- Web Portal for Tamil Books - http://www.viruba.com

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு - Web Portal for Tamil Books - http://www.viruba.com

2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்

1.இந்திய வரலாறு
இந்திய வரலாறு
இந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது. இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது.

அடிமை முறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன.

இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை... ஆகியவற்றை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது இந்நூல்.

எழுத்தாளர் : இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில் : பி.ஆர்.பரமேஸ்வரன்
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

2.குழந்தைகளை கொண்டாடுவோம்
குழந்தைகளை கொண்டாடுவோம்
இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும்.

எழுத்தாளர் : ஷ.அனமஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
பக்கம் : 158
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

3.கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்
தன் பிறப்பு தனக்குரிய சமூக வாழ்க்கை இவற்றைக் கடந்து தனக்காக தன் சொந்த முயற்சியால் இன்னொரு உலகதைதைப் படைத்துக் கொள்ள விரும்பிய ஒரு பழங்குடி இளைஞனின் கதை. புதுப்பிறப்பெடுக்க விரும்பிய அவனது முயற்சியை சமகால சமூகம் முறியடித்த கதை.

எழுத்தாளர் : மகாசுவேதா தேவி
தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி
பக்கம் : 176
விலை : 90.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

4.கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி
கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி
மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச் சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரம்ப கல்விக்கு கொடுக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் முதல்தலைமுறையினராக இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்விமுறை கல்வியின் உள்ளடக்கம் மற்றும் பயிற்று முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காணக்கூடிய மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.

எழுத்தாளர் : வசீலி சுகம்லீன்ஸ்கி
தமிழில் : முனைவர் அ.வள்ளிநாயகம் & வ.அம்பிகா
பக்கம் : 144
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

5.புதிய உலகம்
புதிய உலகம்
இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.

எழுத்தாளர் : முத்து மீனாட்சி
பக்கம் : 88
விலை : 35.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

6.மலர்ந்து மலராத
மலர்ந்து மலராத
விடலைப் பருவத்தினருக்கான வழிகாட்டி.

பழமையான கலாச்சாரத்தில் ஊறியவர்கள் இப்புத்தகத்தை அவ்வளவாக வரவேற்காமலிருக்கக் கூடும். அவர்களது எண்ணங்களை மதித்து நாம் அவர்களுக்கு கூற விரும்புவது."இப்புத்தகம் அறிவியல் ரீதியானதே. இதில் கொடுக்கப்ட்டுள்ள உண்மைகள் யாவும் இயற்கை நிகழ்வுகள் பற்றியனவே. இந்த உண்மைகளைப் பற்றி விடலைப் பருவத்தினர் ஆரோக்கியமான முறையில் அறிவது நல்லதல்லவா?, அதுமட்டுமன்று பல பாலியல் பற்றிய விவரங்களை, திரித்தும் கவர்ச்சியூட்டும் வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதத்தில் சிறு புத்தகங்களாக வெளியிட்டு பல்வேறு சமூக விரோதிகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது நடைமுறையில் இருக்கும் வருந்தத்தக்க ஒன்றாகும்."

மேற்கூறிய காரணங்களால் அறிவியல் பூர்வமாக இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து வெளியிட்டுள்ளோம்.

ஆக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழுவினர்
பக்கம் : 80
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

Labels: , ,