14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு<br />
<strong>புத்தகம் : தகடூர் வரலாறும் பண்பாடும்</strong> <br />
எழுத்தாளர் : இரா.ராமகிருட்டிணன்<br />
பதிப்பகம் : ராமையா பதிப்பகம்<br />
<br />
15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்<br />
<strong>புத்தகம் : இயற்கை அற்புதங்கள்</strong><br />
எழுத்தாளர் : வாண்டுமாமா ( வி.கே.மூர்த்தி )<br />
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம்<br />
<br />
16.புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )<br />
<strong>புத்தகம் : இலக்கிய மனித உரிமைக்கோட்பாடுகள்</strong><br />
எழுத்தாளர் : ஆர்.ஜெகதீசன்<br />
பதிப்பகம் : தாமரை பப்ளிக்கஷன்ஸ்<br />
<br />
17.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்<br />
<strong>புத்தகம் : மக்களவைக் கூட்டத்தை தமிழகத்தில் நடத்துக</strong><br />
எழுத்தாளர்கள் : ரா.பாலகிருஷ்ணன்<br />
பதிப்பகம் : கே.பி.கே நினைவு அரசியல்சார் இதழியல் அரங்கம்<br />
<br />
18.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்<br />
<strong>புத்தகம் : தொழில் முனைவோர் கையேடு</strong><br />
எழுத்தாளர் : எஸ்.எஸ்.மூர்த்தி<br />
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்<br />
<br />
19.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்<br />
<strong>புத்தகம் : வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே</strong><br />
எழுத்தாளர் : <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=302">தமிழ்நாகை</a> ( கோ.அன்பழகன் )<br />
பதிப்பகம் : தமிழ் முனை பதிப்பகம்<br />
<br />
20.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)<br />
<strong>புத்தகம் : சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்</strong><br />
எழுத்தாளர் : க.சிவநேசன்<br />
பதிப்பகம் : அருள் பதிப்பகம்<br />
<br />
21.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்<br />
<strong>புத்தகம் : திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்</strong><br />
எழுத்தாளர் : ப.சுந்தர்<br />
பதிப்பகம் : கபிலன் பதிப்பகம்<br />
<br />
22.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்<br />
<strong>புத்தகம் : கல்விச் சமூகவியல்</strong><br />
எழுத்தாளர் : மா.கருணாநிதி ( இலங்கை )<br />
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்<br />
<br />
23.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்<br />
<strong>புத்தகம் : வாழை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள்</strong><br />
எழுத்தாளர்கள் : இரா.தங்கவேலு, எம்.எம்.முஸ்தபா<br />
பதிப்பகம் : இரா.புவனராஜி வெளியீடு<br />
<br />
24.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்<br />
<strong>புத்தகம் : காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு</strong><br />
எழுத்தாளர் : ஆர்.வி.ஜெபா ராஜசேகரன்<br />
பதிப்பகம் : ஈடன் பதிப்பகம்<br />
<br />
25.புத்தகப் பிரிவு : கணிணியியல்<br />
<strong>புத்தகம் : எளிய தமிழில் எக்ஸெல்</strong><br />
எழுத்தாளர் : ம.லெனின்<br />
பதிப்பகம் : சிக்ஸ்த் ஸென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்<br />
<br />
26.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்<br />
<strong>புத்தகம் : படகர் அறுவடைத் திருநாள்</strong><br />
எழுத்தாளர் : இரா.கு.ஆல்துரை<br />
பதிப்பகம் : நெலிக்கோலு வெளியீட்டகம்<br />
<br />
27.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002793">ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு</a></strong><br />
எழுத்தாளர் : இரா.பாவேந்தன்<br />
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்<br />
<br />
28.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்<br />
<strong>புத்தகம் : திருக்குறள்-வ.உ.சிதம்பரனார் உரை</strong><br />
எழுத்தாளர் : இரா.குமரவேலன்<br />
பதிப்பகம் : பாரி நிலையம்<br />
<br />
29.புத்தகப் பிரிவு : விளையாட்டு<br />
<strong>புத்தகம் : அறிந்துகொள்ளுங்கள் - கால்பந்து</strong><br />
எழுத்தாளர் : பூ.மாரி<br />
பதிப்பகம் : ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-41403651827368608052009-12-28T14:54:00.005+05:302009-12-28T15:30:53.499+05:30சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicj8hx5Q6zjOnNQaY3ejdXWLMWnrrzUBN58pEKJk9LgX8ZTQfhmFpUcF8Qza8mYIbx8aVDAbMt5T1PQcpOjTInBc2p41wm5L6ZPNIRUT5GxdcLWpYNQj4lofNK1ubkVVz-eGRorg/s1600-h/2010-ChennaiBookFair.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicj8hx5Q6zjOnNQaY3ejdXWLMWnrrzUBN58pEKJk9LgX8ZTQfhmFpUcF8Qza8mYIbx8aVDAbMt5T1PQcpOjTInBc2p41wm5L6ZPNIRUT5GxdcLWpYNQj4lofNK1ubkVVz-eGRorg/s320/2010-ChennaiBookFair.gif" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420224463201799874" /></a><br />33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது. <br /><br />பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. <br /><br />தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம். <br /><br /><a href="http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx">http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx</a>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18483310.post-25004042572102777372009-12-25T11:31:00.007+05:302009-12-25T11:54:53.172+05:30ச.வே.சு - 81<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5fpRcvPwiezIC6Z62mUHYpNoM8BRnScoER3sIP7TDY-kk2e9uj-09lCrtis2fpFBme6z4dUyGLb2mmF1cXMn-XTMa3z9BkOqwtNNLBerNEWKFIWD6iFIwA70W08CjsuIZMO88CQ/s1600-h/SVS81.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5419051215303187522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5fpRcvPwiezIC6Z62mUHYpNoM8BRnScoER3sIP7TDY-kk2e9uj-09lCrtis2fpFBme6z4dUyGLb2mmF1cXMn-XTMa3z9BkOqwtNNLBerNEWKFIWD6iFIwA70W08CjsuIZMO88CQ/s320/SVS81.jpg" border="1" /></a><br />அறிஞர் <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=493">ச.வே.சுப்பிரமணியன்</a> அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை <a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=165">மணிவாசகர் பதிப்பகம்</a>, ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.<br /><br />02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.<br /><br /><span style="color:#3333ff;"><strong>தொல்காப்பிய வரிசை </strong><br /></span>நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்<br /><br /><strong><span style="color:#3333ff;">சங்க இலக்கிய வரிசை</span></strong><br />திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு<br /><br /><strong><span style="color:#3333ff;">சிலப்பதிகார வரிசை</span></strong><br />மங்கலவாழத்துப்பாடல், மனையறம்படுத்தகாதை, அரங்கேற்றுகாதை, அந்திமாலை சிறப்பு செய்காதை, இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி, வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவவரி, புறம்சேரி இறுத்த காதை, ஊர்காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழல்படு காதை, கட்டுரை காதை, காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம்தரு காதை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம், தெளிவுரை.விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-20349661388810322262009-07-14T22:47:00.011+05:302009-07-15T08:06:11.972+05:30தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009<a href="http://www.viruba.com/2009worldbookdayissue.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 235px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5358374305895121746" border="1" alt="தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi96l4pLlf4FXsf8KJukMnqaJbAfpos_sgWM4GBCD96RaOpj9xzIHbYRecT21yL0jMxPKNai0sxoBMWwM1wIh5f4Lv-v48Px00MhQ_jWntKGwVLTdnbF0SLT1jv6e2x1VaFnung4Q/s320/2009worldbookdaymalar.jpg" /></a><br />புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....<br /><br />புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....<br /><br />தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.<br /><br />புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.<br /><br />வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.<br /><br />புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.<br /><br />இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.<br /><br /><strong><em>பொருளடக்கம்</em></strong><br /><strong>தனி மனிதப் பதிப்புகள்</strong> <li>ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி</li><li>சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்</li><li>தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்</li><li>வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்</li><li>தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்</li><li>வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்</li><li>வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்</li><li>மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்</li><li>தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்</li><li>உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்</li><li><strong>பொதுக் கட்டுரைகள்</strong> </li><li>பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்</li><li>ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்</li><li>சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி</li><li>மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு</li><li>தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி</li><li>சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா</li><li>ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி</li><li>தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே</li><li>பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு</li><li>19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்</li><li>இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்</li><li>நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா</li><li>நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்</li><li>தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா</li><li>காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்</li><li>நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்</li><li>மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்</li><li>கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்</li><li>பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்</li><li>வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )</li><li>கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்</li><li>கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்</li><li>பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி</li><li>தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்</li><li>தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்</li><li>கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்</li><li><strong>நிறுவனம் சார்ந்த பதிப்புகள்</strong> </li><li>எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்</li><li>பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி</li><li>தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்</li><li>சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்</li><li>அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்</li><li>உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி</li><ul></ul></li><br /><br />தற்போது விற்பனையில்....