விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

புது தில்லியிலிருந்து வெளிவரும் இதழ் வடக்குவாசல்

2006-07-20 by விருபா - Viruba | 0 கருத்துகள்
வடக்கு வாசல்எளிமை - தெளிவு - உறுதி என்பவற்றை தாரக மந்திரமாகக்கொண்டு, இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு என்ற வாசகங்களுடன் புது தில்லியிலிருந்து வெளிவரும் இதழ் வடக்குவாசல் ஆகும்.

புது தில்லி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த பி.ஏ.கிருஷ்ணன், இரா.முகுந்தன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி போன்றோருடைய பேராதரவுடன் இவ்விதழ் வெளி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வடக்குவாசல் பதிப்பகம் மூலம் எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் தொகுத்த ஜுகல்பந்தி என்ற புத்தகத்தை வெளியிட்டதன்மூலம் பதிப்பகத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்கள்.

இவ்விதழின் ஆசிரியராக யதார்த்தா கி.பென்னேஸ்வரன் உள்ளார்.


செங்கை ஆழியானின் புதிய புத்தகம்

by விருபா - Viruba | 0 கருத்துகள்
செங்கை ஆழியானின் ஆயிரமாயிரம் ஆண்டுகள்



செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற தலைப்பில் புதிய புத்தகமாக இந்த விரைவில் வெளிரவுள்ளது.

இதில் இடம் பெறும் குறுநாவல்கள், செங்கை ஆழியான்

"பழைய வானத்தின் கீழே"
"முதல் தவறு"
"ஒரு பௌர்ணமிக்காலம்"
"நிலமகளைத் தேடி..."
"யொகாறா"
"அக்கினிக் குஞ்சு"
"சாம்பவி" (கணையாழி)
"யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று" (கணையாழி)
"மீண்டும் ஒரு சீதை" (கலைமகள்)
"வரமும் தவமும்"


சிற்றிதழ் தாமரை

2006-07-18 by விருபா - Viruba | 1 கருத்துகள்
தாமரை



சென்னை தியாகராய நகரில் இருந்து வெளிவரும் இதழ் தாமரை.

தற்சமயம் சி.மகேந்திரன் அவர்கள் இதன் ஆசிரியராக உள்ளார்.

இவ்விதழ் 1957 இல் ப.ஜீவானந்தம் அவர்களால் ஆரம்பிக்ப்பட்டது.


இரண்டு சிற்றிதழ்கள்

2006-07-17 by விருபா - Viruba | 0 கருத்துகள்
ஏழைதாசன்




புதுக்கோட்டையிலிருந்து வெளிவரும் மாத இதழ் ஏழைதாசன்

இதன் ஆசிரியர் : எஸ்.விஜயகுமார்




முங்காரி



கோவை கருமலை செட்டிப்பாளையத்திலிருந்து வெளிவரும் மாத இதழ் முங்காரி

இதன் ஆசிரியர் : குன்றம் மு.இராமரத்நம்


Australia வில் வெளிவரும் தமிழ் இதழ் கலப்பை

2006-07-15 by விருபா - Viruba | 0 கருத்துகள்
கலப்பை
"மனித மனதை உழுகின்ற கலப்பை உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்" என்ற வாசகத்துடன் Australia வின் Sydny நகரில் இருந்து வெளிவரும் இதழ் கலப்பை.

இது ஒரு காலாண்டிதழ் ஆகும்.

இவ்விதழ் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவருகிறது.


இரு சிற்றிதழ்கள்

2006-07-10 by விருபா - Viruba | 0 கருத்துகள்
கங்கா காவேரி




சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் பல்சுவை மாத இதழ் கங்கா காவேரி.

இதன் ஆசிரியர் A.ராஜாராம்









பிரபஞ்ச அமைதி சேவா ஆஸ்ரமம்


பெரம்பூரிலிருந்து வெளிவரும் ஆன்மீக மாத இதழ் பிரபஞ்ச அமைதி சேவா ஆஸ்ரமம் ஆகும்.

சித்தர்கள், மகான்கள், ஞானிகள் கருத்துக்களை வெளியிடும் இதழாக இது உள்ளது.

இதன் ஆசிரியர்
யோகி வடிவானந்தா


இலண்டனிலிருத்து வெளிவரும் இதழ் - சுடரொளி

2006-07-09 by விருபா - Viruba | 0 கருத்துகள்
சுடரொளி

உலகளாவிய தமிழர்களின் மேம்பாட்டிற்கான பல தகவல்களையும், பரபரப்புச் செய்திகளையும் தாங்கி இலண்டனில் இருந்து வெளிவரும் இருமாத இதழ் சுடரொளி.

இதன் ஆசிரியர்களாக ஐ.தி.சம்பந்தன், பொன்.பாலசுந்தரம் உள்ளனர்.


புத்தகங்களுக்கான வாசகர்களின் கருத்துக்கள்.

2006-07-08 by விருபா - Viruba | 0 கருத்துகள்
விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு வாசகர்களின் கருத்துக்களையும் பதிவு செய்வதற்கான பகுதி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வாசகர் தான் படித்த புத்தகத்திற்கு 1500 எழுத்துக்களுக்கு உட்பட்டு தனது கருத்தை பதிவு செய்யலாம். "தி" என்பது இரண்டு எழுத்தாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

விருபா தளத்தில் பதிவு செய்துள்ள வாசகர்கள் மட்டுமே இங்கு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும்.

