விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

2008 புத்தகத்திருவிழா - KK Books

2008-01-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்
சென்னையைச் சேர்ந்த KK Books Pvt Ltd, "தென்திசை", "காதை", "படையல்" என்ற உப நிலைகளில் புதிய புத்தகப் பதிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

"தென்திசை"
அரசியல், சமூகம், வரலாறு... நூல்வரிசைகள் தென்திசையில் கிடைக்கும். தமிழக அரசியலின் மறைக்கப்பட்ட பகுதிகள் தொடர்புத்தகங்களாக வெளிவர உள்ளன.


'தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற தொகுப்பு நூல் வரலாற்று நோக்கத்தையும் தாண்டி அரசியல் உள்நோக்குடன் வெளிக் கொணரப்படுவதாக சொல்கிறார் அதன் ஆசிரியர், விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள் புரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ப.திருமா வேலன்.

1.இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?(தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 1)

1930களின் தொடக்கத்தில் சமதர்ம கொள்கைகளை பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பீதியை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சியை இந்திய மண்ணில் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பமாக இதை அரசாங்கம் கணித்தது. அதற்கு முட்டுக்கட்டை போடவும் முடக்கவும் நினைத்து. இதன்படி குடியரசு தலையங்கத்தை சட்டவிரோதமானதாக அறிவித்து பெரியாரையும், கண்ணம்மாவையும் கைது செய்தது. வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கும் அளவுக்கு எழுதிய தலையங்கத்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சப்பையான காரணம் காட்டுகிறார்களே என்று பெரியார் கிண்டலடித்த காலமே இந்நூல்.

எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 144
விலை : 60.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

2.காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும். காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்(தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 2)

இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச் சட்டை போடாத ஈ.வெ.ராமசாமியாக சில பத்திரிகைகளால் முத்திரை குத்தப்பட்டவர். இதையே காரணம் காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ் பிரமுகர்களாலேயே அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதை விமர்சித்து திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கம் அரசாங்கத்தால் ஜாமீன் கேட்கப்பட்டது. நீதிமன்றத்தின் படியேறிய அண்ணா, தனது எழுத்தில் வகுப்புவாதம் இல்லை எனத் தீர்ப்பு பெற்ற காலத்தை விவரிக்கிறது இந்நூல்.

எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 144
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

3.காந்தியார் சாந்தியடைய காந்தியார் சாந்தியடைய(தடைசெய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும் - 3)

காந்தி ஒழிக்கப்பட்ட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதிவந்தவர் பெரியார். ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே "இருந்தது ஆரிய காந்தி; இறந்தது நம் காந்தியார்" என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக, ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்பு வாதத்தை தூண்டக்கூடியதாக தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.

எழுத்தாளர் : ப.திருமா வேலன்
பக்கம் : 176
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

4.சூரிய நடனம்சூரிய நடனம்(விளிம்புநிலைப் பிரதிகள்)

எழுத்தாளர் : சா.தேவதாஸ்
பக்கம் : 192
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

5.உலக சினிமா வரலாறு உலக சினிமா வரலாறு
மௌனயுகம் : டிசம்பர் 1895 முதல் அக்டோபர் 1927 வரையிலான காலப்பகுதியில் உலக சினிமாவைப்பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் நூல்.

சினிமாவைப் பற்றிப் பல நூல்களை தமிழுக்குத் தந்திருக்கும் அஜயனின் இன்னும் ஒரு முக்கியமான நூல்தான் உங்கள் கையிலிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள, மிகமிகப் பிரயோஜனமான அற்புதமான புத்தகம்.
- பாலு மகேந்திரா -

எழுத்தாளர் : அஜயன் பாலா
பக்கம் : 176
விலை : 150.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

6.சந்திப்பு சந்திப்பு
அரசியல் அரங்கம் விசித்திரங்களின் வேதாள உலகம். அங்கே சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்ய நிருபர்கள்தான் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த உலகின் இரும்புக் கதவை அன்பின் சாவியால் திறந்து புதிர்களையெல்லாம் பூங்கொத்தாக வாங்கி வந்தவர் மைபா. வாடாத முகம், வீழாத குணம் அவர் வழக்கம். அத்தனை தலைவர்களும் மைபா பேனாவுக்கு பழக்கம்.