<br /><br />விலை : ரூ 95.00<br />பக்கங்கள் : 320<br />வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18<br /><br />தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924<br />e-mail : thamizhbooks@gmail.comவிருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-977801268206981392009-06-21T09:23:00.003+05:302009-06-21T09:30:06.118+05:30நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009<a href="http://www.viruba.com/neyveli2009.aspx"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 336px; height: 336px;" src="http://www.viruba.com/images/NeyveliBookfair.gif" border="1" alt="நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009" /></a><br />நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக <a href="http://www.viruba.com/neyveli2009.aspx">ஒரு புதிய பக்கத்தை</a> விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.<br /><br /><a href="http://www.viruba.com/neyveli2009.aspx">நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009</a>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-34399666476248421942009-03-25T20:03:00.011+05:302009-03-25T21:12:37.877+05:30'மஹாகவி'யின் ''பொருள் நூறு''<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLqvqOwiZs4OA7gZTFC7TbOIAYNcukt14-w9MjfGWb4XKvxEuywtucmlr57tVS9gpeipgnT1XgOifeij1tY9Q_3kD4bfe98RtDtLrudoEdoLkxjC5lOfztwx46VhBW5BVNBTt48A/s1600-h/MahakaviTU.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5317134989466151170" style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 171px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="மஹாகவி - து.உருத்திரமூர்த்தி " src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLqvqOwiZs4OA7gZTFC7TbOIAYNcukt14-w9MjfGWb4XKvxEuywtucmlr57tVS9gpeipgnT1XgOifeij1tY9Q_3kD4bfe98RtDtLrudoEdoLkxjC5lOfztwx46VhBW5BVNBTt48A/s200/MahakaviTU.jpg" border="1" /></a> ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.<br /><br /><br /><p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUM8czLfXwFpIGkRu4f6-8eg4BIOeW82F7nwGGgK2sTTVC7wd1Wjpq7IOZsgySAiEIDO2FZExnYCDSNAjv67wtPug3TibWHUWCeJB7v7n3sIcCaOm6Xq7477mlktZflsr374mwyQ/s1600-h/VB0002974.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5317143660558072290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 207px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUM8czLfXwFpIGkRu4f6-8eg4BIOeW82F7nwGGgK2sTTVC7wd1Wjpq7IOZsgySAiEIDO2FZExnYCDSNAjv67wtPug3TibWHUWCeJB7v7n3sIcCaOm6Xq7477mlktZflsr374mwyQ/s320/VB0002974.jpg" border="0" /></a><br /><strong>பாயிரம்</strong><br />1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.<br /><br />கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.<br /><br />தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.<br /><br />ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.<br />அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.<a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=667"><img id="BLOGGER_PHOTO_ID_5317139354996421698" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 129px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="சிற்பி பாலசுப்பிரமணியம்" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5DaLBx-LPvYSe_3LiCs7zqEojjevKIXLlOubFf817tuWSO_ESRH6zZYqFqA2GhBA8Rcy9Zx8O0rt2zdXPAIl0wi741kN4x7UcYNiFSmg5PJ_gNEgUh24iZDSdeX6KWa-MCTk06A/s200/SirpiBalasubramaniyam.jpg" border="1" /></a><br /><br />மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.<br /><br />வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.<br /><br />படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.<br /><br />தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.<br /><br />தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.<br /><br />சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.<br /><br />இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.<br /><br />எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.<br /><br />நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.<br /><br />இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.<br /><br />கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.<br /><br />சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்<br /><br />சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...<br /><em>‘‘ <span style="color:#3333ff;">ஆழப் புதைந்த அறம்போல்<br />முளைத்தெழுந்தாள்<br />வாழி அவளுக்கென் வாழ்த்து </span>’’</em> என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி<br /><br />அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,<br />‘‘ <span style="color:#3333ff;">பார்த்ததே பார்த்த பாங்கில்<br />பாவை கல்லாகி விட்டாள்</span> ’’<br />எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,<br /><br />சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.<br /><br />‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.<br /><br />‘‘ <span style="color:#3333ff;">அன்று பிறந்து<br />இன்று இறப்பதுள்<br />ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்<br />அப்பனே மகனாகி<br />வளர்ந்து<br />உயிர் ஓய்தல் அற்று<br />உயர்வு ஒன்றினை<br />நாடலே உண்மை....</span>’’<br />என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.<br /><br />கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும். </p><p>மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.<br /><br />மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.<br /><br />‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.<br /><br />ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்<br /><br />மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;<br /><br />‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’<br /><br />நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.<br />‘‘ <span style="color:#3333ff;">வல்லரசின் செய்கையினைக் கண்டு<br />வல்லரசு வீசியது குண்டு<br />நல்லபடி நம் மனிதர்<br />நச்சரிப்புத் தீர்ந்து விடத்<br />தொல்லுலகை ஆள்கிறது நண்டு </span>’’<br />இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.<br /><br />எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.<br />‘‘ <span style="color:#3333ff;">சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்<br />சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...<br />வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்<br />வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.</span> ’’<br />உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.<br /><br />புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.<br /><br />அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ<br />எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு<br />கவிதை:<br /><br />‘‘ <span style="color:#3333ff;">அம்பு வில் நம் மூதாதையர் கருவி<br />ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்<br />போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்<br />போயினான்.<br />எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்<br />காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது<br />வீரவான் விழுந்தனன்.... விலாவில்<br />ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே</span> ’’<br /><br />காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.<br /><br />கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.<br /><br />கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.<br /><br />‘‘ <span style="color:#3333ff;">அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே<br />ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே<br />அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்<br />ஆதலால்<br />விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி<br />இருபுறம் கூர் எடுத் தின்னா<br />புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே.</span> ’’<br /><br />அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்<br />சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.<br /><br />இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.<br /><br />‘‘ <span style="color:#3333ff;">அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க<br />உறையின் நீங்கி உலகு வலம் வந்து<br />சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்<br />செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்<br />கைகளில்<br />தேவீ, கலையின் தெய்வமே நீ இக்<br />காவியம் முடிகிற வரை எம்<br />சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே.</span> ’’<br />ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.<br /><br />ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.<br /><br />‘‘ <span style="color:#3333ff;">மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்<br />ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்<br />கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்<br />ஈற்றிலே இரண்டொரு நாவல்<br />தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே</span> ’’<br /><br />கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.