வாசகர் கருத்துக்கள் ஆபாசமாகவும், சமூக விரோத சொற்களையும் கொண்டிருப்பின் அவை பொதுவில் இணைக்கப்படமாட்டாது.

மேலும் ஒரு வாசகருடை கருத்து சமூகத்திற்கு பாதகமாகவும், தனிமனித அல்லது ஒரு குழுவின் மீதான தாக்குதலான கருத்து என்றும் மற்றைய வாசகர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுமிடத்து பிரசுரிக்கப்பட்ட வாசகர் கருத்து நீக்கப்படும்.

ஆரோக்கியமான, சமூகம் ஏற்றுக் கொள்கிற கருத்துக்கள் மட்டுமே விருபா தளத்தில் இணைக்கப்படும்.

விருபா தள மத்திய கட்டுப்பாட்டு பிரிவின் முடிவே இறுதியானது.

புத்தகத்திற்கான வாசகர் கருத்து காண்பிக்கப்படும் இடத்தில்,
  • வாசகருடைய பெயர்
  • வாசகருடைய மின்-அஞ்சல் முகவரி
  • வாசகருடைய வலைப்பதிவு

போன்ற விபரங்கள் சேர்த்தே காண்பிக்கப்படும்.

ஒரு வாசகர் எத்தனை புத்தகத்திற்கும் தனது கருத்தைப் பதிவு செய்யலாம், ஆனால் ஒரே புத்தகத்திற்கு இரண்டாம் முறை கருத்து பதிவு செய்ய அனுமதி இல்லை.


"எஸ்.பொ"வின் இரண்டு புத்தகங்கள்

2006-07-07 by விருபா - Viruba | 0 கருத்துகள்




"எஸ்.பொ" என்று அன்புடனும் நேசத்துடனும் அழைக்கப்படும் இலக்கியப் போராளி எஸ்.பொன்னுத்துரை அவர்களின் இரண்டு புத்தகங்கள் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளன.







அங்கதம் இழையோடும் புனைவு

"?" என்பதுதான் ஒரு நூலின் பெயர் (அங்கதம் இழையோடும் புனைவு). அதற்குள் பந்த நூல் மூலமும் நச்சாதார்க்குமினியார் உரையும் இணைந்துள்ளது.

இது தமிழ் இலக்கியத்திற்கு, படைப்பிலக்கியத்திலே புதிய வடிவங்களையும், பரிணாமங்களையும் தரும் எஸ்.பொ தந்துள்ள இன்னொரு புதிய வடிவம்.

இந்த நூல் 31.10.1972 இல் இலங்கையில் இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் அவர்களின் அரசு வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்டது.

மீண்டும் இருபத்தியிரண்டு வருடங்களின் பின்னர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் காந்தாளகம் மூலம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்நூல் சென்னையில் வெளிவந்த பொழுதுதான் தமிழ்நாட்டில் பல பேராசிரியர்களின் பார்வையில் பட்டு பாராட்டைப் பெற்றது.

தமிழக் கவிதைகளை மக்கள் மயப்படுத்திய த.பழமலய், அசோகமித்திரன் மற்றும் தமிழ்ப் பல்கலைக் மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசன் ஆகியோர் இந்நூலைப் பாராட்டியுள்ளார்கள்.

144 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மித்ர வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது.




ஈழத் தமிழ் இனம் அடிமையான வரலாற்றையும் அதன் எதிர்வினையான போராட்ட எழுச்சியையும் சொல்லும் முதல் நாடகம்

இரண்டாவது நூல் "ஈடு"

இதனை எஸ்.பொ வுடன் சேர்ந்து அ.சந்திரஹாசன் எழுதியுள்ளார்.

ஈடு - ஈழத் தமிழ் இனம் அடிமையான வரலாற்றையும் அதன் எதிர்வினையான போராட்ட எழுச்சியையும் சொல்லும் முதல் நாடகம்.

"ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்றை, கலாச்சாரத்தை, அதன் உன்னதத்தை, அதன் அவலத்தை நாடகமாக்கியுள்ளது ஈடு. சந்தர்ப்பவாத அரசியலின் அவலங்கள், சாணக்கிய அரசியலின் கொடுமைகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஏக்கங்கள் ஆகியவற்றை ஈடு வரலாற்று வரிசையில் முன் வைக்கிறது. உலகளாவிய துயர்கண்ட ஈழத்தமிழர்களின் உண்மை வரலாற்றை எள்ளலும் துள்ளலுமாக ஈடு முன்வைக்கும் படைப்புப் பாங்கம் உயர் ரசாநுபாவத்திற்குரியது" என்கிறார் முன்னுரையில் சித்தன்

இந்நூல் புலம்பெயர்ந்த நாடுகளிலே அந்நிய கலாச்சாரத்தின் மத்தியில் தமிழ் நாடகக் கலையை முன்னெடுத்து வாழும் தமிழ் உணர்வாளர், உறவாளர், உபாசகர் ஆகிய இனியவர்களுக்கு படையல் செய்யப்பட்டுள்ளது.

19.12.1992 இல் சிடனி மக்குவாரி பல்கலைக்கழக அரங்கில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்ட நாடகமாகும்.இதில் சிட்னியில் வாழும் தமிழர்கள் நாடக மாந்தர்களாக தோன்றியுள்ளார்கள். செந்தமிழ்க் கலா மன்றத்தின் ச.தேவராசா, சிவகுரு மனோகரன் குறிப்பிடக்கூடியவர்கள்.

96 பக்கங்களைக் கொண்ட இந்நூலும் விரைவில் வெளிவரவுள்ளது


இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For