
புத்தக வெளியீடு
அழைப்பிதழில் இருந்து.....
வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புகழ்பெற்ற தலைவர்களில் இன்றும் நம்மிடையே வாழும் அரசியல் ஞானி (Stateman) ஜோதிபாசு ஒருவர் மட்டுமே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை, அதன்பின்பு காங்கிரஸின் அடக்குமுறையை, வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடி, மேற்குவங்க மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப்ப் பெற்றவர். கம்யூனிஸ்ட இயக்கத்தின் முன்னோடியாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல் வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவர்.
உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று உலக பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக 23 ஆண்டு காலம் செயற்பட்டவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறப்பு மிகு அத்தியாயமாக விளங்கும் அவரது அரசியல் வாழ்க்கை இப்போது உங்கள் முன்னே நூலாக விரிகிறது.
முன்னுரையிலிருந்து.....
சுரண்டலற்ற, வர்க்கபேதம் அற்ற ஒரு சமுதாயத்தை, அதாவது சோஷலிஸத்தை உருவாக்குவது என்ற நோக்குடன் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தோழர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் ஓரளவு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். இந்த சுரண்டலற்ற சமூகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்போவது முதலாளித்துவம் அல்ல ; சோஷலிஸம் மட்டும்தான். எங்களது பல ஆண்டு கால அனுபவமானது நமது தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிகரமாக இருக்குமென் நம்புகிறேன். பின்னாட்களில் மிகவும் செறிவானதொரு அனுபவத்தை நாங்கள் அடைந்தோம். ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் மிகக் குறுகியதாக இருந்தபோதும் கூட, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள் ......
- ஜோதிபாசு
500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ 125.00 இற்கு கிடைக்கும்.
தமிழிற்கு இந்நூலை மொழிபெயர்த்தவர் ; வீ.பா.கணேசன்
தமிழில் : நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு
பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்
421, அண்ணா சாலை,
தேனாம் பேட்டை,
சென்னை 600021
மின் அஞ்சல் ; thamizhbooks@gmail.com
தொலைபேசி ; 044 - 24332424
0 கருத்துகள்:
கருத்துரையிடுக