<br /><br />வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.<br /><br />‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.<br /><br />அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்: </p><p>‘‘ <span style="color:#3333ff;">வழியெலாம் கற்கள் வைத்தார் தமது<br />சுமையினை இறக்கிச் சும்மா நிற்க<br />பெரிய<br />பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி<br />வாயிலும் வளைவுமாய் வளர்ந்த<br />கோயிலிலும் கல் குடியிருத் தினரே</span> ’’<br />இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.<br /><br />மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.<br />‘‘ <span style="color:#3333ff;">எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்<br />சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்<br />அதிலே,<br />ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்<br />பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்<br />எச்சிறிது எப்பெரிதினுக்கும்<br />ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.</span>’’<br />வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.<br /><br />மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.<br /><br />அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல<br />மஹாகவியும் பேசுவார்:<br />‘‘ <span style="color:#3333ff;">இன்னவை தாம் கவி எழுத<br />ஏற்ற பொருள் என்று பிறர்<br />சொன்னவற்றை நீர் திருப்பிச்<br />சொல்லாதீர்..</span>’’<br /><br />தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.<br />சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.<br />‘‘ <span style="color:#3333ff;">இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்<br />இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்<br />இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்<br />இன்றைய காலத் திக்கட்டுக்கள்</span> ’’<br />அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.<br /><br />ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.<br />‘‘ <span style="color:#3333ff;">‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்<br />நன்று, நன்று!<br />என்று தன்<br />காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்<br />சென்றவன் மீண்டனன். சிரித்தான்<br />இன்று போனவன் நேற்று வந்தனனே</span>’’<br /><br />மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.<br /><br />நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,<br />பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.<br /><br />மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.<br /><br />இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.<br /><br />மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.<br /><br />இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.<br /><br />ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். - <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=667">சிற்பி பாலசுப்பிரமணியம்</a><br /><br /><strong>முன்னீடு</strong><br /><br />ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.<br /><br />இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.<br /><br />அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.<br /><br />நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!<br /><br />குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.<br /><br />'<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0000252">வரலாற்றில் வாழ்தல்</a>’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’<br /><br />அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.<br /><br />என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.<br /><br />குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.<br /><br />கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.<br /><br />நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.<br /><br />அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.<br /><br />கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.<br /><br />பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.<br /><br />மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.<br /><br />இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=133">எஸ்.பொ</a> </p><br />128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு <a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=28">மித்ர</a> வெளியீடாக வந்துள்ளது. <br />இதன் விலை ரூ 100.00விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-73396898254144286322009-03-14T12:33:00.020+05:302009-03-14T14:52:35.934+05:30மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்<strong>1.<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002973">கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது</a></strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002973"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpYH_p0gV3fyfSTcJekaCzR7Bp7Nh2lHs4stbCZ3h08rXvDc1V05IL-CJwf5v5bWFFI2WB1fh0qtl7NOfU-kJKQNqsobzrIwtpU1-SLj5Z2G_Q5qayqek4uA8xWXOClNk8LRcSHA/s320/VB0002973.jpg" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5312937653886554754" /></a><br />'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள். <br /><br /><strong>காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம்</strong> என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....<br />\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது. <br /><br />தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு. <br /><br />அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\<br /><br /><strong>2.<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002972">அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்</a></strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002972"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8MkwoK35fGt0QyJLLvTJmKlwCBhrlDlIC1P2UmHeiPfIP1rgAuiDry0FU0OKrw34stgNdqOa209zM2oZ715g3tbidPckVzljC7Sw63mQawDx0LHewy3eSpuBZVPe35StbWNHrXQ/s320/VB0002972.jpg" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5312937440586139202" /></a><br />பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன. <br /><strong>- வைகறை</strong><br /><br />'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள் <br /><strong>- கோவி.லெனின்</strong><br /><br />25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...<br /><br />பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். <br /><br />“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு” <br /> என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார். <br /><br />“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”<br /> என்று வ.ரா சொன்போது <br /><br /><strong>பாரதி கேட்டார். <br /><br />“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”<br /><br />இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.</strong><br /><br />“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு. <br /><br />இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?<br /><br /><strong>3.<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002971">சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி</a></strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002971"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS0BR2nTsEiHfI9waX4GFOoijM_FitlciCQSfj9Y8rK3zN2v9O0R53JbrWA6hbsXg7a_-x6JcC_LqdGGx2xMr1i2oQvkM4AvgaAmTEl1p-ZY7KGK1FjPixG6uKNcDJcrdbRL2VCA/s320/VB0002971.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5312937191750933138" /></a><br />அழகிய பெரியவனின் <strong>நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள்</strong> என்ற முன்னுரையின் சில பகுதிகள்.... <br /><br />தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....<br /><br />.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.<br /><br />இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...<br /><br />இம் மூன்று புத்தகங்களும் <a href="http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=240">இன்று</a> மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன. <br /><br />மேலதிக தகவல்களுக்கு..<br /><br />வைகறை<br />சாளரம்<br />2/1758, சாரதி நகர்<br />என்ஃபீல்டு அவன்யூ,<br />மடிப்பாக்கம்,<br />சென்னை - 600091விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-64224253620599219172009-01-14T09:36:00.006+05:302009-01-14T10:12:09.031+05:30மறை பொருள் வாசிப்புஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக் கருதப்படுகிறது. எழுத்தாளர்கள் பலரும் இவ்வாறு தாம் எழுதுவதையும், தன் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகன், அதனை உரியவாறு புரிந்துகொள்வான் என்பதையும் பெருமையுடன் கூறுவதும் உண்டு.<br /><br />இவ்வறே தான் நவீன ஓவியங்களும். நேரடியான எழில் மிகு ஓவியங்களைவிட கோடுகள், கிறுக்கல்கள் மிகுந்த நவீன ஓவியங்கள் நேரடியாக எதையும் கூறாமல், மறை பொருளிலேயே அதன் வெளிப்படுகளைத் தருகின்றன. <br /><br />எழுத்துக்கள், கவிதைகள், ஓவியங்கள் போலவே படங்களும் சில வேளைகளில் சொல்லாத சேதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக அமையலாம். <br /><br />இவ்வாறு அண்மையில் என் கண்ணில் பட்ட ஒரு மாத இதழின் அட்டைப்படத்தில் மறைபொருள் பல உள்ளதை என்னால் உணர முடிந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoNak0mxpXHebL1xxtVOATBuyLl_jOn55eh7wbT4H_0rj7-oueVHSBxd34jjKxu0vLNTBq0c5SxcfEYxK0lp_Qe_wuCHSyd8Z9eQsrPaeLgS9VCo81NKeLZ8WjUSg7G_ii9iKKeQ/s1600-h/sportsmen.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoNak0mxpXHebL1xxtVOATBuyLl_jOn55eh7wbT4H_0rj7-oueVHSBxd34jjKxu0vLNTBq0c5SxcfEYxK0lp_Qe_wuCHSyd8Z9eQsrPaeLgS9VCo81NKeLZ8WjUSg7G_ii9iKKeQ/s320/sportsmen.jpg" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5291001785650693490" /></a>( படத்தை அழுத்துவதன் மூலம் மிகப் பெரிய படத்தை நீங்கள் பார்வையிடமுடியும்.)<br /><br />இவ் இதழின் அட்டைப் படத்தில் காணப்படும் வாசகங்கள், இதழின் தலைப்பு, இதழின் பெருமை, புகைப்படம் ஆகிய விடயங்களைக் கொண்டு வாசகர்கள் உணரக்கூடிய மறை பொருள் யாவை.<br /><br />மிகச் சிறந்ததும், மிகச் சரியானதுமான மறைபொருளை உணர்த்தும் வாசகருக்கு, விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள, <a href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx">2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்</a> பட்டியலில் இருந்து அவர் விரும்பும் புத்தகங்கள் இரண்டினை வழங்கவுள்ளோம்.விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-60605836691858746502009-01-10T14:13:00.010+05:302010-05-08T07:33:21.462+05:30தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2007 ஆம் ஆண்டிற்கான,( 2007.01.01 முதல் 2007.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.<br />
