1.சச்சார் குழு அறிக்கை
அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டமே கவனம் குவித்து அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சச்சார் குழுவின் ஆய்வு முறை, முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 140
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு
2.காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் 
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு
இந்து மதத்திற்கென அடிப்படையான சாத்திர நூல் எதுவும் இல்லை. இந்து மத மரபு என்பதற்காக பகுத்தறிவிற்கு பொருந்தாத எதையும் ஏற்க இயலாது. சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிடமுடியும் எனக் கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது.
இந்து சனாதனத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியில் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார் அ.மார்க்ஸ்.
காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்தியபொழுது, அதற்கு எதிராக தமிழ்ச்சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்தி எழுதிய 'தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)' இங்கே முழுமையான மீள்வெளியீடு செய்யப்படுகிறது.
எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 160
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு
2008 புத்தகத்திருவிழா - எதிர்
Posted by விருபா - Viruba | Filed under 2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்
Comments (0) | 1/12/2008 08:08:00 AM

0 Responses to "2008 புத்தகத்திருவிழா - எதிர்"
Post a Comment