எழுத்தாளர் : மைபா (மை.பா.நாராயணன்)
பக்கம் : 128
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

7.பறவையியல் அறிஞர் சாலிம் அலி பறவையியல் அறிஞர் சாலிம் அலி
சில இளம் இயற்கை விரும்பிகளாலும், முதிர்ந்த இயற்கை நேயர்களாலும் மட்டுமே உணரப்பட்ட சாலிம் அலியை,பொதுப்பரப்பிற்கு விரிவுபடுத்தும் நோக்குடன், அவரைப்போலவே காணுயிர்களோடு ஓருயிராக வாழ்ந்துவரும் ச.முகமது அலி செய்துள்ள அறிமுகம் - தமிழ்ச்சூழலில் இயற்கையியலை வளர்த்தெடுக்கும்.

எழுத்தாளர் : ச.முகமது அலி
பக்கம் : 80
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

8.அரவானிகள் சமூக வரைவியல் அரவாணிகள் சமூக வரைவியல்
பொதுவெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப்பிறந்து உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வை உணர்ந்து பெண்ணாகிப் போன அரவானிகளை அடையாளப்படுத்துகிறார் பிரியா பாபு.

எழுத்தாளர் : பிரியா பாபு
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

"படையல்"
ஆன்மீகம், ஓவியம், கலைகள் தொடர்பான புத்தகங்கள் "படையல்" மூலம் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆளுமைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.


9.இஸ்லாமிய ஃபக்கீர்கள்இஸலாமிய ஃபக்கீர்கள்
தெருக்களில் மக்களிடத்து இரவல் கேட்டு வாங்கி உண்ணுகின்ற இரவலர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களுள் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்கள் சற்று வேறுபட்ட, தம் சமயம் சார்ந்த நீதிக் கருத்துக்களை மக்களுக்கு நினைவூட்டும் பொருட்டு தெருக்களில் பாடிச் சென்று இரப்பவர்களாக இருக்கிறார்கள். தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை, செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு, எடுத்துச் செல்வதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ஃபக்கீர் பாடல்கள் அமையும். அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ரஹ்மத்துல்லாவின் உழைப்பு நீக்குகிறது.

எழுத்தாளர் : வ.ரஹ்மத்துல்லா
பக்கம் : 144
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : படையல் - KK Books Pvt Ltd

"காதை"
தமிழக எழுத்துச் சூழலை ரம்யமானதாக்கும் படைப்பாளிகளின் புதிய படைப்புகள் "காதை"யில் கிடைக்கும். பெண் எழுத்துக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

10.ஒளிரும் நீரூற்று ஒளிரும் நீரூற்று
படைப்பாக்கத்தின் ஒரு ஆகச்சிறிய கணத்தில் அனுபவம் தன்னைத் தானே புனைந்துகொள்ளும் கவிதையில். கவிதையின் ஒரு வரியாய், ஒரு பொறியாய், அல்லது முழுக்கவிதையாய், கனவுக்குச் சட்டகங்கள் ( Frame of Reference) இல்லாததுபோல் கவிதையும் சட்டக வரையறைக்கு உட்படாதது. அது ஒரு கணத்திலிருந்து மூன்று காலங்களுக்கும், ஒரு தளத்திலிருந்து வெளியின் எந்தத் திக்குக்கும் பயணிக்கும், அழைத்துச் செல்லும். அப்படி அழைத்துப் போகின்ற கவிதைகளாக தாரா கணேசனின் கவிதைகள் அமைந்துள்ளன.
-கலாப்ரியா

எழுத்தாளர் : தாரா கணேசன்
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

11.ஆதிராவின் அம்மாவை நான் தான் ஏன் காதலித்தேனோ? ஆதிராவின் அம்மாவை நான் தான் ஏன் காதலித்தேனோ?
எங்கு இழந்தோமோ அல்லது எங்கு அவமானப்படுத்தப்பட்டோமோ அங்கிருந்தே துவங்கும் கவிதைகள் காலபைரவனுடையது. தொன்மையான உறவின் வழியாக ஏற்படும் சங்கடங்களையும் துக்கங்களையும் நேரடியாக அர்த்தப்படுத்த முடியாத தொனியில் எழுதப்பட்டிருப்பவை. பொதுப்பார்வைக்கு தனிமையின் குரலாகக் கூடியதும், நுட்பமான வழியில் நாம் எளிமைப்படுத்தவோ மறுக்கவோ முடியாத ஒரு கலைஞனின் பதிவாக காலபைரவனின் கவிதைகள் இருப்பது அவருடைய படைப்பின் உச்ச நிலையாகக் கருதமுடிகிறது.
-கண்டராதித்தன்

எழுத்தாளர் : காலபைரவன்
பக்கம் : 64
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

12.ஒரு அமர கதை - ஸ்ரீகுமார் ஒரு அமர கதை.... நான் அறிந்தவரை நிகழ்கால வாழ்க்கையை தாந்த்ரீக மரபுடன் தொடர்புபடுத்தி இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் தாந்த்ரீக நாவல் என்று ஸ்ரீகுமாரின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்.
-மலையாள முன்னுரையில் ராமச்சந்திரன்