<br />
<a href="http://www.viruba.com/TN-Gov-Award-Rules.aspx">அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில்</a>, 26 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தினத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.<br />
<br />
இரு வகைப்பாடுகளில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை. மூன்று வகைப்பாடுகளில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. வகைப்பாடு 17 இல் மானிடவியல், நிலவியல் எனத் துறை வேறுபட்டுள்ளமையும், நடுவருள் இருவர் இரு நூல்களுக்கும் முதற் பரிசு மதிப்பெண் கொடுத்துள்ளமையும் கருத்தில் கொள்ளபட்டு, பரிசுகள் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே பதிப்பகம் <a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=402">தென்திசை பதிப்பகம்</a> பதிப்பித்த மூன்று புத்தகங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.<br />
<br />
1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை<br />
<strong>புத்தகம் : திருத்தொண்டர் காப்பியம்</strong><br />
எழுத்தாளர் : சூ.இன்னாசி<br />
பதிப்பகம் : காவ்யா பதிப்பகம்<br />
<br />
2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002069">கனவைப் போலொரு மரணம்</a></strong><br />
எழுத்தாளர் : அ.வெண்ணிலா<br />
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்<br />
<br />
3.புத்தகப் பிரிவு : புதினம்<br />
<strong>புத்தகம் : நதியின் மடியில்</strong><br />
எழுத்தாளர் : ப.ஜீவகாருண்யன்<br />
பதிப்பகம் : அருள் புத்தக நிலையம் - கடலூர்<br />
<br />
4.புத்தகப் பிரிவு : சிறுகதை<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002171">ஆலமர இடையழகு</a></strong><br />
எழுத்தாளர் : எழில்வரதன்<br />
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்<br />
<br />
5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )<br />
<strong>புத்தகம் : அக்கினிக் குஞ்சு</strong><br />
எழுத்தாளர் : முனைவர் மா.பா.குருசாமி<br />
பதிப்பகம் : காந்திய இலக்கியச் சங்கம் - மதுரை<br />
<br />
6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0001594">மருது சகோதரர்கள்</a> </strong><br />
எழுத்தாளர் : சு.குப்புசாமி<br />
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்<br />
<br />
7.புத்தகப் பிரிவு : திறனாய்வு<br />
<strong>புத்தகம் : சிலம்பில் பாத்திரங்கள் பங்கும், பண்பும்</strong><br />
எழுத்தாளர் : முனைவர் கா.மீனாட்சி சுந்தரம்<br />
பதிப்பகம் : ருக்மணி-இராமநாதன் அறக்கட்டளை - காரைக்குடி<br />
<br />
8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்<br />
<strong>புத்தகம் : வ.ஐ.சுப்பிரமணியம் கட்டுரைகள் ( இரண்டு தொகுதிகள் )</strong><br />
எழுத்தாளர் : வ.ஐ.சுப்பிரமணியம் <br />
பதிப்பகம் : அடையாளம் - திருச்சி<br />
<br />
9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்<br />
<strong>புத்தகம் : அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்</strong><br />
எழுத்தாளர் : மு.சுப்பிரமணி<br />
பதிப்பகம் : சீதை பதிப்பகம்<br />
<br />
10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002059">உலக சினிமா வரலாறு ; மௌனயுகம்</a></strong><br />
எழுத்தாளர் : அஜயன் பாலா<br />
பதிப்பகம் : தென்திசைப் பதிப்பகம்<br />
<br />
11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002872">நடுநாட்டுச் சொல்லகராதி</a></strong><br />
எழுத்தாளர் : கண்மணி குணசேகரன்<br />
பதிப்பகம் : தமிழினி<br />
<br />
12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்<br />
<strong>புத்தகம் : கலை வரலாற்றுப் பயணங்கள்</strong><br />
எழுத்தாளர் : மு.ஸ்ரீனிவாசன்<br />
பதிப்பகம் : சேகர் பதிப்பகம்<br />
<br />
13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு<br />
<strong>புத்தகம் : தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்</strong><br />
எழுத்தாளர் : அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி<br />
பதிப்பகம் : அனிதா பதிப்பகம் - திருப்பூர்<br />
<br />
14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு<br />
<strong>புத்தகம் : புதுச்சேரி மாநிலம் - வரலாறும் பண்பாடும் </strong><br />
எழுத்தாளர் : முனைவர் சு.தில்லைவனம்<br />
பதிப்பகம் : சிவசக்திப் பதிப்பகம் - புதுச்சேரி<br />
<br />
15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002859">பெரும்புகழ் எறும்புகள்</a></strong><br />
எழுத்தாளர் : முனைவர் மலையமான்<br />
பதிப்பகம் : அன்புப் பதிப்பகம் - சென்னை <br />
<br />
16.புத்தகப் பிரிவு : பொறியியல், தொழில்நுட்பம்<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002774">மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்</a></strong><br />
எழுத்தாளர் : உலோ.செந்தமிழ்க்கோவை<br />
பதிப்பகம் : பாவை பப்ளிக்கேஷன்ஸ்<br />
<br />
17.(அ)புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )<br />
<strong>புத்தகம் : பண்பாடு ; வேரும் விழுதும்</strong><br />
எழுத்தாளர் : <a href="http://localhost/raja/atotalbooks.aspx?id=393">சு.இராசரத்தினம்</a><br />
பதிப்பகம் : தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன் - கனடா<br />
<br />
17.(ஆ)புத்தகப் பிரிவு : நிலவியல் ( மானிடவியல், சமூகவியல், புவியில் ) <br />
<strong>புத்தகம் : பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்</strong><br />
எழுத்தாளர்கள் : முனைவர் ஜி.மணிமாறன், கே.ரேணுகா<br />
பதிப்பகம் : ரேணுகா பதிப்பகம் - திருநெல்வேலி<br />
<br />
18.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்<br />
<strong>புத்தகம் : இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும் </strong><br />
எழுத்தாளர்கள் : டாக்டர் ஜி.பாலன், டாக்டர் டி.தட்சிணாமூர்த்தி<br />
பதிப்பகம் : வானதி பதிப்பகம்<br />
<br />
19.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்<br />
நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.<br />
<br />
20.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்<br />
<strong>புத்தகம் : மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4</strong><br />
எழுத்தாளர் : டாக்டர் இரா.மாணிக்கவாசகம்<br />
பதிப்பகம் : அன்னை அபிராமி அருள் - சென்னை<br />
<br />
21.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)<br />
<strong>புத்தகம் : உயிர்காக்கும் சித்த மருத்துவம்</strong><br />
எழுத்தாளர் : டாக்டர் கே.ஏ.சிதம்பரகாங்கேயன்<br />
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் <br />
<br />
22.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்<br />
<strong>புத்தகம் : மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும் </strong><br />
எழுத்தாளர் : முனைவர் க.விநாயகம்<br />
பதிப்பகம் : ஸ்ரீ அன்னை நூலகம் - திண்டிவனம்<br />
<br />
23.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்<br />
<strong>புத்தகம் : <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002835">கற்பித்தலில் புதிய அணுகுமுறை</a> ( வரலாறு )</strong><br />
எழுத்தாளர்கள் : முனைவர் சு.வசந்தி, முனைவர் பி.இரத்தினசபாபதி <br />
பதிப்பகம் : வனிதா பதிப்பகம் - சென்னை<br />
<br />
24.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்<br />
<strong>புத்தகம் : ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும் </strong><br />
எழுத்தாளர்கள் : முனைவர் வெ.சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ்<br />
பதிப்பகம் : மெர்க்குரிசன் பப்ளிக்கேஷன்ஸ் - சென்னை<br />
<br />
25.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்<br />
<strong>புத்தகம் : தமிழகச் சுற்றுச் சூழல் </strong><br />
எழுத்தாளர் : இரா.பசுமைக்குமார்<br />
பதிப்பகம் : தாமரை பப்ளிக்கேஷன்ஸ்<br />
<br />
26.புத்தகப் பிரிவு : கணிணியியல்<br />
ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.<br />
<br />
27.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்<br />
<strong>புத்தகம் : தமிழர் கலை இலக்கிய மரபுகள்</strong><br />
எழுத்தாளர் : முனைவர் ஆறு.இராமநாதன்<br />
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்<br />
<br />
28.புத்தகப் பிரிவு : வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம்<br />
ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.<br />
<br />
<br />
29.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு<br />
நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.<br />
<br />
30.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்<br />
<strong>புத்தகம் : திராவிட இயக்க வரலாறு </strong><br />
எழுத்தாளர் : கே.ஜி.இராதா மணாளன்<br />
பதிப்பகம் : பாரி நிலையம்<br />
<br />
31.புத்தகப் பிரிவு : விளையாட்டு<br />
ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.<br />
<br />
பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கும், பதிப்பகங்களுக்கும் விருபா தளத்தின் வாழ்த்துக்கள்.விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18483310.post-36081978497121890612009-01-08T16:05:00.006+05:302009-01-08T16:46:54.970+05:30ஈழத்து இலக்கியம்தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில் <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=392">செ.யோகநாதன்</a>, யோ.சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002127">வெள்ளிப் பாதசரம்</a> ஒன்றாகும், அதன் கனமான முன்னுரை காரணமாக தனித்துவமான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இப்புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் பலவற்றைக் கொண்டது. 1993 இல் வெளியான இந்தப் புத்தகத்தின் முன்னுரை பல தரவுகளைத் தரவல்லது, ஆகையால் இணையத்தில் இருப்பது நல்லது என்ற நோக்கில் இதனை நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.... <br /><br /><strong>ஈழத்து இலக்கியம்</strong><br /><br /> நவீன ஈழத்துப் படைப்பிலக்கியம் பற்றி பூமிப்பந்தெங்கணும் இன்று பேச்சடிபடுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரத்தின் பயனாக பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு நடுவேயும் அவர்கள் நமது பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கலாச்சார வெளிப்பாடுகளை ஊக்கத்தோடு நிகழ்த்துகிறார்கள். இலக்கிய ரீதியான அவர்களின் முயற்சிகளை அவர்களது பல்வேறு விதமான பத்திரிகை, நூல் வெளியீட்டு முயற்சிகள் தெரியப்படுத்துகின்றன. இந்தவிதமான புலம்பெயர்ந்த இலக்கிய முயற்சி, ஈழத்தின் இலக்கிய முயற்சிகளின் இன்னொரு பரிணாமமே என்பதனை வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. உலக ரீதியாகவே ஈழத் தமிழர்களால் தெரியப்படுத்தப்பட்டு வரும் இந்த இலக்கிய முயற்சியை உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்குகிறார்கள். ஆழத்து இலக்கியத்தின் வளத்தினை முழுமையாக அறிவதற்கு விரும்புகிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமன்றி எல்லா உலகத் தமிழருக்குமே ஈழத்துச் சிறுகதைப் போக்கினையும் செழுமையையும் அறிந்து கொள்ளவதற்கு இந்தத் தொகுதிகள் உதவி செய்யும். அதன் காரணமே அக்கதைத் தொகுதிகளுக்கான இந்த விரிவான அறிமுகவுரை.<br /><br /> தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், தென்னாப்பரிக்கா, பிஜித் தீவுகள், மொரிஷியஸ் என்பவை இவற்றிலே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. மேற்கூறியவற்றுள், இந்தியா இந்தத் தமிழ்பேசும் மக்கள் திரளின் முதல் வசிப்பிடமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்து போயினர். <br /><br /> இவ்வாறு தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற நாடுகளில் இலங்கை மிகவும் முக்கியமானது. இலங்கை தவிர்ந்த மற்ற நாடுகளின் புலப்பெயர்ச்சி கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தொடங்கிற்று. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்புலப் பெயர்வு நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவுக்கு வெகு அருகிலே இலங்கை அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. அருகிலிருந்த காரணத்தால் அதிக தொகையில் புலம்பெயர்ந்து, தமது வாழிடத்தை இங்கே உருவாக்கிக் கொண்டனர் தனியாகவே வாழவும் தொடங்கினர். தமிழ்மொழி என்ற பொதுத்தன்மை ஒன்றினைவிட மொழி அமைப்பு முதல் பண்பாட்டுப் பழக்கங்கள், பொருளியல், சிந்தனைப் போக்குகள் வரை தங்களுக்கென்று பல தனித்தன்மைகளை இவர்கள் கொண்டு வாழத்தொடங்கினார்கள். இலக்கிய வளர்ச்சிப்போக்கும் இந்தத் தனித்துவ நெறி வழியிலேயே அமைந்தது. தமிழலக்கியம் என்று குறிக்கப்படும்போது அது தமிழ் நாட்டிலே மட்டும் தோன்றுகின்ற இலக்கியமாக இருக்க முடியாத நிலைமையும் உண்டாகியுள்ளது. ஆங்கில, அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியிலே எழுதப்பட்டாலலும் சொற்கள், மொழிநடை, உள்ளடக்க முறைகள் என்பன எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைப் போலவே தமிழகத்தில் வளர்ந்த இலக்கியத்திற்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலே கூறிய அமெரிக்க, பிரித்தானிய மக்களின் வாழ்க்கை முறைகளும் இவ்விதமே வித்தியாசப்பட்டுள்ளன.<br /><br /> பழந்தமிழ் இலக்கிய மரபில் இலங்கை ‘ ஈழம்” என்றே குறிக்கப்பட்டு வருகின்றது. ‘ஈழ மண்டல நாடெங்கள் நாடே” என்று பேசப்பட்டு வந்திருக்கின்றது, ஈழத்தமிழிலக்கியத்தின் சமூக அடிப்படை, இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசம் மக்கள்திரளின் வாழ்க்கை அமைப்பேயாகும். அத்திரளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. அகமொழி, சமய பண்பாடு, சமூக அமைப்புமுறை என்பவற்றின் அடிப்படையிலே இம் மூன்று பிரிவினரும் அமைகின்றார்கள். ஒன்று இங்கு வரலாற்றுக் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள். இவர்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியிலே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இரண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு தெற்கு, மத்திய பகுதிகளிலே தலைமுறை தலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற இஸ்லாமிய சமயத்தினர். மூன்று த்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரித்தானியரால் இந்தியாவில் இருந்து, இலங்கையின் தேயிலை ரப்பர் ஆகிய பொருந்தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள்.<br /><br /> இம்மூன்று பிரிவினரையும் மொழி அடிப்படையில் ஒரே தொகுதியினராக நோக்கும் போக்கு வளர்ந்துள்ளது. முதலாவது, மூன்றாவசது பிரிவினரை இறுக இணைப்பதற்கான அரசியல் சமூக இயக்கங்கள் கடந்த தசாப்தங்களாக இயங்கி வருகின்றன. <br /><br /> இலங்கையின் பண்பாட்டு அமைப்பில் இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படுவர்கள் முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்களே. வரலாற்றுக் காலந்தொடங்கி, பின்னர் ஏற்பட்ட தென்னிந்தியப் புலப் பெயர்வால் வந்து குடியேறி புவியியல், பண்பாட்டு அடிபெ;படையில் அவர்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.<br /><br /> இலங்கையின் மக்கட்தொகை விபரத்தை தோராயமாக பின் வருமாறு குறிப்பிடலாம்: சிங்களவர் தவிர இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர்9.3% இலங்கை முஸ்லிம்கள். 6.5% தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் 27% ஆக மொத்த மக்கட்தொகையில் உள்ளனர். ( இது 1975-ம் ஆண்டு மக்கட் தொகை விபரம்.)<br /><br /> ***<br /><br /> ஈழத்து இலக்கிய மரபின் முதல்வராக சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் குறிப்பிடப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் செய்யுட்களில் ஆழத்தைப் பற்றிய எந்தத் தகவல்களும் காணப்படவில்லை. இலங்கையில் இன்றுகிடைக்கின்ற காலத்தால் முந்திய தமிழ் நூல் ( கி.பி 1310) போசராசரால் எழுதப்பட்ட ''சரசோதிட மாலை'' என்பது. <br /><br /> கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண ராச்சியம் உருளவாயிற்று. இந்த அரசு போர்த்துக்கேயர் 1619-ல் வடபகுதியை வெற்றி கொள்ளும் வரை நீடித்தது. இந்த யாழ்ப்பாண ராச்சிய ஆட்சியில் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றது. அரசகேசரி, காளிதாசரின் இரகுவம்சத்தை முதனூலாகக் கொண்டெழுதிய செய்யுள் நூல் இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.<br /><br /> 1619 முதல் 1796 வரை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் பெரும்பகுதியை அரசாட்சி செய்தனர். இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவ சமயம் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவ, சைவ சமயம் சார்ந்த இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின.<br /><br /> 1796-ல் ஆல் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலத் திருச்சபையும், அமெரிக்க மிஷனரிகளும் சமய மாற்றத்தை முக்கியமாக மனங்கொண்டு இலக்கியங்களை உருவாக்கினர். இந்தப் போக்குக்கு எதிராக வசன நடைகை வந்த வல்லாளரான ஆறுமுக நாவலர் ( 1822-1879 ) ஒரு இயக்கமாகவே செயற்பட்டார். சைவத்தையும், தமிழையும் வாழ்விக்க வந்தவராக நாவலர் கருதப்பட்டார். அவர் கிறிஸ்தவருக்கு தமிழ் போதித்ததோடு நில்லாது, பைபிளையும் தமிழிலே அழகுற மொழி பெயர்த்தார்.<br /><br /> நாவலரது இலக்கிய, சமயப்பணிகள், தமிழரிடையே பண்பாட்டு இயக்கமொன்றினையே உருவாக்கிற்று. தமிழ் இலக்கியக் கல்வி, இலக்கிய பாரம்பரியம் என்பனவற்றின் ஈழத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதில் நாவலரின் பங்களிப்பு உன்னதாமானது. அவர் நவீன தமிழ் அச்சு, பதிப்புத் துறைகளில் ஈடிணையற்ற சாதனைகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார். இவரது வழியில் தமிழ் தந்த தாமோதரனார் என்றழைக்கப்படும் சி. வை. தாமோதரம் பிள்ள ( 1832-1910) ஆகியோர் உழைத்தனர்.<br /><br /> இலக்கண நூல்கள் ஈழத்தில் தோன்றியது போலவே அகராதிகளும் உருவாகின. 1842-ம் ஆண்டில் போரகராதியும், தொடர்ந்து ''உவின்ஸ்லோ'' அகராதியும் வெளியாகின. இலக்கிய முயற்சிகளுக்கு இது உந்து சக்தியாக அமைந்தது.<br /><br /> ஆர்னல்ட் சதாசிவம் பிள்ள என்பவர் 1866-ல் ''பாவலர் சரித்திர தீபகம்'' என்ற தமிழ்ப்புலவர் சரித்திர நூலை எழுதினார். அத்தோடு சிறுகதைப் போக்கிலமைந்த ''நன்னெறிக் கதாசங்கிரகத்தை''யும் வெளியிட்டார்.<br /><br /> 1876-ல் தமிழின் முதலாவது நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளியாகிற்று. இது வெளியாகி ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் கண்டியைச் சேர்ந்தவரான அறிஞர் சித்திலெவ்வை (1838-1898) அஸன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.<br /><br /> 1895-ல் தி.த. சரவணமுத்துப் பிள்ளையின் ''மோகனாங்கியும்'', 1891-ல் எஸ் இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதையும் வெளியாகின. இவர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் ''மோகனாங்கி'' நாவல் தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். இதுவே தமிழில் தோன்றியே முதல் வரலாற்று நாவல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.<br /><br /> ''இடைக்காடர்'' என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டு எழுதத் தெராடங்கியவர் நாவலாசிரியர் நாகமுத்து (1868-1932). இவர் 'நீலகண்டன்', 'சித்தகுமாரன்' ஆகிய இரண்டு நாவல்களையும, ‘சிறிய வினோதக் கதை'களையும் எழுதியவர். யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களையும் கண்டி, அனுராதபுரம் போன்ற நகரங்களையும் பினனணியாகக் கொண்ட இந்த மண் மணங்கமழும் நாவல் முற்று முழுதாகவே ஒரு ஈழத்துக்கதையாக மிளிர்கின்றது.<br /><br /> இருபதாம் ந}ற்றாண்டு ஈழத்து இலக்கிய முதல்வராகப் புகழ்ந்துரைக்கப்படும் பாவலர் துரையப்பா பிள்ளை (1872-1929) மாகவி பாரதியின் சமகாலத்தவர். இவருடைய படைப்புக்கள் ஈழத்தின் படைப்பிலக்கியத்தினை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் சென்றன.<br /><br /> ***<br /><br /> 1930-ம் ஆண்டின் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் விளைவாக தமிழக இலக்கியத்தில் ஒரு வேகம் தோன்றிற்று. இலக்கிய முயற்சிகளுக்காகவே 'மணிக்கொடி' தோன்றிற்ற. 1932-ல் இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம், படித்த மத்தியதர வர்க்கத்திடையே இலக்கிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கிற்று. அரசியல் நோக்கத்திற்காக பத்திரிகைகளும் சஞ்சிகைகளுடன் தோற்றுவிக்கப்பட்டன. தென்னிந்திய இலக்கியத் தளங்கள், அக்கால ஈழத்து எழுத்தாளர்களை ஈர்த்தன. எனவே உருவச் செழுமையுடன் சிறுகதைகள் எழுதப்படலாயின. இப்படி எழுத்துத்துறைக்கு வந்த சிறுகரை முன்னோடிகள், இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் இவர்களின் எழுத்துக்கள் தமிழகத்தில் ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன், ஆகிய இதழ்களில் வெளியாகின ஈழகேசரியும் இங்கே கதைகளைப் பிரசுரித்தது. மணிக்கொடியின் மறைவின் பின்னே தமிழகத்தில் ''கலாமோகினி'', ''பாரதா தேவி'', ''சூறாவளி'' போன்ற பத்திரிகைகள் தோன்றின இந்த இதழ்களிலும் ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளரான இம் மூவரும் தொடர்ந்து எழுதினார்கள்.<br /><br /> மணிக்கொடியின் தாக்கம் இலங்கையில் மறு மலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிற்று. இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களான தி.ச. வரதராசன் (வரதர்), அ.செ. முருகானந்தம், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, ச.