
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் தொடர்ந்து நடத்தப்பெறும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி பதினோராவது வருடமாக நடைபெறவுள்ளது. 2008 - ஜூலை 5 முதல் - ஜூலை 14 வரையில் தினமும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக நாம் ஒரு புதிய பக்கத்தை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.
கண்காட்சி அரங்கின் வரைபடமும், கலந்துகொள்ளும் நிறுவனங்களின் அரங்க எண், தொடர்பு எண்களும் அச்சு ( Print ) எடுக்கும் நிலையில் ( As a PDF file ) தரப்பட்டுள்ளதால் வாசகர்கள் தாங்கள் வாங்க நினைத்துள்ள புத்தகத்தைப் பதிப்பித்த பதிப்பகத்தை அல்லது விற்கும் புத்தக விற்பனையாளரை, அலைச்சலின்றி இலகுவில் அடைய முடியும்.
இணைப்பு : நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008
2 கருத்துகள்:
புத்தகம் பேசுது ஏப்ரல் சிறப்பு மலர் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா ? நான் Panagal Park அருகில் உள்ள New Book Lands-இல் கேட்டேன், இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் உள்ள பாரதி புத்தகாலயத்தின் விற்பனைப் பிரிவில் கேட்டுப்பார்க்கவும்.
சிராஜ் - 9842138564
கருத்துரையிடுக