தமிழில் : குளச்சல் யூசுப்
பக்கம் : 256
விலை : 140.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

13.கருவறை - எம்.சுகுமாரன் கருவறை
கருவறை, இறுதிச் சடங்கு ஆகிய இரண்டு குறுநாவல்களிலும் கேரள கம்யூனிஸ்ட் கட்சி குறித்து எம்.சுகுமாரன், சில கனத்த விமர்சனங்களை எழுப்புகிறார். இவர் கம்யூனிசத்திற்கு எதிரி அல்ல. அதற்கு எதிரான கட்சிகளின் அனுதாபியோ, ஆதரவாளரோ அல்ல. கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு கண்மூடித்தனமான விமர்சனங்களை முன்வைக்கவும் இல்லை. இதை முழுக்க முழுக்க கற்பனை என்றோ, முழுக்க யதார்த்த வாழ்வியல் மற்றும் நடைமுறை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கற்பனையும் யதார்த்தமும் பிரித்தறிய முடியாத விதத்தில் ஒன்றிக் கலந்திருப்பதாலேயே இந்தக் குறுநாவல்கள் தனித்தன்மை பெறுகிறது.

தமிழில் : சிவன்
பக்கம் : 160
விலை : 100.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

14.இருள்வ மௌத்திகம் இருள்வ மௌத்திகம்

எழுத்தாளர் : கோணங்கி
பக்கம் : 383
விலை : 212.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

15.கனவைப் போலொரு மரணம் கனவைப் போலொரு மரணம்
உறவுகளின் இடைவெளியில் நழுவியோடும் புரிதலின்மையை கடக்கும் முயற்சியாய் மனிதர்கள் மீது துளிர்ந்துகொண்டேயிருக்கும் அன்பில் செழிக்கின்றன் அ.வெண்ணிலாவின் கவிதைகள். முரண்களையும், சிக்கல்களையும் தீரா அன்பில் உயிர்ப்பித்துவிட முடியும் என இடைவிடாமல் வலியோடு சொல்லிக்கொண்டேயிருக்கின்றன இவரது கவிதைகள்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் :
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

16.ஆலமர இடையழகு ஆலமர இடையழகு

எழுத்தாளர் : எழில்வரதன்
பக்கம் :
விலை :
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

17.என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்
பனிக்குடம் உடைவதைப்போல உணர்ச்சிகளின் கருவறைக்குள்ளிருந்து ஈரமாய் குதிக்கின்றன கலைஇலக்கியாவின் கவிதைகள். ரசமிழக்காத காதலின் நிலைக்கண்ணாடியில் கண்ணீரும் புன்னகையுமாய் மாறிமாறி முகம் காட்டுகின்றன சொற்கள். யதார்த்தமும் கவிதையும் ஆடும் கண்ணாமூச்சியில் காலம் குளிர்கின்றது.

எழுத்தாளர் : கலை இலக்கியா
பக்கம் :96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : காதை - KK Books Pvt Ltd

18.பாலியல்
பாலியல்
சாருநிவேதிதா - நளினி ஜமீலா ஆகிய இருவரும் உரையாடியவை நூல் வடிவில்.

உடலுறவு மட்டும் செக்ஸா?
மீசை இருப்பவனெல்லாம் ஆணா?
பெண்ணுக்கு ஸ்கலிதம் உண்டா?
பாலியல் தொழிலை ஒழிக்கக்கூடாதா?
பிம்ப்புகள் செய்வது சமூக சேவையா?

கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்.

எழுத்து வடிவம் : டி.அருள்எழிலன்
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

19.அரசியல்
அரசியல்
நல்லகண்ணு - அ.மார்க்ஸ் ஆகிய இருவரும் அரசியல் தளத்தில் ஆக்கபூர்வமான விடயங்களில் உரையாடியதை நூல்

வடிவில் பதிவு செய்துள்ளார் திருமா வேலன்.

கட்சி தேவையா?
தமிழ்த் தேசியம் ஆபத்தானதா?
ஈழத்தில் நடப்பது மதப்பிரச்சனையா?
அணு ஆற்றல் இல்லாமல் இருக்க முடியாதா?
கட்சித் தலைமை மையப்படுத்துவதே வீழ்ச்சியா?
பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்டுக்கள் எதிரியா?

கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்

எழுத்து வடிவம் : ப.திருமா வேலன்
பக்கம் : 88
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : தென்திசை - KK Books Pvt Ltd

2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி, புதிய புத்தகம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For