விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

ந.சி.கந்தையாபிள்ளை

2006-10-16 by விருபா - Viruba | 1 கருத்துகள்
ந.சி.கந்தையாபிள்ளை

அறிஞர் ந.சி.கந்தையா ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞர், தமிழிலக்கிய துறையில் சிறப்பாக செயலாற்றியவர். மிகச் சிறந்த படைப்பாளி, பல துறைகளில் நூல்களை எழுதிய தமிழர். தமிழ் இலக்கியங்களை, எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் வழங்கியது இவருடைய சிறப்பாகும். தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. மற்றைய அறிஞர்களால் எட்டப்படாத பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன.


யாழ்பாணத்திற்கு அருகில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார் ந.சி.கந்தையா. அவ்வூரிலேய கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் மலேயாவில் பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காக தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாக தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன.

இவர் தனது 74 வது வயதில் 1967 இல் இலங்கையில் காலமானார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தாம் எழுதிய “புகழ் மலர்கள்” என்னும் நூலில் தமிழறிஞர் ந.சி.கந்தையா அவர்களைப் பற்றி பின்வருமாறு பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

ந.சி.கந்தை யாஎனும் நல்லவன், வல்லவன்
தமிழ், தமி ழினவர லாறனைத் தையும்
தொல்பொருள் ஆய்வின் தொகைவகை விரிந்து
நிலநூல் கடநூல் சான்றுகள் நிறைத்தும்
தமிழ்நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும்
இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும்
பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும்,
வையம் வியக்க வரலா றெழுதினான்
பொய்அகன் றுமெய்க் கைஉ யர்ந்து
வாழ்க! ந.சி.கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
• பத்துப்பாட்டு
• பதிற்றுப்பத்து
• கலித்தொகை
• பரிபாடல்
• அகநானூறு
• புறப்பொருள் விளக்கம்
• கலிங்கத்துப் பரணி
• விறலிவிடுதூது
• பெண்கள் உலகம்
• பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
• பெண்கள் புரட்சி
• பொது அறிவு
• பொது அறிவு வினா விடை
• உலக அறிவியல் நூல்
• உங்களுக்குத் தெரியுமா
• அறிவுக் கட்டுரைகள்
• நூலகங்கள்
• அறிவு மாலை
• அறிவுரைக் கோவை
• தமிழர் சமயம் எது?
• சைவ சமய வரலாறு
• சிவன்
• இந்து சமய வரலாறு
• தமிழர் பண்பாடு
• நமது தாய்மொழி
• நமது மொழி
• நமது நாடு
• திராவிட மொழிகளும் இந்தியும்
• தமிழ்ப் பழமையும் புதுமையும்
• முச்சங்கம்
• தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
• ஆரியர் தமிழர் கலப்பு
• ஆரியத்தால் விளைந்த கேடு
• புரோகிதர் ஆட்சி
• இராமாயணம் நடந்த கதையா?
• ஆரியர் வேதங்கள்
• திராவிடம் என்றால் என்ன?
• திராவிட இந்தியா
• திராவிட நாகரிகம்
• மறைந்த நாகரிகம்
• ஆதி மனிதன்
• ஆதி உயிர்கள்
• மனிதன் எப்படித் தோன்றினான்?
• மரணத்தின் பின்
• பாம்பு வணக்கம்
• தமிழர் யார்?
• உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
• சிந்துவெளித் தமிழர்
• தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
• தமிழர் சரித்திரம்
• வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
• திருவள்ளுவர்
• திருக்குறள்
• தமிழகம்
• தமிழ் இந்தியா
• திருக்குறள் அகராதி
• தமிழ்ப் புலவர் அகராதி
• தமிழ் இலக்கிய அகராதி
• காலக்குறிப்பு அகராதி
• செந்தமிழ் அகராதி
• கலிவர் யாத்திரை
• இராபின்சன் குரூசோ
• அகத்தியர்
• தமிழ் ஆராய்ச்சி
• தமிழ் விளக்கம்
• நீதிநெறி விளக்கம்


1 கருத்துகள்:

Sivabalan சொன்னது…

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

18 அக்டோபர், 2006 20:28

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For