பஞ்சாட்சர சர்மா ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ''மறுமலர்ச்சி'' என்ற இதழ் வெளி வந்து மூன்று ஆண்டுகள் வெளியாகி நவீன இலக்கியத்தை ஒரு பாய்ச்சலோடு முன்னெடுத்துச் சென்றது. மறுமலர்ச்சியைப் போலவே ஈழகேசரி இதழும் தனது பண்ணையில் பல எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தது. அவர்களில் சு. இராஜநாயகம், சொக்கன், வ. அ. இராச ரத்தினம் சு.வே. கனக செந்திநாதன் ஆசியோரும் அடங்குவர்.<br /><br /> 1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிற்று. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், கே. ஏ. அப்பாஸ் ஆகியோர் இதன் முக்கியஸ்தர்கள். இதன் எதிரொலியாக 1940 களில் ஈழத்திலும் முற்போக்கு இடதுசாரி சார்பான எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் தோன்றின. ''பாட்டாளி'', ''பாரதி'' ஆகிய இதழ்கள் கே. கணேஷ், கே. ராமநாதன், எம்.பி. பாரதி ஆகியோரை வெளிப்படுத்திற்று.<br /><br /> 1946 ஆண்டில் ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்'' தோன்றிற்று முற்போக்கு எண்ணங் கொண்ட சகல எழுத்தாயளர்களையும் ஒன்றிணைத்து கலை இலக்கிய மேம்பாட்டிற்கு உழைப்பதை இது தனது கொள்கைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்தது. 1956-ம் ஆண்டிலிருந்து உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கிற்று இது.<br /><br /> ஈழத்திலே உருவாக்கப்படுகின்றன தமிழ் இலக்கியம் ஈழத்துமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைக்கவேண்டுமென்ற கருத்து இக்காலப் பகுதியிலே முன் வைக்கப்பட்டது. இந்த ''மண்வாசனை'', ''ஈழத்திலக்கியம்'' என்னும் குரலே தேசிய இலக்கியம் என்கின்ற கருத்தாக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. ''நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார அமைப்பு, நமது கலாச்சாரப் பாராம்பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கமும் விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத்தின் அடிப்படையாகும்'' என்றார் பேராசிரியர் கைலாசபதி.<br /><br /> இந்தப் போக்கு பல்வேறு தளங்களிலும் செறிந்து ஈழத்து எழுத்தை வளப்படுத்திற்று.முற்போக்கு இலக்கிய அணியோடு முரண்பட்ட எழுத்தாளர்கள் தனி அமைப்புகளாக இயங்கினார்கள். யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாற்றம் பெற்று எந்த சித்தாந்தத்தையும் சாராமல் எழுதுகிறது எழுத்தாளர்களாக தனது சார்பாளர்களைப் பிரகடனப்படுத்திற்று. எனினும் இவர்களில் பலர் பிரதேச வழக்குடன் மண்மணம் கமழ எழுதி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக ''யாழ் இலக்கிய வட்டம்'' செயற்பட ஆரம்பித்தது.<br /><br /> 1960-ம் ஆண்டு முதல் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாகிற்று. இதன் பயனாக புதிய இளைஞர்கள் எழுத்துத்துறைக்கு ஆர்வத்துடன் வரலாயினர்.<br /><br /> தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்கள் உச்ச கட்டத்திற்கு போனபோது நிறையத் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தமது மனக் கொதிப்பையும் உணர்வுகளையும் அங்கேயே வெளியான பத்திரிகைகள் மூலம் படைப்பிலக்கியங்களாக இவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இவ்விதம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாகியுள்ளது. இதுவே இன்றைய ஈழத்து இலக்கியத்தின் இன்னொரு பரிணாமம்.<br /><br /> ***<br /><br /> 1960-ஆம் ஆண்டுவரையில் மட்டக்கிளப்பிலே எழுத்தாளர் சங்கம் எதுவும் தோன்றவில்லை.எஸ். பொன்னுத்துரையின் ஆர்வமும், முயற்சியும் கிழக்கு மாகாணத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்ற வழி வகுத்தன. "மட்டக்கிளப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம்", "கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்", "திரிகோணமலை எழுத்தாளர் சங்கம்", "கிண்ணியாத் தமிழ் எழுத்தாளர் சங்கம்" என்பவற்றை இணைந்து கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக எ..ப் எக்ஸ்ஸி நடராசாவும், பொதுச் செயலாளராக எஸ். பொன்னுத்துரையும் பணியாற்றினர்.<br /><br /> கிழக்கிலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு இதன் செயற்பாடு உதவிற்று ஈழத்திலக்கியத்திற்கு வளம் சேர்த்தது.<br /><br /> ***<br /><br /> மலையகத் தொழிலாளர் வாழ்வைப் பொறுத்த வரை 1920-1940 வரை முக்கியமான காலமாகும். தஞ்சாவூரில் பிறந்து இலங்கைக்கு வந்து மலையக மக்களுக்கா அல்லும் பகலுமுழைத்த தொழிங்சங்க வாதியான கோ. நடேசைய்யரின் அரும்பணிக்காலம் இது. இவரின் எழுத்துக்கள் மலையக மக்களை எழுச்சியுற வைத்தன. பத்திரிகையாளரான இவர் சிறுகரையும் எழுதியுள்ளார்.<br /><br /> இரவீந்திரநாத தாகூர் 1934 ஆண்டு இலங்கைக்கு வந்தார். அப்போது இருபது வயது நிரம்பிய சி.வி. வேலுப்பிள்ளை என்ற இளைஞர் "பத்மாஜனி" என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதிவைத்திருந்தார். அதை தாகூரிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இதே கவிஞர் மலையக மக்களின் துன்பவாழ்வை வெளியுலகிற்கு தன் கவிதைகள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர் இவர் பாராளமன்றப் பிரதிநிதியானார். 1948-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வஞ்சகமாக மலை நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்தது. சோகமும் சினமுமாக இவரது கவிதைகள் இக்காலத்தில் வெளிப்பட்டன.<br /><br /> 1960-ம் ஆண்டுகளில் விழிப்புற்றதொரு மலையகப் பரம்பரை தோன்றிற்று. இவர்கள் புதுமையையும், போராட்டங்களையும் அனல் தெறிக்கும் எழுத்துகளையும் தமது தோழமையாகக் கொண்டவர்கள். 1828-ம் ஆண்டிலிருந்து தோன்றிய மலையக மக்களின் துயரத்தை இவர்களது நெஞ்சம், ஆறாத் தழும்பாகக் கொண்டிருந்தது. இதற்கு அவர்கள் இலக்கிய வெளிப்பாட்டால் எதிர்க்குரல் கொடுத்தன். இதை சி.வி. வேலுப் பிள்ளை ஆதரித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். இப்படி உயிர்த் துடிப்புடன் 1960 களில் தோன்றிய மலையக இலக்கியத்தின் முன்னோடிகளாக என்.எஸ்.எம், ராமையா, கே. கணேஷ், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன் சி. பன்னீர்ச்செல்வம் போன்றோர் தோன்றினார்கள்.<br /><br /> மலையக எழுத்தை வளர்ப்பதில் 'வீரகேசரி'ப் பத்திரிகை பெரும் பங்கை வகித்தது. அதில் தோட்ட மஞ்சரிக்கு பொறுப்பாயிருந்த எஸ்.எம். கார்மேகம் மலையக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி எழுத வைத்தார் சிறுகதைப் போட்டிகள் மூலம் இன்றைய பிரபல மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இவரின் முயற்சிக்கு பெரி கந்தசாமி, இரா. சிவலிங்கம், பொஸ்கோஸ், கருப்பையா, செந்தூரன் ஆகியோர் பக்கபலமாயிருந்தனர். இவர்கள் பொறுப்பேற்றிருந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக எழுத்தாளரை ஸ்தபன அமைப்பின் மூலம் முன்னேறச் செய்தது.<br /><br /> இந்த முக்கியமான பணியை சாரல் நாடன், அந்தனி ஜீவா ஆகியோர் இன்று தொடருகின்றனர். "கொழுந்து", "குன்றின் குரல்", "மல்லிகை" ஆகிய இதழ்கள் மலையக எழுத்தை வளர்ப்பதில் முழு ஆர்வங்காட்டுகின்றன. மலையகச் சிறுகதைகள் சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் பெறுபதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.<br /><br /> ஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகம் பெற்றிருப்பது இந்த வரலாற்றின் விளைவுதான்.<br /><br /> ***<br /><br /> வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர மேற்கு தென்னிலங்கையில் தனித்துவமானதும் பிரதேச மணங்கமழ்வதுமான படைப்புகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இந்த எழுத்துக்களை உள்ளிடக்கியே ஈழத்து இலக்கியத்தை சரியாக அடையாளங்காட்ட முடியும். முற்றிலும் சிங்கள மொழிச் சூழலிலேயே உள்ள திக்குவலை, மாதத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் தமது சூழலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து வருகின்றார்கள்.<br /><br /> புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், குருணாக்கல், காலி ஆகிய பகுதிகளிலிருந்து பிரமிப்பூட்டும் படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன.<br /><br /> இவையாவும் ஒன்றாகச் சேர்ந்து வளம் பெற்றுள்ள ஈழத்து இலக்கியம், மேலும் பல சாதனைகளை ஏற்படுத்துவதற்கு இத்தகைய தொகுதிகள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும். <br /><br /><br />இந்த அறிமுகக் கட்டுரையை எழுதுவதற்கு உதவிய நூல்களும், சஞ்சிகைகளும்.<br /><br /> பேராசிரியர். க. கைலாசபதி<br />( தமிழ் நாவல் இலக்கியம், சமூகவியலும் இலக்கியமும், இலக்கியச் சிந்தனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் )<br /><br /> பேராசிரியர் கா. சிவத்தம்பி<br />( நாவலும் வாழ்க்கையும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் )<br /><br /> செம்பியன் செல்வன் - ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்<br /> சி.வி. வேலுப்பிள்ளை – நாடற்றவர்கதை<br /> டொமினிக் ஜீவா – அட்டைப்பட ஓவியங்கள் ( தொகுப்பு)<br /> சுபைர் இளங்கீரன் - தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும். ( தொகுப்பு )<br /> எஸ.எம். கார்மேகம்- கதைக்கனிகள். (தொகுப்பு)<br /> அக்கரை இலக்கியம் (1968. வாசகர் வட்டம் தொகுப்பு ந}ல்)<br /> தேசிய தமிழ் சாகித்தியவிழா 1963 – சிறப்பு மலர் <br /> ( அந்தனி ஜீவா) ‘கொழுந்து”<br /> (டொமினிக் ஜீவா) ‘மல்லிகை”<br /> ‘குன்றின் குரல்”.<br /><br /><br /><br /><a href="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002127.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002127.jpg" border="1" alt="வெள்ளிப் பாதசரம்" /></a><br /><br />வெள்ளிப் பாதசரம் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளும் அவற்றை எழுதியவர்களும்..<br /><br /><br />இலங்கையர்கோன் ( வெள்ளிப்பாதசரம், மச்சாள் )<br />சி. வைத்தியலிங்கம் ( கங்கா கீதம், பாற்கஞ்சி )<br />கனகசெந்திநாதன் ( கூத்து, வெண்சங்கு )<br />அழகு சுப்பிரமணியம் ( கணிதவியலாளன் )<br />வரதர் ( கற்பு )<br />வ.அ. இராசரத்தினம் ( தோணி, கடலின் அக்கரை போனோரே )<br />அ.ந. கந்தசாமி ( இரத்த உறவு )<br />த.ரஃபேல் ( திறமை, கட்டிலேடு கிடந்தவன் )<br />டொமினிக் ஜீவா ( பாதுகை, வாய்க்கரிசி )<br />தாளையடி சபாரத்தினம் ( ஆலமரம் )<br />சிற்பி ( கோவில்பூனை )<br />எஸ்.பொன்னுத்துரை ( தேர், ஈரா )<br />யாழ்வாணன் ( அமரத்துவம் )<br />ப.ஆப்டீன் (புதுப்பட்டிக்கிராமத்திற்கு கடைசி டிக்கட் )<br />தெளிவத்தை ஜோசப் (பாட்டி சொன்ன கதை, மீன்கள் )<br />நீர்வை பொன்னையன் ( உதயம்,சோறு )<br />பத்மா சோமந்தன் ( சருகும் தளிரும் )<br />செங்கை ஆழியான் ( கங்குமட்டை, அறுவடை )<br />சி. பன்னீர் செல்வம் ( ஜென்மபூமி )<br />க. சட்டநாதன் ( உலா )<br />யோகா பாலச்சந்திரன் ( விழுமியங்கள் )<br />அ. யேசுராசா ( வரவேற்பு....! )<br />லெ. முருகபூபதி ( திருப்பம் )<br />சந்திரா தியாகராசா ( திரிசு நிலத்து அரும்பு )<br />சாந்தன் ( தே ....... )<br />அல் அசூமத் ( விரக்தி )<br />தாமரைச் செல்வி ( பார்வை )விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-18483310.post-74325111259337542022009-01-06T15:27:00.013+05:302009-01-23T07:46:29.749+05:30அறிவியல் புனை கதைகள்பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. <br /><br /><br /><a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=1204">செங்கோ</a> அவர்கள் மொழிபெயர்த்துள்ள <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002755">சில்லு மனிதனின் புன்னகை</a> என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....<br /><br /><br />உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....<br /><br />1.தமிழில் சில வரவுகள்.<br /><br /> தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். <a href="http://www.writersujatha.com">சுஜாதா</a>வின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=313">எம்.ஜி.சுரேஷின்</a> '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=505">நெல்லை சு.முத்துவின்</a> 'நான்காம் பரிமாணம்' <a href="http://jeyamohan.in">ஜெயமோகனின்</a> 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.<br /><br /> என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் <a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=408">மணவை முஸ்தபா</a>வின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. <br /><br />2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு<br /><br /> இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் '<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002773">எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்</a>' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். <br /><br />3.அறிவியல் புனைவின் தோற்றம்<br /><br /> உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் <a href="http://www.viruba.com/final.aspx?id=VB0000158">'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை</a>, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர். <br /><br /> இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.<br /><br /> இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான <a href="http://en.wikipedia.org/wiki/Edgar_Allan_Poe">ஆலன் போ</a> ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு. <br /><br /> இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக '<a href="http://en.wikipedia.org/wiki/Jules_Verne">ஜூல் வெர்னே</a>'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''<a href="http://www.gutenberg.org/etext/3526 ">வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்</a>'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு. <br /><br /> கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம். <br /><br /> அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது. <br /><br />இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது. <br /><br />இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை. <br /><br />இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது. <br /><br /> இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர். <br /><br /> இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது. <br /><br /> இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை. <br /><br /> இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது. <br /><br /> இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர். <br /><br /> மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது. <br /><br /> இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது. <br /><br /> 1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார். <br /><br /> டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது. <br /><br /><br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7YBfGHFtv6OAcNbcXyP4DHqHW2OWKHztvg8If3vCImmtw6yx2hE-krHaQE5nEow7M1S8FEiKd_hbUUiWgoMnfcCHD00_R0ZFPbD5lnuMIQr4Sjp3zf21dY5jBBxWOtaCm6UBFOg/s1600-h/43-1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7YBfGHFtv6OAcNbcXyP4DHqHW2OWKHztvg8If3vCImmtw6yx2hE-krHaQE5nEow7M1S8FEiKd_hbUUiWgoMnfcCHD00_R0ZFPbD5lnuMIQr4Sjp3zf21dY5jBBxWOtaCm6UBFOg/s200/43-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5288129177663190162" /></a><br />இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. <br /><br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikNdFF7w6bTDaXeINQ4Ke7dy9PeZrfyNIz0MJlNbp5E9Tmov8OHXQ8QL9Uzs7byBRSa_xvym1bLr0vHN6flPFbC5MSPlTKutzHktSs_4PhWyKEQZOf1wnRURBsNTv9_tyujbEYoA/s1600-h/55-1.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikNdFF7w6bTDaXeINQ4Ke7dy9PeZrfyNIz0MJlNbp5E9Tmov8OHXQ8QL9Uzs7byBRSa_xvym1bLr0vHN6flPFbC5MSPlTKutzHktSs_4PhWyKEQZOf1wnRURBsNTv9_tyujbEYoA/s200/55-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5288129677287933090" /></a>மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது. <br /><br /> டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது. <br /><br /> ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது. <br /><br /> 'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார். <br /><br /> இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது. <br /><br /> டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார். <br /><br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCJvociQYcs6ktedA5EPsNdMJ5PPS4Xf_6K_6rSOE-LYOadXKB9qdWN0O6RnwWVXUO7blVyc3X9mMgdKz1UrdOLRiCC8dHGRLMCASsYMBj8GNrJRXrPTm7a00Gp3JvgqiKTYmqaA/s1600-h/200px-Divide_and_rule.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCJvociQYcs6ktedA5EPsNdMJ5PPS4Xf_6K_6rSOE-LYOadXKB9qdWN0O6RnwWVXUO7blVyc3X9mMgdKz1UrdOLRiCC8dHGRLMCASsYMBj8GNrJRXrPTm7a00Gp3JvgqiKTYmqaA/s200/200px-Divide_and_rule.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5288130037543733650" /></a>டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில் <br />'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது. <br /><br /> மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம். <br /><br /> *************************<br /><br />தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி. <br /><br /><strong>கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?</strong><br /><br />பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் <a href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx">2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்</a> பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.<br /><br /> *************************விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18483310.post-55099491932049591882009-01-05T12:08:00.003+05:302009-01-05T13:40:21.552+05:30ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்<a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=1174"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 353px;" src="http://www.viruba.com/Images/Authors/VictorMASE.jpg" border="0" alt="ம.சோ.விக்டர்" /></a><br /><br />மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. <br /><br />முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள <a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=536">நல்லேர் பதிப்பகம்</a> செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார். <br /><br />ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.<br /><br /><a href="http://www.hindu.com/2009/01/03/stories/2009010355020500.htm">இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி</a><br /><br />( அகர வரிசையில் புத்தகங்கள் )<br /><br /><strong>01.இசுலாம் - தமிழர் சமயம் </strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002683"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002683.jpg" border="1" alt="இசுலாம் - தமிழர் சமயம் " /></a>இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.<br /> <br /><strong>02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் </strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002671"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002671.jpg" border="1" alt="உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் " /></a>சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.<br /> <br /><strong>03.உலகளாவிய தமிழ் </strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002674"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002674.jpg" border="1" alt="உலகளாவிய தமிழ் " /></a>பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. <br /> <br /><strong>04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே</strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002672"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002672.jpg" border="1" alt="எபிரேயத்தின் தாய்மொழி தமிழே" /></a>தமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.<br /><br /><strong>05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002684"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002684.jpg" border="1" alt="எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்" /></a>எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.<br /><br /><strong>06.எல் - யா</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002673"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002673.jpg" border="0" alt="" /></a>எல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.<br /> <br /><strong>07.க</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002670"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002670.jpg" border="1" alt="க" /></a>தமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.<br /> <br /><strong>08.குமரிக் கண்டம்</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002685"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002685.jpg" border="1" alt="குமரிக் கண்டம்" /></a>கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.<br /> <br /><strong>09.சிந்துவெளி நாகரிகம்</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002681"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002681.jpg" border="1" alt="சிந்துவெளி நாகரிகம்" /></a>குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.<br /><br /><strong>10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)</strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002676"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 284px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002676.jpg" border="1" alt="தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)" /></a>தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.<br /><br /> <br /><strong>11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)</strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002677"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002677.jpg" border="1" alt="தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)" /></a>தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன. <br /><br /><strong>12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1</strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002679"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002679.jpg" border="1" alt="தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1" /></a>இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.<br /> <br /><strong>13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2</strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002680"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002680.jpg" border="1" alt="தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2" /></a>அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.<br /> <br /><strong>14.தொல்காப்பியச் சிந்தனைகள்</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002675"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 295px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002675.jpg" border="1" alt="தொல்காப்பியச் சிந்தனைகள்" /></a>தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது. <br /><br /><strong>15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை</strong><br /><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002678"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002678.jpg" border="1" alt="பஃறுளி முதல் யூப்ரடீசு வரை" /></a>குமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.<br /> <br /><strong>16.வானியலும் தமிழரும்</strong><a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002682"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002682.jpg" border="1" alt="வானியலும் தமிழரும்" /></a>வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.<br /><br /><strong>17.Tamil and Hebrew</strong><br /><a href="http://www.tholthamizh.com/enbookdetails.aspx?id=EB0000001"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 448px;" src="http://www.tholthamizh.com/Images/Books/Fpage/EB0000001.jpg" border="1" alt="Tamil and Hebrew" /></a><br /><br /><strong>18.The Babylonian Thamizh</strong><a href="http://www.tholthamizh.com/enbookdetails.aspx?id=EB0000002"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 448px;" src="http://www.tholthamizh.com/Images/Books/Fpage/EB0000002.jpg" border="1" alt="The Babylonian Thamizh" /></a> <br /><br /><strong>19.தமிழர் எண்ணியல்</strong><br /><br /><strong>20.தமிழர் சமயம்</strong>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-18483310.post-11441437282804684322008-12-31T07:20:00.000+05:302008-12-31T07:22:49.079+05:302009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு2009 சென்னைப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், இதழ்கள், செய்தி ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரங்க ( Stall ) எண்கள் அடங்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. <br /><br /><a href="http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx">http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx</a>விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18483310.post-62956644441240097492008-12-26T07:22:00.003+05:302008-12-26T07:27:04.784+05:302009 சென்னைப் புத்தகத்திருவிழா2009 சென்னைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டுப் பதிப்பகங்கள் பல் வேறு புதிய புத்தகங்களை வெளியிடவுள்ளன. <br /><br />கடந்த வருடத்தைப் போன்று, வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக சென்னைப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக வழங்கும் நோக்கில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளோம். <br /><br /><a href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx">2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்</a><br /><br />முடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18483310.post-87572831078837281652008-09-16T09:53:00.002+05:302008-09-16T10:03:43.544+05:30வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008<a href="http://www.vadakkuvaasal.com"><img id="BLOGGER_PHOTO_ID_5246470467386683602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="வடக்கு வாசல்" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimaFkjOSX6gCsporyb2Agf81eICmBQU5VsE-djnNysEf8Tv6rXOzfvGNY-9hpzUK508F8XTLnUAdwM0yWEvTfySgvQnhhFV8A-iPCvaZHsPWEaoMzLQNXKAhfFcAWIciedZeWDjA/s320/Vadakkuvaasal.jpg" border="2" /></a><br />எளிமை, தெளிவு, உறுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தலைநகரிலிருந்து உலகத்தமிழர்களுக்குகாக 2005 செப்டம்பரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழான "<a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=22">வடக்கு வாசல்</a>" நான்காம் ஆண்டு துவக்க விழாவை 2008.09.14 அன்று புது டெல்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.<br /><br />இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பின் பிரதம ஆலோசகரான ய.சு.ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.<br /><br />விழாவில் வடக்கு வாசல் இதழின் இணையதளம் <a href="http://www.vadakkuvaasal.com/">http://www.vadakkuvaasal.com</a> தொடங்கப்பட்டதுடன். "வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008" உம் வெளியிடப்பட்டது. 124 பக்கங்களுடன் கூடிய இலக்கிய மலரின் விலை In Rs 50.00 ஆகும். இச்சிறப்பு மலரை பெற விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள முகவரியில் தொடர்கு கொள்ளவும். மேலதிக தகவல்களை <a href="http://www.vadakkuvaasal.com/eidhal.php">http://www.vadakkuvaasal.com/eidhal.php</a> என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளவும்.<br /><br />Vadakku Vaasal Publications<br />5A/11032, Second Floor,<br />Gali No.9, Sat Nagar,<br />Karol Bagh<br />New Delhi-110 005.<br />Telefax- 011-25815476<br />Phone: (+91)11-65858656<br />Mobile: (+91) 9211310455<br />e-mail: <a href="mailto:vadakkuvaasal@gmail.com">vadakkuvaasal@gmail.com</a> <br /><br />வடக்கு வாசல் இதழின் முந்தைய <a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=22">வெளியீடுகளின் உள்ளடக்கம்</a> விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18483310.post-70051801914707504932008-09-06T13:41:00.005+05:302008-09-06T13:58:41.764+05:30ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு<strong>நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு</strong><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHYCM5o2JximOGwRYjK-hUWtthj_DA2GSKW5amp1eQ6OpbT438aClVtPESrdjI9crAEXsFEvg1o1qtoViUVX-vyFzlNNNR07gh36wSVDZNj1wGkhaYqp7QMdaPbwippXlVUEr5OQ/s1600-h/Jothibasu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHYCM5o2JximOGwRYjK-hUWtthj_DA2GSKW5amp1eQ6OpbT438aClVtPESrdjI9crAEXsFEvg1o1qtoViUVX-vyFzlNNNR07gh36wSVDZNj1wGkhaYqp7QMdaPbwippXlVUEr5OQ/s320/Jothibasu.jpg" border="2" alt="ஜோதிபாசு"id="BLOGGER_PHOTO_ID_5242819424135155202" /></a><br /><br /><a href="http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=201">புத்தக வெளியீடு</a> <br /><br /><strong>அழைப்பிதழில் இருந்து.....</strong><br /><br />வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புகழ்பெற்ற தலைவர்களில் இன்றும் நம்மிடையே வாழும் அரசியல் ஞானி (Stateman) ஜோதிபாசு ஒருவர் மட்டுமே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை, அதன்பின்பு காங்கிரஸின் அடக்குமுறையை, வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடி, மேற்குவங்க மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப்ப் பெற்றவர். கம்யூனிஸ்ட இயக்கத்தின் முன்னோடியாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல் வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவர். <br /><br />உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று உலக பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக 23 ஆண்டு காலம் செயற்பட்டவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறப்பு மிகு அத்தியாயமாக விளங்கும் அவரது அரசியல் வாழ்க்கை இப்போது உங்கள் முன்னே நூலாக விரிகிறது. <br /><br /><strong>முன்னுரையிலிருந்து..... </strong><br /><br />சுரண்டலற்ற, வர்க்கபேதம் அற்ற ஒரு சமுதாயத்தை, அதாவது சோஷலிஸத்தை உருவாக்குவது என்ற நோக்குடன் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தோழர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் ஓரளவு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். இந்த சுரண்டலற்ற சமூகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்போவது முதலாளித்துவம் அல்ல ; சோஷலிஸம் மட்டும்தான். எங்களது பல ஆண்டு கால அனுபவமானது நமது தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிகரமாக இருக்குமென் நம்புகிறேன். பின்னாட்களில் மிகவும் செறிவானதொரு அனுபவத்தை நாங்கள் அடைந்தோம். ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் மிகக் குறுகியதாக இருந்தபோதும் கூட, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள் ...... <br /><em><strong>- ஜோதிபாசு </strong></em><br /><br />500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ 125.00 இற்கு கிடைக்கும். <br /><br />தமிழிற்கு இந்நூலை மொழிபெயர்த்தவர் ; வீ.பா.கணேசன்<br /><br />தமிழில் : நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு<br /><br />பதிப்பகம் ; <a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90">பாரதி புத்தகாலயம் </a><br /> 421, அண்ணா சாலை,<br /> தேனாம் பேட்டை,<br /> சென்னை 600021<br /><br /> மின் அஞ்சல் ; <a href="mailto:thamizhbooks@gmail.com">thamizhbooks@gmail.com</a><br /><br /> தொலைபேசி ; 044 - 24332424விருபா - Virubahttp://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com0